தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதில்…
இந்திய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை. அச்சுறுத்தல் வந்தால் நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்.
ரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக குடியுரிமை சட்டத்தை பயன்படுத்துகின்றன.
குறிப்பாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கும்போது தீர ஆராய்ந்து இறங்குங்கள்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானது. அது கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.
சைக்கோ படத்துல CCTV இல்லையே? ஜெயலலிதா மரணம் காட்டி உதயநிதி பதிலடி
என்பிஆர் அவசியம்; மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும்.
என ரஜினிகாந்த் பேசினார்.
இந்த நிலையில் ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது…
நடிகராக இருப்பதால் ரஜினிக்கு அரசியல் தெரியவில்லை. அவர் முதலில் கட்சி தொடங்கி கொள்கைகளை அறிவிக்கட்டும்.
அதன்பின்னர் அவரது கருத்துக்கு பதில் கூறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
டாடி ஒரு டவுட்டு… ஒரு வேளை உதயநிதி தான் ஒரு நடிகரை என்பதை மறந்துவிட்டாரோ என்னவோ…
Rajini is an actor He dont know politics says Actor Udhayanidhi