தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம், திரைப்படமாக எடுக்கப்படுகிறது.
இப்படத்திற்கு நுங்கம்பாக்கம் என பெயரிட்டுள்ளனர்.
இப்படத்திற்கு இதற்கு முன்பு ‘சுவாதி கொலை வழக்கு’ என பெயரிட்டு இருந்தனர். பல பிரச்சினைகள் வரவே தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரமேஷ் செல்வன் இயக்கும் இந்த படத்தில் சுவாதி கதாபாத்திரத்தில் ஆயிரா நடித்துள்ளார். நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் நடிக்கிறார்.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் விக்ரமன், அஜ்மல், சினேகன், கதிரேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது,
ஆரம்பகாலத்தில் என்னுடைய எல்லா படங்களுமே பல பிரச்சனைகளை தாண்டியே ரிலீசானது. எனினும் நான் தலைப்பை மாற்றவில்லை, மாற்றக்கூடாது என்று உறுதியாக இருந்தேன்.
ரிலீஸ் தேதியை வைத்துக் கொண்டு அவர்களுக்கு பயந்து போய் நாம் மாற்றுகிறோம். ஏதாவது ஒரு அமைப்பு இதை படமாக எடுக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். நாட்டில் நடப்பதை தான் நாங்கள் பேசுகிறோம்.
காமராஜர் காலத்தில் உழைப்பதற்காக அரசியலுக்கு வந்தார்கள். அத்தனை அரசியல்வாதிகளும் சம்பாதிக்கவே இன்று அரசியலுக்கு வருகிறார்கள்.
இதை சினிமாவில் காட்டுவது தப்பா. படத்தில் இதை காட்டினால் என்ன செய்வார்கள். என்ன தான் போய்விடும், கடைசியில் உயிர்தான் போகும், உயிர் போனால் 4 பேரால் பேசப்படும்.
அந்த கொலை வழக்கு தான் இந்த படம் என்பதை, எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பீர்கள். எதையும் தைரியமாக செய்யுங்கள்.” என்றார்.
Nowadays Politics became business says SA Chandrasekar