தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரைத்துறையில் பல திறமைகள் நிறைந்தவர் நடிகர் சிம்பு. இவருக்கு சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரும் உண்டு.
ஆனால் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார் என்ற குற்றச்சாட்டுகள் இவர் மேல் எப்போதுமே உண்டு.
தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
அவருடன் பாரதிராஜா, நிதி அகர்வால், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
குறுகிய கால படமாக இப்படத்தை படமாக்கி வந்தார் சுசீந்திரன்.
சிம்புவின் காட்சிகளை 2 வாரங்களுக்கு நடத்த திட்டமிட்டிருந்தாராம்.
ஆனால் தற்போது பத்தே நாட்களில் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.
இது படக்குழுவினரையே ஆச்சரியமடைய வைத்துள்ளது..
இன்னும் சில தினங்களில் ஈஸ்வரன் பட மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஈஸ்வரன் படப்பிடிப்பை வெகு விரைவாக முடித்து விட்ட சிம்பு இன்னும் சில நாட்களில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
Silambarasan TR wraps his shoot for Eeswaran