தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
‘மகாநடி’ என்ற படத்திற்காக தேசிய விருது பெற்றபோது இந்தியா முழுவதும் பிரபலமானார். மேலும் ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் துபாய் தொழிலதிபர் பர்ஹான் என்பவரை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வந்தன.
மேலும் இருவரும் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கீர்த்தி தன் சமூக வலைத்தளப் பக்கத்தில்.. “இது போன்ற வதந்திகளில் என் அன்பான நண்பரை இழுக்க வேண்டாம்.. நான் திருமணம் செய்யும் நபரை நானே முறைப்படி அறிவிப்பேன்.. இதுவரை யாரையும் தேர்வு செய்யவில்லை” என தெரிவித்துள்ளார் கீர்த்தி
இது குறித்து கீர்த்தியின் தந்தை சுரேஷ் அளித்துள்ள விளக்கத்தில்…
“கீர்த்தியும் ஃபர்ஹானும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்.. ஃபர்ஹானுக்கு பிறந்தநாள் என்பதால் அவருடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதைப் பார்த்தவர்கள் தவறாக பரப்பி விட்டார்கள். இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.. என் மகள் திருமணம் என்றால் நானே முறைப்படி அறிவிப்பேன்” என தெரிவித்துள்ளார் கீர்த்தியின் தந்தை சுரேஷ்.
Keerthy and her father Suresh open talk about her marriage