தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அக்டோபர் 19ஆம் தேதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்திற்கு தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு…
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வரும் 19 ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 19 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள் ) திரையிட வேண்டும்.
காட்சிகள் காலை 9 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 1.30 மணி வரை மட்டும்.
அரசு அறிவித்த டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் 04286 299137 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா அறிவிப்பு.
Rules and Regulations for Leo Screening Collector order