இருள் நிறைந்த இரவுகளுக்குப் பிறகு பிரகாசமான ஒளி..; இறைவனுக்கு நன்றி சொன்ன சிம்பு

இருள் நிறைந்த இரவுகளுக்குப் பிறகு பிரகாசமான ஒளி..; இறைவனுக்கு நன்றி சொன்ன சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மஹா, மாநாடு ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளன.

தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.

இதில் வெந்து தணிந்தது காடு படத்தை கெளதம் மேனன் இயக்க வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்நிலையில் தற்போது தனது புதிய படமொன்றை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் சிம்பு, ”எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், இருண்ட இரவுகளுக்குப் பிறகும் பிரகாசமான ஒளி இருக்கிறது. நன்றி இறைவா” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இத்துடன் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாகவும் சிம்புவே தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Silambarasan TR’s Vendhu Thanindhathu Kaadu second schedule begins.

விநாயகர் சதுர்த்திக்கு ஜெயலலிதா தரிசனம்..; ஓடிடி-க்கு 1 தியேட்டருக்கு 1.. விஜய்சேதுபதி முடிவால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிருப்தி

விநாயகர் சதுர்த்திக்கு ஜெயலலிதா தரிசனம்..; ஓடிடி-க்கு 1 தியேட்டருக்கு 1.. விஜய்சேதுபதி முடிவால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிருப்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள் தற்போது தமிழக அரசு உத்தரவின்படி திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தியேட்டர்கள், 50% இருக்கையுடன் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனவே தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றனர்.

ஹர்பஜன்சிங் நடித்துள்ள ‘பிரண்ட்ஷிப்’ மற்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘கோடியில் ஒருவன்’ படங்களின் சென்சார் சான்றிதழ் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு படத்திற்கும் யு/ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.

மேலும் ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘லாபம்’ படம் செப்டம்பர் 9 அன்றும், விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள ‘தலைவி’ படமும் செப்டம்பர் 10ல் வெளியாகிறது.

தலைவி படம் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர மேலும் 3-4 படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி, டாப்சி பண்ணு நடித்த அனபெல் சேதுபதி படம், ‛டிஸ்னி ஹாட்ஸ்டாரில்’ செப்டம்பர் 17ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர்கள் திறந்தும் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டதால் இது தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Theatre owners dissappoints with Vijay Sethupathi’s decision

முதன்முதலாக தமிழில் ஆளுநர் உரை.. உழவர் சந்தை.. மீண்டும் ரேசன் கடை.. காரைக்காலில் விவசாய கிணறுகள்..; புதுச்சேரி பட்ஜெட் ஹைலைட்ஸ்

முதன்முதலாக தமிழில் ஆளுநர் உரை.. உழவர் சந்தை.. மீண்டும் ரேசன் கடை.. காரைக்காலில் விவசாய கிணறுகள்..; புதுச்சேரி பட்ஜெட் ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.10,100 கோடிக்குத் தயார் செய்து அனுப்பப்பட்ட திட்ட வரையறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

எனவே அதன் அடிப்படையில் புதுச்சேரியின் முதல் அமைச்சரும், நிதித்துறை அமைச்சருமான என் ரங்கசாமி 2020-2021 ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை கவர்னர் உரையுடன் தொடங்கிது.

புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முதலாக கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் கவர்னர் உரையை வாசித்தார்.

இன்றைய பட்ஜெட் சிறப்பம்சங்கள்..:

புதுச்சேரியில் 9,924 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

இதில் பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது.

இந்த நிதிநிலை அறிக்கையில், ரூ.2140 கோடி சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கும், ரூ.1715 கோடி கடன் மற்றும் வட்டிக்கும், ரூ.1591 கோடி மின்சாரம் வாங்கவும், ரூ.1290 கோடி முதியோர் ஓய்வூதியத்திற்கும், ரூ.1243 கோடி பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டத்தைப் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உயர்த்த பிரதான் மந்திர் திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் கட்டப்பபடும்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்படும்.

காரைக்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 60 லட்சம் ரூபாய் செலவில் 6 புதிய கிணறுகள் அமைக்க உள்ளது.

விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் ஏக்கருக்கு ரூபாய் 5,000 மானியம் வழங்கப்படும்.

புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன, விவசாயிகளுக்கு 10 ஆயிரம் தேக்கு, சந்தன மரங்கள் வழங்கப்படும்.

பசுமை புதுச்சேரி திட்டத்தின் கீழ் செங்குத்து தோட்டம் உருவாக்கப்படும்.

ஆரோக்கியமான கன்றுகள் வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் மற்றும் சுயஉதவிக்குழுவினுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

புதிய உழவர் சந்தைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கறவை மாடுகள் பாராமரிக்கவும், கூட்டுறவு சங்கங்களில் அல்லாதவர்களுக்கு 75 விழுக்காடு மானியத்தில் தீவனம் நடப்பாண்டு வழங்கப்படும்.

இலவச அரிசி வழங்க ரூ.197.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான சத்திய கூறுகள் ஆராயப்படும்.

100% கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்ற அரசு பாடுபடும்.

மாணவர் இடை நிற்றலை தவிர்க்க கல்வி கற்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்.

இதற்காக கல்வித்துறைக்கு ரூ.742 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

புதுச்சேரி மாநிலத்தில் மின் பற்றாக்குறை இல்லை. 24 மணி நேரமும் மின் இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்க நடவடிக்கை.

கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

புதுச்சேரியில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்றுள்ள விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி.

கிழக்கு கடற்கரை சாலையில் சாலையில் அனைத்து வசதிகள் உள்ளடக்கிய வேளாண் நவீன வளாகம் அமைக்கப்படும்.

புதுச்சேரியில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வரும் செப். 23 மற்றும் 24ந்தேதி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலை சுற்றி, தேரோடும் நான்கு வீதிகளையும் செப்பனிட ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

5 கோடி ரூ. செலவில் கட்டப்படும் நீச்சல் குளம் இந்த ஆண்டு திறக்கப்படும்.

2 கோடி ரூபாய் செலவில் பாகூரில் புதிய பேருந்து நிலையம், ஏனாமில் 7 கோடி மதிப்பில் ஏ.என்.எம். பள்ளி அமைக்கப்படும்.

மாகி பகுதியில் 19 கோடி ரூபாய் செலவில் கடலோர காவல் நிலையம், தங்கும் விடுதி அமைக்கப்படும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஆடுகள் வாங்க கடன் வழங்கப்படும்.

கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும்.
அரிசி, பருப்பு, எண்ணெய், தானியங்கள் உள்ளிட்டவைகளை நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

புதுச்சேரியில் மூட்டப்பட்டுள்ள நியாவிலைக் கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

புதுச்சேரி மாநிலத்தில் ஆதி திராவிட மணமகள் நிதியுதவி திட்டம் ரூ. 75,000 இருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்படும்.

பாட்கோ கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

Puducherry government budget highlights 2021

சிவன்-எமன் மோதும் மிரட்டலான ‘மாயன்’..; உலகத்தின் முதல் கேரக்டர் இன்ட்ரொடக்‌ஷன் இல்லுஸ்ட்ரேட்டட் வீடியோ

சிவன்-எமன் மோதும் மிரட்டலான ‘மாயன்’..; உலகத்தின் முதல் கேரக்டர் இன்ட்ரொடக்‌ஷன் இல்லுஸ்ட்ரேட்டட் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் மற்றும் ஜி.வி.கே.எம் எலிபண்ட் பிச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மாயன்’.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார், ராஜேஷ் கண்ணா.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில், ‘மாயன்’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில், மாயன் படக்குழுவினர் இன்று இப்படத்தின் கதாபாத்திரங்களை மோஷன் போஸ்டராக லஹரி மற்றும் டி-சீரிஸ் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதில் வினோத் மோகன் – ஆதி சிவனாகவும், ஜான் விஜய் – எமதர்ம சக்கரவர்த்தியாகவும் மற்றும் சாய் தீனா – வீரா சூரனாகவும் வரைகலை வடிவில் பிரம்மாண்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவே உலகத்தின் முதல் கேரக்டர் இன்ட்ரொடக்‌ஷன் இல்லுஸ்ட்ரேட்டட் மோஷன் போஸ்டர் என்று படக்குழுவினர் சார்பில் பதிவிட்டுள்ளனர்.

இந்த மோஷன் போஸ்டர் இப்படத்தின் மீதான ஆர்வத்தையும், எதிர்ப்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது.

நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க…

Here is #Mayan character motion poster !!!

சார்பட்டா பரம்பரை-யை வாங்கிய கலைஞர் பரம்பரை

சார்பட்டா பரம்பரை-யை வாங்கிய கலைஞர் பரம்பரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா நடிப்பில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

முரளி ஜி ஓளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் உள்ள அனைத்து கேரக்டர்களும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

ஆனாலும் திமுக கட்சிக்கு ஆதரவாக நிறைய காட்சிகள் உள்ளன எனவும் சர்ச்சைகளும் எழுந்தன.

தற்போது ஊரடங்கிற்கு பிறகு இந்த படத்தை தியேட்டர்களிலும் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். எனவே தியேட்டர்களில் வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கலாம்.

இந்த நிலையில், இந்த படத்தின் டிவி சேட்லைட் உரிமையை கலைஞர் டிவி பெரிய விலைக்கு கைப்பற்றி உள்ளது.

இந்த சேட்டிலைட் உரிமை தகவலை நடிகர் ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசப்பட்டினம் படங்களின் ஒளிபரப்பு சேட்லைட் உரிமையையும் கலைஞர் டிவி வாங்கியுள்ளது என்பதையும் ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆதரவு படத்தை கலைஞர் டிவி வாங்கியுள்ளது எனவும் திமுக ஆட்சிக்கு வந்து விட்டதால் இனி படங்களின் டிவி உரிமை கலைஞர் டிவிக்கே செல்லும் எனவும் கமெண்ட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

Sarpatta Parambarai satellite rights bagged by Kalaignar TV for a huge price

வாத்தியாரே பாக்சிங் விட ரத்த பூமி இது.; பசுபதிக்கு ஆர்யா கொடுத்த வார்னிங் ஏன்.?

வாத்தியாரே பாக்சிங் விட ரத்த பூமி இது.; பசுபதிக்கு ஆர்யா கொடுத்த வார்னிங் ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, காளிவெங்கட் என பலரும் நடித்து ஓடிடியில் ரிலீசான படம் ‘சார்பட்டா பரம்பரை’.

இந்த படத்திற்கு அனைத்து தரப்பிலும் ஆதரவு கிடைத்தது.

எனவே குறைவே இல்லாமல் பல மீம்ஸ்கள் வெளியானது.

முக்கியமாக படத்தில் ஒரு காட்சியில் பசுபதியை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஆர்யா செல்வார்.

அந்த காட்சி அதிகளவில் பிரபலமாக மீம்ஸ் வந்து வண்ணம் உள்ளன.

அந்த காட்சியை பதிவிட்டு பசுபதியை ட்விட்டருக்கு வரவேற்றுள்ளார் ஆர்யா.

ஆர்யா பசுபதியின் உண்மையான டுவிட்டர் கணக்கைப் பகிர்ந்து…

“வாத்தியாரே இதான் டுவிட்டர் வாத்தியாரே, பாக்ஸிங்கை விட ரத்த பூமி. உன்னோட பேருல இங்க நெறைய பேரு இருக்காங்கன்னு தெரிஞ்சதும், ஒரிஜனல் நான்தான்டான்னு உள்ள வந்த பாத்தியா. உன் மனசே மனசுதான்.

வா வாத்தியாரே இந்த வேர்ல்டு உள்ள போலாம்,” என சுவாரசியமாக பதிவிட்டுள்ளார்.

Vaathiyare Idhaan Twitter Vaathiyarey. boxing eh vida rattha boomi ?? unnoda peru la inga neraya peru irukaanganu therinjadhum original naathaanda nu ulla vandha paathiya. un mansey mansu dhaan. Vaa vaathiyare indha word ulla polam

this is the Official handle @PasupathyMasi https://t.co/Mzh4aEfQbh

இதற்கு பசுபதியின் பதில் இதோ…

Amam.. kabila, boxinge ulagamnu irunthutten, parambaraikku onnuna modha aala vandhuruven,naan vun cycle laye pinnadi okkandhukiren, enna ella edathukkum kootikinu po

இவர்களுக்கு காளி வெங்கட் அளித்துள்ள பதில் இதோ…

இன்னா வாதியார்,ஒரிஜினல் id ய கிரியேட்பண்ணி ,fake id லாம் close பண்ணி, நம்ப account அ verify பண்ணி, நம்பள tag பண்றவங்களுக்கெல்லாம் like போட்டு,daily ஒரு post போட்டு,இங்க நடக்குற பஞ்சாயத்துலலாம் தப்ச்சு,RTபண்ணி,mention பண்ணி @arya_offl சார்லாம்tweet போட்டு இப்டி வந்து நின்னா? ????‍♂️

Actor Arya welcomes Pasupathy to twitter world in a funny way

More Articles
Follows