தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று சொன்னால் அது மிகையல்ல.
சினிமாவை தாண்டியும் இவரின் எளிமைக்கும் பண்புக்கும் குணத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு, ரெட்டின் கிங்சிலி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு தற்போது கேரள மாநிலம் கொச்சி அருகே சாலக்குடியில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்றார் ரஜினி.
அப்போது வழக்கம் போல அவரைக் கண்டதும் ரசிகர்கள் ஓடோடி வந்து தலைவா என்று அழைத்து செல்பி எடுத்துக் கொண்டனர்.
பிறகு அவர் காரில் ஏறி செல்லும்போது ரஜினியை காண போலீஸ் உயர் அதிகாரிகள் அருகே வந்தனர். அவர்களை கண்டதும் காரில் இருந்து இறங்கி வந்து போலீஸ் உடன் செல்ஃபி எடுத்து புறப்பட்டுச் சென்றார் ரஜினி.
இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rajini got down from the car when he saw the guards