தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாமன்னன்’.
‘மாமன்னன்’ படம் இந்த மாதம் ஜூன் 29ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ‘மாமன்னன்’ படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என ஒஎஸ்டி ஃபிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராம சரவணன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத் , யோகிபாபு நடிக்க ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி 80 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டன.
20 சதவிகித படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளார்.
மேலும், உதயநிதி ‘மாமன்னன்’ படமே தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.
ஒப்பந்தப்படி இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் புறக்கணித்துவருவதால் ‘ஏஞ்சல்’ படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும், ரூ.25 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
producer filed a petition on chennai high court to ban udhayanidhi’s maamannan