தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பொதுவாகவே தமிழ் சினிமாவை குறித்து பேசும்போது.. “முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடிப்பதில்லை” என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது’.
எம்ஜிஆர் – சிவாஜி ‘கூண்டுக்கிளி’ என்ற ஒரே ஒரு படத்தில் இணைந்து நடித்தனர்.
ரஜினி – கமல் பல படங்களில் இணைந்து நடித்தாலும் அது நடந்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. விஜய் – அஜித் ‘ராஜாவின பார்வையிலே’ என்ற ஒரே ஒரு படத்தில் தான் இணைந்து நடித்தனர். அதுவும் வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டது.
‘பிதாமகன்’ என்ற ஒரே படத்தில் விக்ரம் – சூர்யா இருவரும் இணைந்து நடித்தனர்.
சிம்பு – தனுஷ் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. அது போல சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவில்லை.
இவர்களின் ரசிகர்களும் ஏட்டிக்கு போட்டியாக நினைக்கின்றனர். மேலும் சண்டைகள் தான் அடிக்கடி நடக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி பகத்பாசில் சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலும் சூப்பர்.
அதுபோல ஓரிரு தினங்களுக்கு முன் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமும் ஒரு மல்டி ஸ்டார் படம் தான்.
இதில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி விக்ரம் பிரபு சரத்குமார் பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
அது போல நடிகைகள் ஐஸ்வர்யா ராய் த்ரிஷா ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இது உலகளவில் ரூ. 150 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வருகிறது.
மலையாளம் தெலுங்கு ஹிந்தி சினிமாக்களில் இதுபோல மல்டி ஸ்டார்ஸ் அடிக்கடி இணைந்து நடிப்பது உண்டு.
ஆனால் தமிழ் சினிமாவில் இதுபோல நடைபெறுவது மிக அரிதான ஒன்றாகும்.
தற்போது விக்ரம் & பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதால் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய மாற்றம் உண்டாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
எனவே நம் கோலிவுட் நட்சத்திரங்கள் இணைந்து நடித்தால் அதன் வெற்றி பல மடங்காக உயர்ந்து நிற்கும் என்பதையே இந்த இரு படங்களின் வெற்றி நமக்கு உணர்த்துகிறது.
இனியாவது இது போன்ற பிரம்மாண்ட வெற்றிகள் தமிழ் சினிமாவுக்கு கிடைக்குமா? நம் ஹீரோக்கள் மனது வைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.