தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வாமனன் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார் ப்ரியா ஆனந்த்.
இதனைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி என 18 படங்களில் நடித்துவிட்டார்.
தற்போது கூட்டத்தில் ஒருவன், முத்துராமலிங்கம் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
தென்னிந்தியளவில் பிரபலமானாலும் இதுவரை மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடிக்காமல் இருந்தார்.
தற்போது இந்த இரு மொழி படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மலையாளத்தில் பிருத்விராஜ் உடன் ஈஸ்ரா என்ற படத்தில் நடிக்கிறார்.
இதனையடுத்து, ராஜகுமாரா என்ற கன்னட படத்திலும் நடிக்கவிருக்கிறாராம் இந்த தமிழ் நடிகை.
இவர் அனைத்து மொழிகளிலும் நடித்து வருவதால், இவரு எதையும் விட மாட்டாரு போலவே என மற்றவர்கள் புலம்பி வருகிறார்களாம்.