தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி ராஜேந்தர்.
அரசியலில் ஒரு கலக்கு கலக்கியவர். எம்எல்ஏ ஆகவும் பதவி வகித்துள்ளார்.
தற்போதும் ஒரு கட்சிக்கும் தலைவராக இருக்கிறார். டி ராஜேந்தர் தனது அடுக்கு மொழி எதுகை மோனை வசனத்திற்கு புகழ் பெற்றவர்.
இவர் உயிருள்ளவரை உஷா, என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சபதம், காதல் அழிவதில்லை என பல படங்களை இயக்கியுள்ளார்.
ஆனால் எந்த படத்திலும் இவர் நாயகியை தொடாமல் நடிப்பார். இவரைப் போன்ற ஒரு திரைக் கலைஞனை உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது.
இவர் இயக்கிய படங்களின் மூலம்தான் இவரது மகன் சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின்னர் சிம்புவை இவரே கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்தினார்.
1980ல் டிஆர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
1980களில் டி. ராஜேந்தர் அறிமுகப்படுத்திய அமலா, நளினி, ஜோதி, ஜீவிதா மற்றும் மும்தாஜ் உட்பட பல நடிகைகள் பிற்காலத்தில் வெற்றி நாயகிகளாக வலம் வந்தனர்.
‘உயிருள்ளவரை உஷா’ படத்தில் நடித்த நடிகை உஷாவை கரம் பிடித்து தன் மனைவியாக்கினார்.
இவர்களுக்கு சிலம்பரசன், குறளரசன், இலக்கியா ஆகிய இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் தற்போது சிம்புக்கு மட்டும்தான் இதுவரை திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் டி ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிம்பு டாடி டி-ராஜேந்தர் எப்படி இருக்கிறார்.?
எனவே சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு.
அதில்…
“எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிது இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயர் சிகிச்சை தர வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.
அவர் உடல்நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்.
அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Simbu’s heartfelt statement on T Rajender health