தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து தியேட்டர்களில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’.
இப்படம் அனைத்து தரப்பிலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கிறது.
இந்த படத்தில் நடிகர் சிம்புக்கும் அவரின் வில்லனாக நடித்த எஸ்.ஜே. சூர்யாவுக்கும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் வில்லன் கேரக்டருக்கு தனுஷ்கோடி என்று பெயர் வெங்கட்பிரபு வைத்தது ஏன்? என தனுஷ் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாநாடு டைரக்டர் வெங்கட்பிரபு அவர் அளித்த சமீபத்திய பேட்டியில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
‘மாநாடு’ படத்தின் வில்லன் பெயர் ஸ்ட்ராங்கா பவர்புல்லாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி வைத்தோம்.
நடிகர்களில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் சிம்பு, தனுஷ் தான் நம் அனைவரின் நினைவுக்கு வருவார்கள்.
எனவே அதுபோன்ற ஒரு பெயரை வைத்தால் வில்லன் கேரக்டருக்கு ஒரு பவர் வந்து விடும் என்பதால் அப்படி வைத்ததாகவும் கண்டிப்பாக நடிகர் தனுஷ் இதனையறிந்து சந்தோஷப்பட்டிருப்பார் எனவும் தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.
Reason behind Maanaadu villain name revealed?