தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று ஜனவரி 11ஆம் தேதி விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியானது.
இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எனவே இந்த படத்தை வரவேற்கும் வகையில் கட் அவுட்டுகள் பேனர்கள் வைத்து படத்தை வரவேற்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரியில் இந்த பேனர்களை அனுமதியின்றி விதிகளை மீறி வைத்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் சட்ட விதிகளை மீறி பேனர்கள் வைத்த விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Police registered a case against Vijay-Ajith fans