தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1990களில்.. ரஜினிகாந்த் நடித்த மன்னன் அண்ணாமலை பாட்ஷா படையப்பா முத்து பாபா உள்ளிட்ட பல படங்களில் அரசியல் வசனம் அதிகமாகவே அனல் தெறிக்கும்.
எனவேதான் ரஜினியை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்தனர். இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற பேச்சு எப்போதுமே ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருந்து கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் அந்த பேச்சுக்கள் விஸ்வரூபம் எடுக்கவே 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31்தேதியில் “தான் அரசியலுக்கு வருவது உறுதி” என அறிவித்தார் ரஜினிகாந்த்.
அதற்காகவே தன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்களை ரஜினிகாந்த் மக்கள் மன்றமாக மாற்றினார்.
அதன் பின் இராண்டுகள் ஆகியும் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை.
அதன் பின்னர் கொரோனா லாக்டோன் என பல பிரச்சினைகள் உருவானது.
இதனால் திடீரென பின்வாங்கி.. “இனி நான் அரசியலுக்கு வர மாட்டேன்” என அதிரடியாக அறிவித்தார் ரஜினிகாந்த்.
மேலும் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் செயல்படாது. பழைய படியே ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாகவே அது செயல்படும் என அறிவித்தார்.
ரஜினியின் இந்த முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள் அவர் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என வற்புறுத்தி வந்தனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மேலும் பல வழிகளில் ரஜினியின் முடிவை மறு பரிசினை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். ஆனால் எதற்கும் சம்மதிக்கவில்லை ரஜினிகாந்த்.
ஒரு கட்டத்தில் உண்மையான ரஜினியின் ரசிகர்கள் அவரின் முடிவை அதனை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் தற்போது ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
“நாங்கள் தீவிர ரஜினி ரசிகர்களாக 45 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். நற்பணிகளை செய்து வருகிறோம். தங்களுக்கு சுமார் 50 வயதாகிவிட்டது.
அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தமாட்டோம். ஆனால் ஏற்கனவே எங்களுக்கு அமைத்துக் கொடுத்த ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரை பயன்படுத்த மட்டும் அனுமதி தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
(கோரிக்கை வைத்தவர் திருச்சி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ராஜேந்திரன்)
ரசிகர்களின் கோரிக்கையை ரஜினி ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..