அஜித் பார்முலாவில் தனுஷின் புதிய படம்.?

அஜித் பார்முலாவில் தனுஷின் புதிய படம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushதனுஷ் தனது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனாலும், ஒவ்வொரு படத்தையும் விரைவாக முடித்து கொடுத்து வருகிறார்.

விரைவில் தொடரி, கொடி மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் வெளியாகவுள்ளன.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதனிடையில் மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒரு பைக் ரேஸ் கதையை பற்றிய படமாக உருவாகவுள்ளதாம்.

நடிகர் அஜித் ஒரு பைக் ரேஸர் என்பதும், அவரது தல 57 படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

எம்ஜிஆர்-ரஜினிக்கு அடுத்து விஜய்சேதுபதி தான்…

எம்ஜிஆர்-ரஜினிக்கு அடுத்து விஜய்சேதுபதி தான்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiவிஜய்சேதுபதி நடித்துள்ள தர்மதுரை படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் இப்பட தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது…

விஜய்சேதுபதிக்கு எந்த கேரக்டர் என்றாலும் செட்டாகும்.

இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்தார்.

இதில் காலேஜ் பையனாக நடித்துள்ளார்.

கிளீன் ஷேவ் செய்தால் ஒரு கெட்டப். தாடி வைத்தால் ஒரு முரட்டு லுக் இருக்கும்.

அது ரஜினிக்கு பிறகு இவருக்கு தான் செட்டாகிறது.” என்றார்.

அதன்பின்னர் திருப்பூர் சுப்ரமணியம் பேசியதாவது…

எம்ஜிஆர், சிவாஜி போன்ற நாயகர்கள் நிஜ வாழ்வில் நல்ல பண்பாளர்களாக இருந்தார்கள்.

அந்த குணம் விஜய்சேதுபதியிடம் உள்ளது.” என்றார்.

விஜயசாந்தி இடத்தை நிரப்புவாரா சோனியா அகர்வால்..?

விஜயசாந்தி இடத்தை நிரப்புவாரா சோனியா அகர்வால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soniaஅறிமுக நாயகன் சந்தோஷ் கண்ணா நாயகனாக நடிக்க, டூரிங் டாக்கீஸ் பட நாயகி காயத்ரி மற்றும் ஓம் சாந்தி ஓம் பட புகழ் கௌதமி செளத்ரி ஆகியோர் நடித்துள்ள படம் ‘சாயா’.

இதில் வன இலாகா அதிகாரியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

விஜயசாந்தியை போல ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் அனல் பறக்க செய்திருக்கிறாராம்.

பாலாசிங், மூகாம்பிகை ரவி, கராத்தே ராஜா ஆகிய மூவரும் வில்லன்களாக மிரட்டியுள்ளனர்.

Y.G. மகேந்திரன் ஆத்மாவின் தந்தையாக நடித்துள்ளார். கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கிராமத்து பஞ்சாயத்தர்களாக ஆர்.சுந்தரராஜன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ‘பாய்ஸ்’ ராஜன், கோவை செந்தில், கொட்டாச்சி, சபீதா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜான் பீட்டர் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்துள்ளார் எஸ். பார்த்திபன்.

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் V.S. சசிகலா பழனிவேல் வழங்க, தயாரித்து இயக்குகிறார் V.S.பழனிவேல். தயாரிப்பு மேற்பார்வையை மதுபாலன் கவனிக்கிறார்.

இப்படம்  ரசிகர்களை பயமுறுத்தாமல், புனிதமான ஆத்மாக்கள் பற்றி பேசும் படமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

விஜய்சேதுபதியுடன் இணைந்த பாலா…. ரசிகர்கள் உற்சாகம்.

விஜய்சேதுபதியுடன் இணைந்த பாலா…. ரசிகர்கள் உற்சாகம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and balaசீனுராமசாமி இயக்கிய தர்மதுரை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகன் விஜய்சேதுபதி, இதன் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இயக்குனர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பாலா பேசியதாவது….

விஜய்சேதுபதி மிகவும் யதார்த்தமான நடிகர்.

அவருடைய படங்களைப் பார்த்திருக்கிறேன். மிகச் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருப்பது பெருமை” என்றார்.

இதனை கேட்ட திரளான ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

சென்னையிலதான் சூப்பர் பிகர்ஸ் இருக்காங்க… தேடி அலையும் நாயகன்

சென்னையிலதான் சூப்பர் பிகர்ஸ் இருக்காங்க… தேடி அலையும் நாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kp 3மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ். P மற்றும் எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் E. சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கன்னா பின்னா”.

தியா கதையை எழுதி, இயக்குவதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

வன்மம் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்த ‘அஞ்சலி ராவ்’ நாயகியாக நடித்திருக்கிறார்.

ரோஷன் சேதுராமன் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஜெரால்டு ராஜமாணிக்கம். பாடல்களை ஸ்ரீதர் ராமசாமி எழுத, படத்தொகுப்பு செய்துள்ளார் வெஸ்லி.

இப்படம் பற்றி இயக்குனர் தியா சொல்லும்போது…

“சூப்பர் பிகருன்னா அவங்க சென்னையிலதான் இருப்பாங்க அப்படின்னு நினைக்கிற ஒரு நாயகன். அவங்களதான் கல்யாணம் கட்டிக்கனும் என திருச்சியில் இருந்து சென்னைக்கு வருகிறார்.

படம் ஆரம்பம் முதல் முடிவு வரை நகைச்சுவையை மட்டும் நம்பி இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம்.

என் வாழ்க்கையில் என் நண்பர்கள் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை கற்பனை கலந்து கொடுத்து உள்ளோம்.

இதில் நிஜ பவுன்சர்கள் பலர் நடித்துள்ளனர். பார்ப்பதற்கு பிரமாண்டமான உருவத்தில் இருக்கும் இவர்கள் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் எனக்கு நண்பர்கள் என்பதால், கடைசி வரை இப்படத்தின் கதையை அவர்கள் கேட்கவே இல்லை.

ரசிகர்களின் சிரிப்புக்கு நாங்கள் உத்திரவாதம்.” என்றார்.

நாளைய இயக்குனர் குறும்பட நிகழ்ச்சியில் சிறந்த இயக்குனராக விருது பெற்றவர் தியா என்பது குறிப்பிடத்தக்கது.

தன் வாழ்க்கையை மாற்றியவருடன் சூர்யா மீண்டும் இணைவாரா?

தன் வாழ்க்கையை மாற்றியவருடன் சூர்யா மீண்டும் இணைவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya stillsஎத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் எல்லா நடிகர்களுக்கும் பேர் சொல்லும் படியாக சில படங்களே அமைந்திருக்கும்.

சூர்யாவுக்கு அப்படி அமைந்த சூப்பர் ஹிட் படம்தான் ‘காக்க காக்க’.

கௌதம் மேனன் இயக்கிய இப்படத்தில் ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்திருந்தார் சூர்யா.

இப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், எனக்கு ஒரு ஸ்பெஷலான படம் எனவும் சூர்யாவின் ஈடுபாடு இல்லையென்றால் அது சாத்தியமாகி இருக்காது எனவும் கௌதம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த சூர்யா… “எனக்கும் ஜோதிகாவுக்கும் பிடித்த படம். என் வாழ்க்கையையே மாற்றிய படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இருவரிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கியுள்ளதாக தெரிகிறது.

எனவே சூர்யா மீண்டும் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More Articles
Follows