தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று மார்ச் 5ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல கல்லுரியில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலையை ரஜினிகாந்த் திறந்து வைக்கவுள்ளார்.
ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் அவர் இதுபோன்ற ஒரு விழாவில் கலந்துக் கொள்ளவிருப்பதால் சென்னை கோயம்பேடு முதல் மதுரவாயல், வானகரம் வழிகளில் ரஜினியை வரவேற்பு பல பேனர்களை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
மேலும் பேண்டு வாத்தியங்களை வைத்து ரஜினியை வரவேற்க தயாராக உள்ளனர்.
இதே விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரும் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.
அப்போது அவரை சந்தித்துள்ள செய்தியாளர்கள்… ரஜினியின் அரசியல் கட்சியில் இணைவீர்களா? என கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக விஜய்யிடம்தான் கேட்க வேண்டும் என எஸ்ஏசி பதிலளித்துள்ளார்.
Will Vijay joins with Rajinis political party Here is SAC reaction