ரஜினி வாய்ப்பளித்தும் மறுத்த எழுத்தாளர் பாலகுமாரன்

ரஜினி வாய்ப்பளித்தும் மறுத்த எழுத்தாளர் பாலகுமாரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and writer bala kumaranபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் இன்று மரணமடைந்தார்.

இவர் இரும்பு குதிரை நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

ரஜினி நடித்த பாட்ஷாபடத்தில் ’ஒருதடவ சொன்னா நூறு தடவ சொன்னமாதிரி’ என்ற வசனத்தை எழுதியவர் .

குணா, ஜென்டில் மேன் உள்ளிட்ட பல படங்களில் வசனகர்த்தாவாகவும் அவர் பணியாற்றி உள்ளவர்.

இவரது மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் இவர் பேசியதாவது…

என் நெருங்கிய நண்பர் பாலகுமாரன்.

சில மாதங்களுக்கு நாங்கள் சந்தித்து நிறைய பேசினோம்.

பாட்ஷா படத்திற்கு வசனம் எழுதினார்.

அதன் வெற்றிக்கு பின்னர் முழு நேர சினிமாவுக்கு அழைத்தேன்.

ஆனால் இலக்கியம் தான் என் உலகம். சினிமா வேண்டாம். பணம் புகழை மறுத்தார்.” என்றார் ரஜினிகாந்த்.

பாகுபலி தந்த ராஜமௌலியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்.?

பாகுபலி தந்த ராஜமௌலியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh may join with Rajamouli for his next projectஇந்திய சினிமாவே பெருமைப்பட்டு கொள்ளும் வகையில் பாகுபலி படத்தை இயக்கி விருந்து படைத்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

இதன் இரண்டும் பாகங்களும் உலகளவில் மாபெரும் வசூலை ஈட்டியது.

இப்படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரையும் தன் அடுத்த படத்தில் இயக்கவுள்ளார் ராஜமவுலி.

இப்படத்திற்கு ஆர்ஆர்ஆர் என பெயரிப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதில் முக்கிய நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகையர் திலகம் படத்தின் மூலம் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ராஜமவுலியும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பெருமையாக குறிப்பிட்டு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh may join with Rajamouli for his next project

விஸ்வாசத்தை முடித்துவிட்டு மீண்டும் சத்யஜோதியுடன் அஜித்; டைரக்டர் இவரா?

விஸ்வாசத்தை முடித்துவிட்டு மீண்டும் சத்யஜோதியுடன் அஜித்; டைரக்டர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Viswasam movie Ajith plans to join again with Sathyajothi moviesசிவா இயக்கிய விவேகம் படத்தில் அஜித் நடிக்க, சத்யஜோதி நிறுவனம் தயாரித்தது.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் மீண்டும் அதே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருடன் இணைந்தார் அஜித்.

விஸ்வாசம் என்று தலைப்பிடப்பட்ட அந்த படத்தின் சூட்டிங் தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.

இமான் இசையமைக்க, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் சத்யஜோதி நிறுவனத்துடன் ஒரு படத்தில் இணையவுள்ளாராம் அஜித்.

இப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்குவார் என்றும் அல்லது என்னை அறிந்தால் பட இயக்குநர் கௌதம்மேனன் இயக்குவார் எனவும் தவல்கள் தெரிவிக்கின்றன.

After Viswasam movie Ajith plans to join again with Sathyajothi movies

பைரசியுடன் தொடர்பு..? வதந்திகளை மறுக்கும் லைகா

பைரசியுடன் தொடர்பு..? வதந்திகளை மறுக்கும் லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lyca productionsதமிழ் சினிமாவை சீர் குலைக்கும் அரக்கனாக உருவெடுத்துள்ளது ஆன்லைன் பைரசி.

இதில் முக்கிய இணையதளங்களான தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் ஆகியவற்றை தடுக்க முடியாமல் தவிக்கிறது தமிழ் சினிமா.

இந்நிலையில், இந்த இணையதளங்களை நடத்துவது சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா என்றும், அது விஷாலுக்கு தெரியும் என சில தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

இதற்கு லைகா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில்… “லைகா நிறுவனம் ஆன்லைன் பைரசியை ஊக்கப்படுத்துவதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை.

லைகா நிறுவனத்திற்கு எதிராக கட்டுரை வெளியிட்ட அந்த இணையதளம் மற்றும் அந்த நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

திரையுலகிற்கு எல்லா விதத்திலும் நாங்கள் ஆதரவாக இருந்துள்ளோம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்தலைப்பு இதுதான்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்தலைப்பு இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanஒரு பக்கம் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் மற்றொரு பக்கம், தயாரிப்பாளராக உருவெடுத்து படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.

தன்னுடன் படித்த கல்லூரி நண்பரான அருண்ராஜா காமராஜை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்.

அருண்ராஜா காமராஜா ஏற்கெனவே நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர்.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் தலைப்பு மற்றும், பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இதன் தலைப்பு ‘கனா’ என தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் ஆடும் கிரிக்கெட்டை மையப்படுத்தியுள்ள இப்படத்தை உருவாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kanaa first look poster

விஜய்வசந்துடன் இணையும் நந்திதா; 7 வயது குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்!

விஜய்வசந்துடன் இணையும் நந்திதா; 7 வயது குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Vasanth teams up with Nandita Swetha for Narmatha movieஜி. ஆர். மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா’.

நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தாய்-மகன் பாசத்தைப்பற்றி பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது.

சதீஸ் பி. சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, தேசிய விருதுப் பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தை தொகுக்கிறார்.

கலை இயக்கத்தை ஜெய் காந்த் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இயக்குநராக அறிமுமாகிறார் கீதா ராஜ்புத்.

படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது…

‘ எமோஷனல் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் டிராமா ஜேனரில் உருவாகும் திரைப்படம் இது. தாய்க்கும் மகனுக்கும் உள்ள பாசபிணைப்பை நெகிழ்ச்சியான பயணத்தின் பின்னணியில் உணர்வுபூர்வமாகச் சொல்கிறேன்.

இதில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, ஏழு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்.

கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய கேரக்டரில் நடிக்கிறார்.

இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

நாகர்கோயிலில் இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் இயற்கை வளத்துடன் கூடிய திறந்த வெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது’ என்றார்.

இயக்குநர் கீதா ராஜ்புத், திருநங்கையை பற்றி ‘என்னைத் தேடிய நான்’, காதலைப் பேசும் ‘மயக்கம்’, காது கேளாத மற்றும் வாய் பேசாத ஒரு பையனை மையப்படுத்திய ‘ ‘கபாலி’ என மூன்று குறும்படங்களை தயாரித்து இயக்கியிருக்கும் இவர், இதற்காக சிறந்த இயக்குநர் என்ற விருதையும் வென்றிருக்கிறார் என்பதும், பாலாவின் இயக்கத்தில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay Vasanth teams up with Nandita Swetha for Narmatha movie

Vijay Vasanth teams up with Nandita Swetha for Narmatha movie

More Articles
Follows