தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தலைமையில் நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கவும் முடிவெடுத்துள்ளனர்.
அவர்களிடம் உள்ள புகார் பட்டியலில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, விஷால் மற்றும் யோகிபாபு ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ரெடின் கிங்ஸ்லி, குணசித்திர நடிகர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகளில் பிரச்சினை செய்து வரும் நடிகர்கள் மீது நடிகர் சங்கத்துடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் ஒரு புது படம் ரிலீஸ் அன்று நெகட்டிவ் விமர்சனங்கள் செய்யும் விமர்சகர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Shooting and Dubbing issue Action against top Actors