தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று ஜனவரி 1 புத்தாண்டை முன்னிட்டு சினிமா பத்திரிகையாளர் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஏஸ்ஏ. சந்திரசேகர்.
இந்த விழா சென்னை வடபழனியில் உள்ள விஜய்க்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் பேசும்போது..
“அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இங்கு கலந்து கொண்டவர்களில் அனைவரும் என் இளமையின் ரகசியம் பற்றி கேட்டார்கள்.. நான் என்னுடைய இளமை காலத்தில் 30 40 வயதுகளில் இருக்கும் போது அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து விடுவேன்.
அது பிரம்ம முகூர்த்த சமயம் என்பார்கள். அந்த நேரத்தில் எழுந்து சுவாச பயிற்சி மேற்கொள்வேன்.. மூச்சை நன்றாக இழுத்து நன்றாக விடுவேன்.. கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக இதை செய்து வருவேன்.
மூச்சு இல்லை என்றால் உயிர் போச்சு.. எனவே மூச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
அன்று எனக்கு கிடைத்த உற்சாகம் எனர்ஜி தான் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என நம்புகிறேன்.
எனக்கு 80 வயதாகி விட்டது.. ஒருவர் நம்மிடம் வயதை கேட்டால் 60 ஆகிவிட்டது 70 ஆகிவிட்டது என சோர்வாக சொல்லக் கூடாது.
எனக்கு இப்பதான் 40 ஆகிறது 50 ஆகுது 60 ஆகிறது என எண்ணின் மதிப்பை குறைத்து சொல்ல வேண்டும்.. நமக்கு வயதாகி விட்டது என்ற எண்ணம் நமக்கு முதலில் வரவே கூடாது. நமது எண்ணங்களை எப்போது இளமையாக வைத்திருக்க வேண்டும்.
பெரிய நடிகரின் படங்கள் வரும்போது அவர்கள் படத்தை விளம்பரம் செய்யாமலே பத்திரிக்கை நண்பர்கள் நீங்கள் செய்து விடுகிறீர்கள்.. ஒரு நடிகர் வந்தாலோ ஒரு நடிகை வந்தாலோ அவர் அங்கு சென்றார் இங்கு சென்றார் என செய்தி வெளியிடுகிறீர்கள்.
அதுவே படத்திற்கு பிரமோஷன் ஆகிவிடுகிறது.. ஆனால் சின்ன படங்களுக்கு நீங்கள் அதுபோல செய்வதில்லை. பிரஸ் மீட் நடந்தாலும் அந்தப் படத்தை பற்றி குறிப்பிடாமல் மற்ற விஷயங்களையே சொல்கிறீர்கள்.
அதை தவிர்த்து இனியாவது.. “ஒரு நடிகரைப் பற்றி பேசினால் அவர் எந்த படத்தின் விழாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.. அது எந்த படம்? என்பது போன்ற தகவல்களை நீங்கள் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதன் பிறகு இறுதியாக இந்த ஆண்டு பொங்கலுக்கு இரண்டு படங்கள் (வாரிசு & துணிவு) வெளியாகிறது.. இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும்” என வாழ்த்தி பேசினார் எஸ் ஏ சந்திரசேகர்.
SAC talks about Thunivu success