டி ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு உருக்கமான அறிக்கை

டி ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு உருக்கமான அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி ராஜேந்தர்.

அரசியலில் ஒரு கலக்கு கலக்கியவர். எம்எல்ஏ ஆகவும் பதவி வகித்துள்ளார்.

தற்போதும் ஒரு கட்சிக்கும் தலைவராக இருக்கிறார். டி ராஜேந்தர் தனது அடுக்கு மொழி எதுகை மோனை வசனத்திற்கு புகழ் பெற்றவர்.

இவர் உயிருள்ளவரை உஷா, என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சபதம், காதல் அழிவதில்லை என பல படங்களை இயக்கியுள்ளார்.

ஆனால் எந்த படத்திலும் இவர் நாயகியை தொடாமல் நடிப்பார். இவரைப் போன்ற ஒரு திரைக் கலைஞனை உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது.

இவர் இயக்கிய படங்களின் மூலம்தான் இவரது மகன் சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பின்னர் சிம்புவை இவரே கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்தினார்.

1980ல் டிஆர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

1980களில் டி. ராஜேந்தர் அறிமுகப்படுத்திய அமலா, நளினி, ஜோதி, ஜீவிதா மற்றும் மும்தாஜ் உட்பட பல நடிகைகள் பிற்காலத்தில் வெற்றி நாயகிகளாக வலம் வந்தனர்.

‘உயிருள்ளவரை உஷா’ படத்தில் நடித்த நடிகை உஷாவை கரம் பிடித்து தன் மனைவியாக்கினார்.

இவர்களுக்கு சிலம்பரசன், குறளரசன், இலக்கியா ஆகிய இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் தற்போது சிம்புக்கு மட்டும்தான் இதுவரை திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் டி ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிம்பு டாடி டி-ராஜேந்தர் எப்படி இருக்கிறார்.?

எனவே சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு.

அதில்…

“எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிது இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயர் சிகிச்சை தர வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

அவர் உடல்நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்.

அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Simbu’s heartfelt statement on T Rajender health

கணவன் மனைவியா ஒற்றுமையா வாழனும்.; விக்னேஷ் சிவன் குலதெய்வ கோயிலில் நயன்தாரா வேண்டுதல்

கணவன் மனைவியா ஒற்றுமையா வாழனும்.; விக்னேஷ் சிவன் குலதெய்வ கோயிலில் நயன்தாரா வேண்டுதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

2015ல் வெளியான இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க அனிருத் இசையமைத்து இருந்தார்.

இந்த பட சூட்டிங் சமயத்தின் போதே நயன் & விக்கி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர்.

இருவரும் எங்கும் சென்றாலும் இணைந்தே சென்றனர். சமூக வலைத்தளங்களில் ஜோடியாக போட்டோ போட்டு அசத்துவார்கள்.

இருவரும் அடிக்கடி அனைத்து மத வழிப்பாட்டு தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

அண்மைக்காலமாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி பல படங்களை தயாரித்து வருகின்றனர்.

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இத்தனை படங்களா? பிசியாகும் புரொடியூசர் நயன்தாரா

விரைவில் திருமணம் நடைபெறப் போகிறது என்ற செய்தி நீண்ட நாட்களாகவே சொல்லப்பட்டது.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.

இந்த படத்திற்கு பின்பு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று பரவலாக பேசப்பட்டது.

கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு மேலாக இவர்கள் காதலித்துக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு எப்போது திருமணமாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறும் என்று தகவல் வெளியானது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் எங்கே.? எப்போ.? நடக்கப் போகுது தெரியுமா.?

ஆனால் அவர்கள் இருவரும் இது குறித்து இதுவரை பேசவில்லை.

இந்த நிலையில் விக்னேஷ் சிவனின் குலத்தெய்வ கோயிலில் நயன்தாரா வழிபாடு செய்துள்ளார்.

தஞ்சாவூர்- கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள மேலவழுத்தூர் கிராமத்தில், ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோயில் உள்ளது.

இந்த கோயில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலத்தெய்வக் கோயில் எனச் சொல்லப்படுகிறது.

இந்த கோயிலில் இருவரும் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

கணவன், மனைவி ஒற்றுமையாக வாழ வழிப்பாடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இதனையடுத்து கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயிலிலும் இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.

Nayanthara and Vignesh Shivan visiting their ancestral temple in Tamil Nadu

விஜய் தேவரகொண்டா – சமந்தா பட சூட்டிங்கில் விபத்து.; நடந்தது என்ன.?

விஜய் தேவரகொண்டா – சமந்தா பட சூட்டிங்கில் விபத்து.; நடந்தது என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா நிர்வனா இயக்கும் ‘குஷி’ என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா.

இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

Samantha latest photos

அங்கு ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

அப்போது எதிர்பாரா விதமாக ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் விஜய் தேவரகொண்டா & சமந்தா ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

Vijay Deverakonda latest photos

இதனால் சூட்டிங் நிறுத்தப்படும் என யூனிட்டே எதிர்பார்த்த நிலையில் உடனே முதலுதவி சிகிச்சை பெற்று மீண்டும் விஜய் தேவர்கொண்டா- சமந்தா இருவரும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டனர்.

Vijay Deverakonda and Samantha injured in car accident during movie shoot

சாமி ஏதாவது வேலை இருக்குதா.? ரஜினி கேட்ட கேள்விக்கு இளையராஜா என்ன செய்தார்.?

சாமி ஏதாவது வேலை இருக்குதா.? ரஜினி கேட்ட கேள்விக்கு இளையராஜா என்ன செய்தார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார்.

இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர்.

அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரிக்க..

ரஜினிகாந்த் மகள் இயக்கும் படத்திற்கு இளையராஜா இசை..?

‘‘என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துக் கொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார்.

‘‘அப்படியா..நானும் அங்கே வருகிறேன்’’ என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார்.

ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த்.

ரஜினி படத்தை பகிர்ந்த இசைஞானி…; இளையராஜா படத்தை பகிர்ந்த கங்கை அமரன்

இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இளையராஜாவிடம் இருந்து விடைபெற்றார்

What did Ilayaraja do to the question asked by Rajini?

ஹைதராபாத்தில் இருந்து சென்னை பறந்து வந்த விஜய்..; வைரலாகும் படம்!

ஹைதராபாத்தில் இருந்து சென்னை பறந்து வந்த விஜய்..; வைரலாகும் படம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தை இயக்கி வருகிறார் தெலுங்கு சினிமா இயக்குநர் வம்சி.

இப்பட பூஜையின் போது நடிகர் விஜய்யுடன் இப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் இணைந்து நடிகர் ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.

இப்படம் மூலம் முதல் முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் தமன்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

தளபதிக்கு ஏஜ் எப்டி ரிவர்ஸ் கியரில் போகுது.? வைரலாகும் நியூ லுக்.; விஜய் பிறந்தநாளில் ‘தளபதி 66’ ட்ரீட்.

அதன் பின்னர் கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

அப்போதே விஜய் உடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.

இந்த நிலையில் விறுவிறுப்பாக ஐதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பபு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் சென்னை திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் பிறந்தநாளில் தளபதி 66 – 67 ட்ரீட்க்கு ரெடியா இருங்க

சென்னை ஏர்போட்டில் மாஸ்க் அணிந்தபடி விஜய் இருக்கும் போட்டோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

எனவே ‘தளபதி 66’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Thalapathy Vijay latest pic goes viral

வாடிபோகும் ‘வாடிவாசல்;.; ‘பாகுபலி’ & ‘கேஜிஎஃப்’ பாணியில் சூர்யா – சிவா படம்

வாடிபோகும் ‘வாடிவாசல்;.; ‘பாகுபலி’ & ‘கேஜிஎஃப்’ பாணியில் சூர்யா – சிவா படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களை வரிசையாக இயக்கினார் இயக்குனர் சிவா.

இதில் விஸ்வாசம் படமும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.

இதனையடுத்து ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் சிவா.

சிங்கம் சூர்யா-சிறுத்தை சிவா இணையும் பட முக்கிய அறிவிப்பு

இதற்கு முன்பே நடிகர் சூர்யா படத்தை சிவா இயக்க ஒப்புக் கொண்டாலும் ரஜினிக்காக தங்கள் படத்தை ஒத்தி வைத்தனர்.

எனவே தற்போது சூர்யா மற்றும் சிவா இணையவுள்ள படம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படம் பீரியட் கதை என கூறப்படுகிறது.

இந்த படம் பாகுபலி, கேஜிஎஃப் போல இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாம்.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஜூலை / ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் சூர்யா & சிவாவுடன் இணையும் காஜல் அகர்வால்

இதனிடையில் பாலா இயக்கும் ஒரு படத்திலும் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் மற்றொரு படத்திலும் நடிக்கவுள்ளார் சூர்யா.

வெற்றிமாறன் சூர்யா இணையும் ‘வாடிவாசல்’ படத்தின் ப்ரீ புரொடக்சன் ஒரு பக்கம் நடைபெற்று வந்த்தாலும் இதன் சூட்டிங் தொடங்க தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.

மேலும் சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ பட பணிகளில் வெற்றிமாறன் பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya – Siva film will be like Baahubali and KGF standard

More Articles
Follows