தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விருமன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசும்போது…
சூர்யா வந்தாலே தாங்காது, மாறன் விருமன் இருவரும் வந்தால் சொல்லவா வேண்டும்? மதுரையே ஆரவாரமாக இருக்கிறது. ரசிகர்கள் சார்பாக சூர்யா அண்ணன் தேசியவிருது
பெற்றதற்கு வாழ்த்துகள்.
இந்த விருதுகளெல்லாம் சினிமாவில் நீங்கள் உழைத்த உழைப்பிற்கு கிடைத்தது. ஆயிரம் கோவில்கள் கட்டுவதைவிட, ஆயிரமாயிரம் அன்னச் சத்திரம் கட்டுவதைவிட, ஒரு ஏழைக்கு கல்வி கொடுப்பது பல ஜென்மத்திற்கு பேசப்படும்.
அவரின் குடும்பமும் அதைத் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், உங்கள் பின்னால் உறுதுணையாக பலரும் இருக்கிறார்கள்.”
என பேசினார் சூரி. இந்த பேச்சு சர்ச்சையானது.
இந்த நிலையில் இயக்குனர் பேரரசு சூரிக்கு ஆதரவாக தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
அவரின் பதிவில்…
பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் சூர்யா அவர்கள் உதவி செய்து வருகிறார்கள்.
அதை பாராட்டும் நோக்கத்தோடு சூரி பேசிய பேச்சு தான் கோயில் கட்டுவதைவிட படிக்க வைப்பது மேல் என்று பேசியுள்ளது.
பக்தியை விட படிப்பு முக்கியம் என்ற கருத்தைத்தான் சொல்ல வருகிறார்.
இதை கோயிலுக்கு எதிரானதாக, இந்து மதத்திற்கு எதிரானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
சூரி இந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல !அவர் நடத்தும் உணவகம் பெயர் கூட அம்மன் உணவகம் என்றுதான் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அவரை தவறாக நினைப்பதையும் தவறாக விமர்சிப்பதையும் தவிர்க்கலாம் என்பது என் கருத்து.
*பேரரசு
Perarasu support Soori for Viruman event controversial speech