போர்க்கள பகுதியில் இருந்தவர் முத்தையா.; அவரின் கதையை சொல்வது எளிதானது அல்ல – ஸ்ரீபதி

போர்க்கள பகுதியில் இருந்தவர் முத்தையா.; அவரின் கதையை சொல்வது எளிதானது அல்ல – ஸ்ரீபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார்.

அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘800’ என்ற படம் தயாராகி வருகிறது.

மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். இதில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலக்க இப்படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியுள்ளார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (08.09.2023) சென்னையில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி பேசியதாவது…

“முத்தையா சார் சிவில் வார் நடந்த ஒரு இடத்தில் இருந்து வந்துள்ளார். அது சாதாரணமானது கிடையாது. அதனால், இவர் கதையை சொல்வதும் அத்தனை எளிதாக இல்லை.

நிறைய பொறுப்பு இருந்தது. அவரது பூர்வீகம், குழந்தைப் பருவம், குடும்பம் என வாழ்க்கை வரலாறு அனைத்தையும் தெரிந்து கொண்டேன். நிறைய சவால்களைத் தாண்டி இந்தப் படத்தை எடுத்து முடித்து வெளியிட உள்ளோம். உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை”.

ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் பேசியதாவது, “கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அப்படி இருக்கும் போது முத்தையா சாருடைய படம் நான் செய்வேன் என எதிர்பார்க்கவே இல்லை. பின்பு படம் ஆரம்பித்ததும் ஒரு சிறு தடங்கல் வந்தது. மீண்டும் மதுர் மிட்டலுடன் ஆர்மபித்தது மகிழ்ச்சி. அவர் அப்படியே முத்தையா போலவே இருந்தார். எந்தவிதமான தடையும் இல்லாமல் படத்தை முடித்தோம். வழக்கமான கிரிக்கெட் படத்தைப் போல அல்லாமல் அவரது வாழ்க்கையும் இதில் இருக்கும். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

காஸ்ட்யூம் டிசைனர் பூர்த்தி…

“காஸ்ட்யூம் டிசைனராக எனக்கு இப்படி ஒரு கிரிக்கெட் படம் கிடைத்ததில் பெருமையாக உள்ளது. என்னுடைய முதல் கிரிக்கெட் படம் என்பதால் இது என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. படத்தைப் பார்த்து விட்டு சொல்லுங்கள்”.

ஆக்‌ஷன் கோரியோகிராஃபர் அசோக் பேசியதாவது…

“முதலில் இயக்குநர் ஸ்ரீபதிக்கு பெரிய நன்றி. படத்தில் கதைக்கு தேவையான இரண்டு ஸ்டண்ட் உள்ளது. நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும்”.

ஸ்ரீஹரி மூவிஸ் கிருஷ்ண பிரசாத், “சமீபத்தில் ‘யசோதா’ படம் செய்தோம். இயக்குநர் ஸ்ரீபதி எங்கள் மகன் போல. இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இந்தப் படத்தை வெளியிடுகிறோம். உணர்ச்சிகரமான படமாக வந்துள்ளது. வெறும் கிரிக்கெட் படமாக மட்டுமல்லாமல் அதற்கு பின்னால், சிறுவயதில் இருந்து ஒரு மனிதனுடைய போராட்டமாக இந்தப் படம் இருக்கும். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பேசியுள்ளார்.

Its not easy to film Muthaiah Muralidharan biopic says Sripathy

படம் பார்த்ததுக்கு நீங்கதான் கார் கொடுக்கணும்.. கிண்டல் அடித்த MP..; ஓட்டு போட்டவர்களுக்கு என்ன செஞ்சிங்க என கேள்வி.?

படம் பார்த்ததுக்கு நீங்கதான் கார் கொடுக்கணும்.. கிண்டல் அடித்த MP..; ஓட்டு போட்டவர்களுக்கு என்ன செஞ்சிங்க என கேள்வி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு ஒன்றரை கோடி மதிப்பிலான கார்களை பரிசாக வழங்கி இருந்தார் அந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

இதேபோன்று பல திரைப்பட தயாரிப்பாளர்களும் தங்கள் ஹீரோ மற்றும் இயக்குனர்களுக்கு பரிசளித்து உள்ளனர்.

(கமல் தயாரிப்பு நடித்த ‘விக்ரம்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அந்த படத்தின் இயக்குனர் லோகேஷக்கு உயர்ரக கார் ஒன்றை கமல்ஹாசன் பரிசளித்து இருந்தார்.)

தற்போது ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று (செப்.08) காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் மறைமுகமாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “நேற்று இரவு ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அவர் எந்த படத்தை பார்த்தார் என குறிப்பிடவில்லை.

இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவர் ‘ஜெயிலர்’ படத்தைத்தான் சொல்கிறார் என்று கூறி அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நீ எம்பி ஆகி மக்களுக்கு ஒன்னும் செய்யல.. இப்படி படம் மட்டும் பார்த்துட்டே இரு

Sir,

As an elected MP from #Sivagangai LS Constituency, why you have to be gifted a luxury car for watching a movie? 🤔

Had you done any favour for the movie producer for the movie production and it’s sucessful release?

#Kollywood #PoliticsToday

சார் அப்டி பார்த்தா உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு நீங்க தான் ஆளுக்கு ஒரு கார் வாங்கி தரணும்.

அடுத்தவர் வெற்றியை, வேண்டுமென்றே தேவையில்லாம நக்கலடித்து பெயர் வாங்கலாம்னு நெனச்சி இப்படி கீழ்த்தரமான பதிவை போட்டு உங்கள நீங்களே அசிங்கப்படுத்திக்கறீங்க!

If dbt, ask your Dad on the real power of Superstar & your Dad was behind him those days. Don’t forget your past.

இவ்வாறு பல பதிவுகளை போட்டு தங்கள் கருத்துக்களை தொண்டர்களும் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

Social media trolls MP Karti Chidambaram

OFFICIAL த்ரிஷா நடித்துள்ள ‘தி ரோட்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

OFFICIAL த்ரிஷா நடித்துள்ள ‘தி ரோட்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை த்ரிஷா கடைசியாக ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

த்ரிஷா தற்போது ‘தி ரோட்’ (the road) என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் மதுரையில் கடந்த 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்நிலையில், ‘தி ரோட்’ படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

trisha’s ‘the road’ movie releasing on october 6th

நடிகர் மாரிமுத்து மரணத்திற்கு இதான் காரணமா.? ஜோசியர் சாபம் பலித்ததா.?

நடிகர் மாரிமுத்து மரணத்திற்கு இதான் காரணமா.? ஜோசியர் சாபம் பலித்ததா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று செப்டம்பர் 8ம் தேதி நடிகர் மாரிமுத்து காலமானார். அவர் ‘எதிர்நீச்சல்’ டிவி சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் மரணம் அடைந்தார்.

சில மாதங்களுக்கு முன் அவர் ஒரு தனியார் டிவி நடத்திய ஒரு நிகழ்வில் பங்கேற்றார். அப்போது.. “தான் ஒரு நாத்திகவாதி. கடவுளை நம்பாதவன் என்றெல்லாம் பேசி இருந்தார். அந்த வீடியோக்கள் வைரலானது.

அந்த விவாத நிகழ்ச்சியில்.. “ஜோசியருக்கும் நடிகர் மாரிமுத்துக்கும் விவாதம் வந்தபோது.. உங்களுக்கு இடுப்புக்கு மேலே உடலில் ஒரு பிரச்சனை இருக்கிறது என தெரிவித்து இருந்தார்.

அதற்கு மாரிமுத்துவோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.. இடுப்புக்கு மேலே இதயம்தான் இருக்கிறது. அது நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது என தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்து விட்டதால் அந்த வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது.. அதனால்தான் தற்போது அது உங்கள் உயிரை பறித்து விட்டது எனவும் சிலர் கருத்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Reason behind Director Actor Marimuthu death

குணசேகரன் மறைவை தாங்க முடியாமல் ‘எதிர்நீச்சல்’ குழுவினர் குமுறல்

குணசேகரன் மறைவை தாங்க முடியாமல் ‘எதிர்நீச்சல்’ குழுவினர் குமுறல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை 8.30 மணியளவில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57.

இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், மாரிமுத்துவின் உடலுக்கு ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் நேரில் வந்து செலுத்தினர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் திருச்செல்வம் கூறியதாவது,

இதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. இன்று காலையில் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வருவதாக சொல்லியிருந்தார். இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்து இப்படி ஆகியிருந்தால், அது வேறு. ஆனால் இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது குடும்பத்தினர், ‘எதிர்நீச்சல்’ டீம், ரசிகர்கள் அனைவருக்குமே மிகப்பெரிய இழப்பு. நாங்கள் ‘எதிர்நீச்சல்’ குழுவினர் அனைவருமே மருத்துவமனையில்தான் இருக்கிறோம். இதற்கு மேல் என்னால் எதுவும் பேசமுடியவில்லை’.

இவ்வாறு திருச்செல்வம் சோகத்துடன் பேசினார்.

The death of Marimuthu has shocked ethirneechal serial team

ரீலீசுக்கு முன்பே விஜய் படைத்த சாதனை.; இங்கு இல்லை இங்கிலாந்துல.!

ரீலீசுக்கு முன்பே விஜய் படைத்த சாதனை.; இங்கு இல்லை இங்கிலாந்துல.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது.

சென்னை, செப்டம்பர் 08, 2024: இன்று, அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான “லியோ” இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 10000+ டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த “வாரிசு”, திரைப்படம் ஜனவரி 2023-ல் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது. இந்நிலையில் “லியோ” திரைப்படம் அதை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.

“லியோ” திரைப்பட அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பிரமாண்டமானதாக இருந்து வருகிறது. அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், லியோ படத்தின் யூகே மற்றும் ஐரோப்பாவிற்கான திரையரங்கு உரிமைகளைப் பெற்றுள்ளது.

பட வெளியீட்டிற்கு ஆறு வாரங்களுக்கு முன்பே முன்பதிவுகளை தொடங்கி முன்னோடியான நகர்வை மேற்கொண்டது. இந்த உத்தி மிகப் பிரமாதமாக பலனளிப்பதாக தெரிகிறது.

“லியோ” இப்போது இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாக முன்பதிவுகளைத் தொடங்கிய முதல் இந்தியத் திரைப்படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

“லியோ” திரைப்படத்திற்கு கிடைத்து வரும் அற்புதமான வரவேற்பால், அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மிகவும் உற்சாகமடைந்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் கூடுதலான டிக்கெட்கள் விற்பனையாகி சாதனை படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அஹிம்சா என்டர்டெயின்மென்ட் தளபதி விஜய்யின் “பீஸ்ட்” திரைப்படத்தை அமெரிக்காவில் விநியோகம் செய்தது. ‘பீஸ்ட்’ படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல், அமெரிக்க நாட்டில் விஜய்யின் அதிக வசூலையும் பெற்றது.

இதே போன்று, இங்கிலாந்தில் அவர்கள் வெளியிட்ட “வாரிசு” அதே மைல்கல்லை எட்டியதோடு, இங்கிலாந்தில் தளபதி விஜய்க்கு மற்றொரு சிறந்த வருவாயை ஈட்டி காட்டி சாதனை படைத்தது.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இது குறித்து கூறும்போது, “ லியோ படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால், மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவை தந்து வருகிறார்கள்.

இங்கிலாந்தில் இந்தியப் படமொன்றின் மிகப்பெரிய வெளியீடாக இப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

வெளிநாட்டு தமிழ் திரைப்பட விநியோகத்தில் புகழ்பெற்ற நிறுவனமான, அஹிம்சா என்டர்டெயின்மென்ட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நடவடிக்கைகளுடன் புதுமையான அணுகுமுறையில் “பீஸ்ட்”, “வாரிசு”, “மாமன்னன்”, “போர் தொழில்”, “கோப்ரா”, உட்பட பல படங்கள் பிரமாண்ட சாதனைகள் படைத்துள்ளது.

“நானே வருவேன்”, “வெந்து தணிந்தது காடு”, “காத்து வாக்குல ரெண்டு காதல்”, “லவ் டுடே”, மற்றும் “விடுதலை பார்ட் 1” போன்ற படங்களும் இந்த வரிசையில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijays LEO Sets Pre release Record in the UK

More Articles
Follows