தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் உச்சத்தில் இருந்த போதே அவர்களுக்கு இணையாக ரசிகர்களை ஈர்த்தவர் ஜெமினி கணேசன்.
அப்பாவியான முகம் கொண்டிருந்தாலும் இவர் முதலில் நாயகனாக நடிக்கவில்லையாம். வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஜெமினி கணேசனுக்கும் காதல் பாடல்கள் பெருமளவு கை கொடுத்தது.
பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஏ.எம் .ராஜன் ஆகியோர் குரல்கள் ஜெமினி கணேசனின் காதல் பாடல்களுக்கு கை கொடுத்தன.
ஜெமினி கணேசன் பற்றிய சிறு துளி தகவல்கள் இதோ…
இவர் 17.11.1920-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் கணபதி சுப்பிரமணியன் சர்மா. பின்னர் அது ராமசாமி கணேசன் என்று மாறியது. நாளடையில் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிய காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயரே நிலையானது.
இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஜெமினி ஸ்டுடியோவில் இவருக்கு கிடைத்த வேலை கேஸ்டிங் டைரக்டர். அதாவது சினிமாவில் நடிக்க வரும் புதுமுகங்களின் திறமைகளை பரிசோதித்து குறிப்பு எழுதித் தரும் நபர்தான் இவர்.
* அவரிடம் வாய்ப்பு கேட்டு வந்தவர்களின் முக்கியமானவர் சிவாஜி கணேசன், எஸ். வி.ரங்காராவ், சாவித்திரி ஆகியோரும் அடங்குவர்.
சிவாஜிக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிட்டு “இந்த பையனின் கண்ணும், முகமும் அபாரம். நிச்சயம் ஒரு நல்ல நடிகராக இவர் விளங்குவார் என கம்பெனியில் குறிப்பு எழுதியுள்ளார். சிவாஜி கணேசனே இதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறாராம்.
தமிழில் மட்டும் 97 படங்களில் நடித்துள்ளார். இவரின் முதல் படம் “மிஸ் மாலினி’ (1947). கடைசி படம் கமலின் “அவ்வை சண்முகி'(1996).
“வல்லவனுக்கு வல்லவன்’. படத்தில் ஜெமினி கணேசன் வில்லனாக நடித்துள்ளார். ஹீரோவாக நடித்த முதல் படம் 1953-ஆம் ஆண்டு வெளியான “பெண்’.
“வஞ்சிக் கோட்டை வாலிபன்’ படத்தில் ஆக்சனில் அசத்தியிருக்கிறார்.
இவர் தயாரித்த ஒரே படம் “நான் அவனில்லை’.
நிறைய காதல் படங்களில் நடித்து காதல் மன்னன் என்ற பெயரையும் ரசிகர்களிடையே பெற்றார். தமிழ் சினிமாவின் முதல் காதல் மன்னன் பட்டம் பெற்றவர் இவரே.
1953ல் “மனம்போல மாங்கல்யம்’. என்ற படத்தில் இரட்டை வேடம் ஏற்றார். இந்த படத்தில் தன்னுடன் நடித்த, நடிகையர் திலகம் என்று புகழ் பெற்ற சாவித்திரியை ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார்.
சாவித்திரிக்கு திருமணம் செய்வதற்கு முன்பே இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அதை அறிந்தே இவரை சாவித்ரி காதலித்து திருமணம் செய்தார்.
சினிமாவை போல நிஜ வாழ்க்கையிலும் நிறைய பெண்களை காதலித்தார். சிலரை திருமணம் செய்துள்ளார்.
இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதினை பெற்றிருக்கிறார்.
2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது 85-வது வயதில் உயிரிழந்தார்.
ஜெமினி கணேசனுக்கு இந்திய அரசு தபால் தலையும் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. அதனை ஜெமினி கணேசனின் புதல்விகள் கமலா செல்வராஜ், ரேவதி சுவாமிநாதன் பெற்றுக் கொண்டனர்.
Remembering late actor Gemini Ganesan on his birth anniversary