தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றபோது கலவரம் வெடித்தது.
அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர்.
அவர்களுக்கு ஆறுதல் கூற தூத்துக்குடிக்குச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.
அதன் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அந்த பேரணியில் சமூக விரோதிகள் ஊடுருவியதாகவும், அது தமக்கு தெரியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இது குறித்து ரஜினியிடம் விசாரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர்.
துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம், வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.