கும்கி 2 படத்திற்காக தாய்லாந்தில் குட்டி யானையை பிடித்த பிரபுசாலமன்

கும்கி 2 படத்திற்காக தாய்லாந்தில் குட்டி யானையை பிடித்த பிரபுசாலமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhu solomon2012 ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், விக்ரம் பிரபு – லஷ்மிமேனன் புதுமுகங்களாக அறிமுகமான “ கும்கி “ படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் “ கும்கி 2 “ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவுற்றது, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. நிறைய படங்களில் முதல் பாகத்தின் கதை தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் கும்கி படத்திற்கும், கும்கி 2 படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப் பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொடவேண்டி இருக்கிறது என்கிறார் பிரபுசாலமன்.

நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாக வில்லை. மற்றும் வில்லனாக ஹரிஷ் பெராடி, ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.

டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது.

ஒளிப்பதிவு – சுகுமார்

இசை – நிவாஸ் K.பிரசன்னா

எடிட்டிங் – புவன்

கலை – தென்னரசு

ஸ்டன்ட் – ஸ்டன் சிவா

தயாரிப்பு மேற்பார்வை – பிரபாகரன்

தயாரிப்பு – பென் இந்தியா லிமிடெட் திரு ஜெயந்திலால் காடா.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபுசாலமன்.

படம் பற்றி இயக்குனர் பிரபுசாலமன் கூறியதாவது..

கும்கி 2 பிரமாண்டமான ஒரு படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல் தான் கும்கி 2.

குட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம், யானை கிடைத்தால் பர்மிஷன் கிடைக்கல, பர்மிஷன் கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்க வில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக இந்த கும்கி 2 இருக்கும்.

வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும் நிவாஸ் K. பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்றார் பிரபுசாலமன்.

தயாரிப்பு – பென் இந்தியா லிமிடெட் திரு ஜெயந்திலால் காடா.

இந்த நிறுவனம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற சிங்கம் 3 மெர்க்குரி மற்றும் தயாரிப்பில் இருக்கும் சண்டக்கோழி 2 படதயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மிக பிரமாண்டமாக கும்கி 2 படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

காரைக்கால் டூ ஹிமாச்சல்; ஜிப்ஸி பயணத்தை தொடங்கிய ஜீவா-ராஜுமுருகன்

காரைக்கால் டூ ஹிமாச்சல்; ஜிப்ஸி பயணத்தை தொடங்கிய ஜீவா-ராஜுமுருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gypsyராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது.

ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம்‘ஜிப்ஸி ’. இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன்.

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது. இதில் ஜீவா, இமாசல பிரதேச அழகி நடாசா சிங் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இதன் முதற்கட்ட படபிடிப்பு காரைக்காலில் இன்று தொடங்கியது. இதில் படக்குழுவினருடன் பாடலாசிரியர் யுகபாரதி கலந்து கொண்டார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ் கே செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

கீ, கொரில்லா ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகும் ‘ஜிப்ஸி ’ படத்திற்கு படபிடிப்பு தொடங்கிய தருணத்திலேயே பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படபிடிப்பு இமாசல பிரதேசத்தில் நடைபெறவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தெரிவித்திருக்கிறார்.

60 மணி நேரம் அசராமல் உழைத்த பீச்சாங்கை கார்த்திக்

60 மணி நேரம் அசராமல் உழைத்த பீச்சாங்கை கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

peechangai karthiபீச்சாங்கை வெற்றியை தொடர்ந்து நடிகர் பீச்சாங்கை கார்த்திக் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அவர் நடிக்கும் படத்திற்கு.

ஷூட்டிங் ஸ்பாட்க்கு சரியான நேரத்திற்கு வராத சில நடிகர்கள் மத்தியில் நடிகர் பீச்சாங்கை கார்த்திக் படப்பிடிப்பு தளத்திலேயே மாரி மாரி நடித்துக்கொண்டிருக்கிறாராம். புதிய இயக்குனர் மிலன் இயக்கும் கமர்ச்சியல் படத்தில் அதிகாலை 6 மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பித்து இரவு 3 மணி வரைக்கும் படப்பிடிப்பு நடைபெற்றது , அதைத்தொடர்ந்து திருவள்ளூர் சென்று விளம்பர படம் ஓன்றில் இன்று அதிகாலை 6:30 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவடைகிறது. அங்கிருந்து புறப்பட்டு நேசன் மற்றும் சிம்புதேவன் போன்ற பெரிய இயக்குனருடன் உதவி இயக்குனராக பனி புரிந்த டீ.ஆர்.பாலா டுவீலர் பந்தயத்தை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மறுநாள் அதிகாலை 6 மணி அளவில் தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவடைகிறது. மறுபடியும் இயக்குனர் மிலன் படப்பிடிப்பு இரவு 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணிக்கு நிறைவடைகிறது தொடர்ந்து 60 மணி நேரம் இடைவிடாத பட பிடிப்பில் நடித்துள்ளார்..

தொடர்ந்து 60 மணி நேரம் படப்பிடிப்பு நடைபெறுகிறதே உங்களுக்கு சோர்வாக இல்லையா என்று கார்த்தியிடம் கேட்ட போது எனக்கு வேலை பார்ப்பது ரொம்ப பிடிக்கும் எனக்கு இதுவரை சோர்வாகவில்லை என்று கூறினார்

பீச்சாங்கை கார்த்திக்கை வைத்து படம் எடுத்தால் ஹீரோ ஷூட்டிங் ஸ்போட்க்கு லேட்டா வர பிரச்சனையே இருக்காது படப்பிடிப்பும் விரைவில் முடியும் தயாரிப்பாளருக்கும் எந்த வித நஷ்டமும் ஆகாது. சினிமாவில் இப்படிப்பட்ட ஹீரோ இருப்பது ஆச்சரியம்தான்.

வெல்வெட் நகரம் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விஜய்சேதுபதி

வெல்வெட் நகரம் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DfTrD3PVMAEOhT5நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா ஆகியோரைப் போல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் வரலட்சுமி.

தற்போது விஜய்யுடன் தளபதி 62, தனுஷின் ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’ ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் வெல்வெட் நகரம் என்ற படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கி வருகிறார்.

சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டர் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் பலரது கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம்.

பிரபுதேவா-நிவேதா ஜோடியுடன் இணைந்தார் தெறி வில்லன்

பிரபுதேவா-நிவேதா ஜோடியுடன் இணைந்தார் தெறி வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director mahendranபிரபுதேவா நடித்த `யங் மங் சங்’, `லக்‌ஷ்மி’ உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபுதேவா முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

இவருடன் நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ்மேனன் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

கடந்த வருடம் வெளியான தெறி படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் மகேந்திரன் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நேமிஷந்த் ஜபக் தயாரிக்கிறார்.

இமான் இசையமைக்கவுள்ள இப்படத்தை முகில் என்பவர் இயக்கவுள்ளார்.

சொடக்கு மேல பாட்டுக்கு ஆட்டம் போட்டு சுளுக்கு எடுக்கும் சாயிஷா

சொடக்கு மேல பாட்டுக்கு ஆட்டம் போட்டு சுளுக்கு எடுக்கும் சாயிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sayyesha dance for sodakku mela songவிஜய் இயக்கி வனமகன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் சாயிஷா.

அதில் தன் நடனத்தாலே ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார்.

தற்போது ஆர்யாவுடன் கஜினிகாந்த், விஜய்சேதுபதியுடன் ஜுங்கா, கார்த்தி உடன் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்றுள்ள ’சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

தான் நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டத்தை பார்த்தால் ரசிகர்களுக்கு சுளுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.

More Articles
Follows