தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஜனவரி 11ஆம் தேதி விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ ஆகிய இரு படங்கள் வெளியானது.
இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவான நிலையில் பல கொண்டாட்டங்களை ரசிகர்கள் செய்திருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரி மீது ஏறி ஆட்டம் போட்ட அஜித் ரசிகர் ஒருவர் தவறி விழுந்து மரணம் அடைந்தார்.
இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் தங்களின் வருத்தத்தையும் கண்டனங்களையும் தெரிவித்து இருந்தனர்.
சினிமா ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் இது போன்ற ஆட்டங்களை தவிர்க்க வேண்டும்.. சினிமாவை விட நடிகர்களை விட உயிரே முக்கியம் எனவும் குரல்கள் எழுந்தன.
மேலும் அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்.. ரசிகர்களுக்கு இது போன்ற செயல்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த ரசிகரின் மரணத்திற்கு அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் நடிகர் சரத்குமார் நேரில் சென்று குடும்பத்தாரை சந்தித்தார்.
இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் சிலர் “அஜித் செய்ய வேண்டியதை சரத்குமார் செய்துள்ளார் இது பாராட்டுக்குரியது” எனவும் தங்களின் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
Sarathkumar met Ajith fan family who died at Thunivu celebration