தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் ‘சினம்’.
அருண் விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். கதை, திரைக்கதை ஆர்.சரவணன் எழுதியுள்ளார்.
இதில் நாயகியாக பாலக் லால்வனி நடிக்க முக்கிய வேடத்தில் காளிவெங்கட் நடித்திருக்கிறார்.
நடிகர் விஜய்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷபிர் இசையமைத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
‘சினம்’ படம் செப்டம்பர் 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளள நிலையில் இன்று இசை வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில்… சிவாங்கி மேடை ஏறினார்.
பின்னர் “சொல்லடி என் கண்மணி….” என்ற பாடலை அருண்விஜய் மேடையில் பாடினார்.
பின்னர் பார்த்திபன் பேசியதாவது…
“நான் அருண்விஜய்க்காக வரவில்லை. அருண் (இந்த பூமிக்கு) வர காரணமான விஜயகுமாருக்காக வந்தேன்.
விஜயகுமார் குடும்பத்தை 30 வருடங்களாக தெரியும். நெருக்கமான பழக்கம். அவரின் குடும்பத்தில் அனைவருமே அழகு.
அருண்விஜய்யை பார்த்தால் போலீசுக்கு பொறாமை.. ஏனென்றால் தமிழக போலீஸ் என்னை போல (தொப்பை) இருப்பார்கள். ஆனால் அருண் செம ஃபிட்டாக இருக்கிறார்.
இந்த பட மியூசிக் டைரக்டர் Shabir or Shabeer தெரியல.. சாங்ஸ் போதையாக உள்ளது.”
என பார்த்திபன் அவரது பாணியில் பேசினார்.