தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
காதல் புனிதமானது.. எதையும் முறியடிக்கும் சக்தி காதலுக்கு உண்டு.. என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… காதலில் ஜாதி புகுந்தால் என்ன பிரச்சனை வரும்.. அதிலும் அரசியல் கலந்தால் அதனால் யாருக்கு லாபம்? என்பதை அலசியுள்ளது இந்த நட்சத்திரம் நகர்கிறது.
மேலும் காதல் என்பது.. ஒரு ஆணுக்கு பெண்ணின் மீதும் ஒரு பெண்ணுக்கு ஆணின் மீதும் வருவது மட்டுமல்ல. ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணின் மீதும் வரலாம்.. ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண்ணின் மீதும் வரலாம்.. என்பதை ரஞ்சித் தன் பாணியில் சொல்லி இருக்கிறார். திருநங்கை காதலும் உண்டு.
கதைக்களம்…
ஒரு நாடக பயிற்சி கல்லூரியில் சில நட்சத்திரங்கள் இணைகின்றனர்.. அவர்கள் காதல் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்ற போது அவர்களுக்குள் ஏற்படும் காதலும் மோதலும் தான் கதை.
துஷாரா மற்றும் காளிதாஸ் ஆகியோரின் உடலுறவு காட்சி தான் படத்தின் ஓப்பனிங்.
அப்போது இளையராஜா பாடலை துஷாரா பாட அதை நிறுத்தச் சொல்கிறார் காளிதாஸ்.. இளையராஜாவை உனக்கு பிடிக்கவில்லை என்றால் உன்னை எனக்கு பிடிக்காது என்கிறார் துஷாரா..
ஒரு கட்டத்தில்..”உங்கள் ஜாதி புத்தி மாறவே இல்லை” என்கிறார் காளிதாஸ். அப்போது முதல் அவர்களின் காதல் ஜாதியால் உடைபடுகிறது.
இவர்கள் பயிற்சி பெறும் நாடக குழுவில் கலையரசன் வந்து இணைகிறார். அதன் பிறகு என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதி கதை.
கேரக்டர்கள்…
ரஞ்சித் இயக்கத்தில் இணைந்து விட்டால் கலையரசனுக்கு எங்கிருந்துதான் கலை ஆர்வம் வருமோ தெரியாது.? அப்படி ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். அதுவும் அவர் திக்கி திணறி தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுவது சூப்பர்.
இடைவெளி காட்சியின் போது கலையரசன் குடித்துவிட்டு செய்யும் கலாட்டா செம.
அடக்கமான அமைதியான சாக்லேட் பாயாக காளிதாஸ். நிதானமாக தன் கேரக்டரை நிறைவு செய்திருக்கிறார்.
இந்த படத்தின் அனைத்து நட்சத்திரங்களையும் ஓரங்கட்டி விட்டு சிங்கிளாக துவம்சம் செய்திருக்கிறார் துஷாரா.
நான் என்றால்.. நான் மட்டுமல்ல என் சமூகமும் தான். என் அடையாளத்தால் உடைக்கப்பட்ட கண்ணாடி துண்டுகளை நானே இப்போது இணைத்து உருவெடுத்திருக்கிறேன் என்று துஷாரா சொல்லும் போது தியேட்டரில் கைதட்டல் பறக்கும்.
யதார்த்த பெண்ணாக பெண்ணியவாதியாக வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்களை கவர்கிறார் இந்த நட்சத்திரம் துஷாரா.
இவர்களுடன்…
ஹரிகிருஷ்ணன் – யஸ்வந்திர
வினோத் – சேகர்
ஞானபிரசாத் – அய்யாதுரை
சுபத்ரா ராபர்ட் – கற்பகம்
சபீர் கல்லாரக்கல் – சகஸ் ரட்சகன்
ரெஜின் ரோஸ் – சுபீர்
தாமு – ஜோயல்
ஷெரின் செலின் மேத்யூ – சில்வியா
வின்சு ரேச்சல் சாம் – ரோஷினி ஆகிய நட்சத்திரங்களும் உண்டு.
டெக்னீஷியன்கள்…
ஒளிப்பதிவு கிஷோர் குமார்.. பாண்டிச்சேரியின் கடல் அழகை இன்னும் சிறப்பாக காட்டியிருக்கிறார். ஆரோவ்வில் கலாச்சாரத்தையும் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.
தென்மாவின் இசையில் பாடல்கள் ஓகே. இசையும் கதையுடன் பயணிப்பதால் நம்மால் அந்த கதைக்குள் பயணிக்க முடிகிறது. பாடல்களை உமாதேவி மற்றும் அறிவு எழுதி உள்ளனர்.
படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். படத்தொகுப்பு : செல்வா R.K.
தயாரிப்பு – யாழி பிலிம்ஸ் –
விக்னேஷ் சுந்தரேசன்.
மனோஜ் லியோனல் ஜேசன்.
தமிழகத்தில் நாம் நிஜத்தில் கண்ட ஆணவக் கொலைகளையும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் சமூகத்தையும் நேரடியாக காட்டி இருக்கிறார்.
காதலின் பெயரால் இங்கு சிலர் விளையாடும் அரசியலையும் தைரியமாக சொல்லி இருக்கிறார் ரஞ்சித். தாழ்த்தப்பட்ட சமூகம் ஒடுக்கப்பட்ட சமூகம் என்று மறைமுகமாக சொல்லாமல் எஸ்சி SC சமூகத்தைச் சார்ந்த பெண் என்பதையெல்லாம் ஓபனாகவே பேசி இருக்கிறார் டைரக்டர்.
இது தியேட்டர் டிராமா கதை என்பதால் அது அப்படியே ஓடவிட்டு படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். சில நேரம் அது நமக்கு சோர்வை தருகிறது. ஒரு சினிமாவை பார்ப்பது போல் அல்லாமல் ஒரு டாகுமெண்டரி படத்தை பார்ப்பதாக தோன்றுகிறது.
மேலும் படத்தின் வசனங்கள் நமக்கான அரசியலை புரிய வைத்தாலும் அது ஒரு பாடம் எடுப்பது போன்ற உணர்வை தருகிறது அதை தவிர்த்து இருக்கலாம். ரஞ்சித்தின் வழக்கமான சாதிய படம் இது.
ஆக… நட்சத்திரம் நகர்கிறது… ஜாதீயில் ரஞ்சித் வைத்த காதல் தீ..
Natchathiram Nagargiradhu Movie review and rating