தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இலங்கையில் போர் நடைபெற்ற போது தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர் முத்தையா முரளிதரன் என்பதால் அந்த படத்தில் மக்கள் செல்வன் நடிக்க கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்தநிலையில், இப்பட சர்ச்சைகள் குறித்து முத்தையா முரளிதரனே ஓர் அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.
நான் தமிழ் பற்றாளன் என்றெல்லாம் எவ்வளவோ சொல்லி பார்த்தார்.
ஆனாலும் எதிர்ப்புகள் ஓயவில்லை. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விஜய்சேதுபதி கூட இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளை தவிர்த்தார்.
இந்தநிலையில், இப்பட சர்ச்சைகள் குறித்தும் விஜய்சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிட வேண்டி முத்தையா முரளிதரனே மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த விஜய்சேதுபதி.. நன்றி வணக்கம் என்பதை மட்டும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த இரு செய்திகளை பார்த்த மக்கள் செல்வன் என் பெயரிட்ட சீனுராமசாமி தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…
தனது ஹீரோ அந்தஸ்தை உயர்த்திக் காட்ட நினைக்காமல்
எப்போதும் போல எளிமையாக
நன்றி வணக்கம்
என்று தன்னை நாடி வந்தவருக்கு
விடை தந்து தமிழ் மக்களின் அன்புக்கு அமைதி வழியில் மேன்மை செய்த மக்கள்செல்வன் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள்.
என பதிவிட்டுள்ளார்.
Muthiah Muralidaran statement about 800 movie and Vijay Sethupathi reaction