தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக சினிமா துறை மீது அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி 28% மற்றும் தமிழக அரசின் வரி 30% என மொத்தம் 58% வரியை திரைத்துறையினர் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இன்றோடு 3வது நாளாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
எனவே முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுவரை திரைத்துறைக்கு சாதகமான முடிவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ரஜினி போன்ற மதிப்புமிக்க கலைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் ரஜினி.
அதில்… “தமிழ் சினிமா துறையில் பணிபுரியும் லட்சக்ணக்கவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கும் படி தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajini requests TN government to consider Tamil film industrys plea
RajinikanthVerified account @superstarrajini
Keeping in mind the livelihood of Lakhs of people in the tamil film industry, I sincerely request the TN GOVT to seriously consider our plea