நட்டி நடிக்கும் ‘வெப்’ பட சூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளரின் பர்த் டே பார்ட்டி

நட்டி நடிக்கும் ‘வெப்’ பட சூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளரின் பர்த் டே பார்ட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்திற்கு ‘வெப்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். ‘வேலன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வி.எம். முனிவேலன் அவர்களின் பிறந்தநாள் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது.

4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

‘எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ படத்தில் நடித்த ஷாஸ்வி பாலா, ‘முந்திரி காடு’ & ‘கண்ணை நம்பாதே’ படங்களில் நடித்த சுபப்ரியா மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோர் மற்ற 3 நாயகிகளாக நடிக்கிறார்கள்.

படத்தின் முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார்.

கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.

சண்டைப்பயிற்சி: ஃபயர் கார்த்திக்
ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய்
நிர்வாக தயாரிப்பு: நசீர் & கே.எஸ்.கே செல்வா

Producer VM Muni velan birthday celebration at Web shooting spot

அர்ஜூன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் & தேதி இதோ..

அர்ஜூன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் & தேதி இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய டிவி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி படு பிரபலமான ஒன்று. இது அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது.

எனவே இதற்கு இணையாக ‘சர்வைவர்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது.

இந்த ‘சர்வைவர்’ நிகழ்ச்சி விரைவில் ஜீ டிவியில் செப்டம்பர் 12 இரவு 9.30 மணியளவில் ஆரம்பமாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.

இதில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் ஒரு தனித்தீவில் விடப்படுவார்கள்.

அங்கு பலவிதமான சவால்கள் இருக்கும். அதில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 8 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 நடிகர்கள், 3 நடிகைகள் மற்றும் ஒரு நடன இயக்குனர், ஒரு டிவி தொகுப்பாளர் என கலந்துக் கொள்கின்றனர்.

‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் விவரம் இதோ…

1. நடிகர் விக்ராந்த்

2. நடிகர் நந்தா

3. நடிகர் உமாபதி (நடிகர் தம்பி ராமையா மகன்)

4. நடன இயக்குனர் பெசண்ட் ரவி

5. யூடியுப் தொகுப்பாளினி பார்வதி

6. நடிகை காயத்ரி ரெட்டி (பிகில் நடிகை)

7. நடிகை விஜயலட்சுமி

8. நடிகை ஸ்ருஷ்டி டாங்கே

International Survivor reality show in Tamil Host and Telecast updates

After Bigg Boss and Masterchef, the reality show Survivor, which became a huge hit in several countries, is coming to Tamil. The show, which will premiere on Zee Tamil, will be hosted by actor Arjun.

உலகநாயகன் கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணையும் சூர்யா

உலகநாயகன் கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணையும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசனும், சூர்யாவும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அண்மையில் அமல் நீரத் அளித்துள்ள பேட்டியில்…

“கமல்ஹாசனையும், சூர்யாவையும் மனதில் வைத்து கதை எழுதி இருக்கிறேன்.

இருவரிடமும் கதை சொல்லி விட்டேன்.

இருவரும் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

எனவே தற்போது திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

Kamal and Suriya joins hands together for the first time

அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போனது யாஷ் நடித்துள்ள ‘கே.ஜி.எஃப் 2’ பட ரிலீஸ்

அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போனது யாஷ் நடித்துள்ள ‘கே.ஜி.எஃப் 2’ பட ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட நடிகரான யஷ் நடித்து வரும் படம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’.

இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 2022 அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி கே.ஜி.எஃப்2 திரைப்படம் ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை கவனித்துக் கொண்டே, பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தையும் இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எப் சேப்டர் 1 படமானது டிசம்பர் 2018ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

KGF Chapter 2 release date announcement

அஜித் கைவிட்ட டைட்டிலை சிரஞ்சீவி படத் தலைப்பாக்கிய மோகன் ராஜா

அஜித் கைவிட்ட டைட்டிலை சிரஞ்சீவி படத் தலைப்பாக்கிய மோகன் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஆகஸ்ட் 22ல் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன் 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் புதிய படத்திற்கு ‘சிரஞ்சீவி 153’ என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர்.

கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.

இதன் படப்படிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாளை சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை இப்படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு GOD FATHER என டைட்டில் வைத்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த படம் வரலாறு. ஆனால் இந்த படத்திற்கு முதலில் வைத்து தலைப்பு ‘காட்ஃபாதர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் வேலாயுதம், தனி ஒருவன் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் மோகன் ராஜா.

GOD FATHER படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.

Chiranjeevis 153rd film titled God father Directed by MohanRaja

A joint production venture of Konidela Production Company and Super Good Films. #Chiru153

JUST IN தமிழகத்தில் பள்ளிகள் & தியேட்டர்கள் திறக்க அனுமதி.; கொரோனா ஊரடங்கு 2 வாரம் நீட்டிப்பு

JUST IN தமிழகத்தில் பள்ளிகள் & தியேட்டர்கள் திறக்க அனுமதி.; கொரோனா ஊரடங்கு 2 வாரம் நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

,

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மேலும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் & தியேட்டர்கள் திறக்க அனுமதி அனுமதியளித்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

*தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு.

*செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும்.

*இந்த பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

*1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்டம்பர் 15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் – தமிழக அரசு.

*அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகளும் (Diploma courses, polytechnic colleges) செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி.

*50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும்.

*கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி.*

*வரும் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்படலாம்.*

*கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி; இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவிப்பு.

*தினமும் இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி. இதுவரை இரவு 09.00 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23-8-2021-லிருந்து இரவு 10.00 மணி வரை செயல்பட அனுமதி.

*தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி.*

*ஆகஸ்ட் 23 திங்கட்கிழமை முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்கவும் அனுமதி.

*தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

அங்கன்வாடி மையங்கள் 1.9.2021 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும்.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

TN Govt extended 2 weeks lockdown Schools & theatres can be opened.

More Articles
Follows