விஜய் திரையில் நடித்து காட்டியதை நிஜத்தில் செய்து அசத்திய ரோபோ சங்கர்

விஜய் திரையில் நடித்து காட்டியதை நிஜத்தில் செய்து அசத்திய ரோபோ சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாஸ்டர்’ படத்தில் சீர்திருத்த பள்ளி மாணவர்களுக்காக விஜய் ஆடி பாடிக்கொண்டே குட்டி ஸ்டோரி சொல்லி நிறைய அட்வைஸ் செய்வார்.

அந்த பாடலும் மிகப்பெரிய ஹிட்டானது.

விஜய் படத்திற்காக நடித்து காட்டியதை தற்போது ரோபோ சங்கர் நிஜத்தில் செய்து காட்டியிருக்கிறார். இனி தொடர்ச்சியாக செய்ய உள்ளார்.

அதன் விவரம் வருமாறு…

நடிகர் ரோபோ சங்கர் தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகர். காமெடி மட்டுமில்லாமல் சமூக சேவையில் தன்னை முன்னிறுத்தி முதல் ஆளாக களமிறங்குபவர்.

வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு உதவுவதாக இருக்கட்டும் , வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு தேடிச்சென்று உதவுவது என ரோபோ சங்கரின் வழி எப்போதும் தனி வழி தான்.

கரோனா சூழலால் உலகமே மன உளைச்சலுக்குள் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் சிறைக்கைதிகளாக இருக்கும் மனிதர்களுக்காகவும் , சீர்திருத்தப்பள்ளி மாணவர்களுக்காகவும் முதல் ஆளாக களத்தில் இறங்கியுள்ளார்.

75 வது ஆண்டு சுதந்திர தினத்தன்று இந்தப்பணியைத் தொடங்கியுள்ளார்.

முதற்கட்டமாக தஞ்சாவூரில் உள்ள சீர்திருத்தப்பள்ளிக்குச் சென்று அங்கு இருந்த மாணவர்களை தன் நகைச்சுவை அனுபவங்கள் மூலம் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளார்.

தன் கவலைகளை மறந்து அத்தனை பேரும் சிரிப்பில் மூழ்கியுள்ளனர். முதற்கட்ட முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இனி தொடர்ச்சியாக சிறப்பு நாட்களில் சிறைச் சாலைகளுக்குச் சென்று கைதிகளை மகிழ்விக்கும் முடிவில் இருக்கிறார்.

திரையில் வந்தோமா கல்லாவை நிரப்பினோமா என்று செல்லாமல் மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு குறிப்பாக சிறைச்சாலை கைதிகளுக்காக களத்தில் இறங்கிய ரோபோ சங்கரை சக நடிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Netizens praises Actor Robo Shankar’s stress relief activities

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் கங்கை அமரன்.; அருண் விஜய் – ஹரியுடன் கூட்டணி

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் கங்கை அமரன்.; அருண் விஜய் – ஹரியுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இசை அமைப்பாளரும் , இளையராஜாவின் தம்பியுமான கங்கைஅமரன், பல படங்களில் வசனகர்த்தாவாகவும், பல ஹிட் பாடல்களையும் எழுதியும், பல ஹிட் படங்களை இயக்கியும் உள்ளார்.

இசை அமைப்பாளராக, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, சுவரில்லாத சித்திரங்கள் , ராமாயி வயசுக்குவந்துட்டா, மௌன கீதங்கள், வாழ்வே மாயம், நம்ம ஊரு நல்ல ஊரு, என் தங்கச்சி படிச்சவ போன்ற மாபெரும் ஹிட் படங்கள் உட்பட சுமார் 55 படங்களுக்கு பணிபுரிந்துள்ளார்.

ஆரம்பத்தில், 1979ல் புதிய வார்ப்புகள் , 80ல் பாமா ருக்குமணி படங்களில் நடித்த கே.பாக்கியராஜ்-க்கு டப்பிங் குரல் கொடுத்தார் கங்கைஅமரன்.

அதன் பின்பு பாடகராகவும் ஏழு படங்களில் பாடியுள்ளார்.

சூப்பர் ஹிட் படமான கோழிகூவுது படம் மூலம் டைரக்டராகவும் மாறினார்.

தொடர்ந்து, எங்க ஊரு பாட்டுக்காரன், செண்மகமே செண்பகமே, கரகாட்டக்காரன், கும்பகர தங்கையா, வில்லு பாட்டுக்காரன், சின்னவர், தெம்மாங்கு பட்டுக்காரன் போன்ற ரிகார்ட் பிரேக் செய்த படங்கள் உட்பட சுமார் 19 படங்கள் டைரக்ட் செய்துள்ளார்.

அதேபோல், 16 வயதினிலே படத்தில் இடம் பெற்ற செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே, சோழம் விதக்கையிலே.. இந்த பாடல்கள் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார் .

கிழக்கே போகும் ரயில் – பூவரசம்பூ.. பாடல், முள்ளும் மலரும் – நித்தம் நித்தம் நெல்லு சோறு .. நிழல்கள்- பூங்கதவே.. போற்ற சுமார் 35 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

டைரக்டர் வெங்கட் பிரபுவின் தந்தையான இவர் அவ்வபோது முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்வார். கரகாட்டக்காரன், இதயம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சென்னை28, போன்ற படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களும் ஹிட் தான்.

2013 க்கு பிறகு மீண்டும், பிரபல டைரக்டர் ஹரி இயக்கத்தில் பெயரிடப்படாத #AV33 என்று உருவாகும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். காரைக்குடியில் அருண்விஜய் நடித்து வரும் இந்த படத்தில், கதையின் ஒரு முக்கிய திருப்பமான காட்சியில் ஜோசியராக நடித்துள்ளார்.

காலையில் கதை காட்சிகளும்.. இரவில் சண்டை காட்சிகளுமாக இரவு பகலாக அருண்குமார் நடித்து வருகிறார்.

அனல் அரசு சண்டை காட்சி அமைத்தார்.
தூத்துக்குடி, காரைக்குடியெய் தொடர்ந்து ராமேஸ்ரவத்தில் தொடர்ந்து படபிடிப்பு நடைபெறும்.

அருண்விஜய், பிரியா பவானிசங்கர், ராதிகா, யோகிபாபு, கருடா ராம், ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Music: GV.Prakash
Cinematography: Gopinath
Editing: Antony
Stunt: Anl Arasu
Art: Micheal
PRO: Johnson
Co Producer: G.Arun Kumar
Production: Drumsticks Productions
Produced by: Vedikaranpatti S.Sakthivel .

Gangai Amaren joins part of Arun Vijay – Director Hari movie

உணவகங்கள் இரவு 10 வரை அனுமதி.; புதுச்சேரி காரைக்காலில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

உணவகங்கள் இரவு 10 வரை அனுமதி.; புதுச்சேரி காரைக்காலில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆக. 31-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினரும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலருமான விக்ராந்த் ராஜா இன்று (ஆகஸ்ட் 15) வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.

இது கூடுதல் தளர்வுகளுக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

இதன்படி, தினமும் இரவு 10.30 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

அரசியல், சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து வித கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும்.

பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகள் எப்போதும் போல் இயங்கலாம். அனைத்து வித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக்கூடங்களுடன் கூடிய விடுதிகளில் இரவு 10 மணி வரை, 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். தேநீர் கடைகள், பழச்சாறு நிலையங்கள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கலாம்.

சில்லறை மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம் போல் இயங்கலாம். சரக்கு போக்குவரத்துக்கு வழக்கம் போல் அனுமதி அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து (பேருந்து, டாக்ஸி, ஆட்டோ) இரவு 9 மணி வரை இயங்கலாம்.

பூங்காக்கள், கடற்கரை சாலைகளில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அனைத்து வழிபாட்டுதலங்களிலும் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம், பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்படும். வழிபாட்டுத்தலங்களில் 25 பேர்களுடன் திருமணம் செய்யலாம்.

திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 100 பேரும், இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டும் கலந்துகொள்ளலாம். தொழிற்சாலை பணிகள், கட்டுமானம், உற்பத்தி பணிகள் வழக்கம் போல் நடக்கலாம்.

அனைத்து வித விளையாட்டுக்களுக்கும், பார்வையாளர்களின்றி அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Puducherry Karaikal Covid Lockdown extended up to 31st August 2021

சைவ திருமுறைகள் தமிழில் பாடி முதல் பெண் அர்ச்சகர் சுஹாஞ்சனா அர்ச்சனை

சைவ திருமுறைகள் தமிழில் பாடி முதல் பெண் அர்ச்சகர் சுஹாஞ்சனா அர்ச்சனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1970-ம் ஆண்டில் அனைத்து சாதியினரும் தமிழ்நாட்டில் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டத்தைக் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றினார்.

ஆனாலும் பல்வேறு சட்டச் சிக்கல்களால் காரணமாக இந்த சட்டம் கடந்த 50 ஆண்டுகளாக நிறைவேறவில்லை.

தற்போது 51 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கருணாநிதியின் கனவான இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

அதன்படி நேற்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உட்பட வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாகச் செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோயிலுக்குப் பெண் ஓதுவாராக திருமதி சுஹாஞ்சனா நியமிக்கப்பட்டுள்ளார்.

தேவாரம், திருவாசகம் இரண்டையும் கற்றுத் தேர்ந்த இவருக்கு 27 வயதாகிறது. திருமணத்திற்குப் பின் சென்னை சேலையூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் சுஹாஞ்சனா.

சைவ திருமுறைகளை தமிழில் பாடி கோயிலில் இவர் அர்ச்சனை செய்யும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Tamilnadu first female chanter suhanjana at TN temples

Suhanjana Gopi 27 has been appointed as odhuvar at the Dhenupureeswarar temple in Chennai.

பனை மரம் வெட்ட ஆட்சியர் அனுமதி.. ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம்..; வேளாண் பட்ஜெட்டுக்கு பவன் குமார் பாராட்டு

பனை மரம் வெட்ட ஆட்சியர் அனுமதி.. ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம்..; வேளாண் பட்ஜெட்டுக்கு பவன் குமார் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக விவசாயிகளுக்கு எண்ணற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை.
 
 வேளாண் துறையில் தனி பட்ஜெட் தாக்கல் செய்து விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் அடுத்த கட்டத்திற்கு உயரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி, வேளாண் பட்ஜெட்டை வரவேற்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் கூறியுள்ளார்.  
 
இது குறித்து பவன் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்:
 
“தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு தொடர்ந்து பல கோரிக்கையை முன்வைத்து வந்துள்ளது.

அதில் பலவற்றை நிறைவேற்றும் வகையில் வேளாண் துறைக்கான தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள்  இடம் பெற்றிருந்தாலும் இயற்கை வேளாண்மை குறித்த அறிவிப்புகளை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம்.
 
அதிலும் குறிப்பாக… வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும்.

2021-22ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெறுவது கட்டாயம்.

2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.40 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,327 கோடி ஒதுக்கீடு.

ரூ6 கோடியில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை, திருச்சி, வேலூர், கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் 10 புதிய உழவர் சந்தைகள்

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,750லிருந்து ரூ.2900 ஆக உயரும்.

ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் 100ஏக்கரில் அமைக்கப்படும்

கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரசி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை அரசு விதைப் பண்ணைகள் மூலம் ரூ.25 லட்சம் செலவில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி

இப்படி வேளாண் துறையில் புதுமைகளை புகுத்தி, வேளாண் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் வகையிலும், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும், 
வேளாண் தனி பட்ஜெட்டில், 34 ஆயிரத்து, 220 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது பாராட்டுக்குரியது.

 அதோடு, வேளாண் பட்ஜெட்டில், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இப்படி எண்ணற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம். முடிவு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.

அறிவிப்புகள் அப்படியே செயல் வடிவத்துக்கு வந்தால் தமிழக விவசாயிகள் வாழ்க்கைத்தரம் கண்டிப்பாக கொஞ்சமாவது உயரும்.
 
இவ்வாறு அறிக்கையில் பவன் குமார் கூறியுள்ளார். 

Tamilnadu exclusive budget for agriculture Here is Highlights

For the first time in the history of TN Legislative Assembly an

Tamilnadu exclusive budget for agriculture Here is Highlights

இங்க மன்னராட்சியா நடக்குது? விஷாலை விமர்சித்த சிம்புவின் தாயார்.; என்னதான் நடந்துச்சு.?

இங்க மன்னராட்சியா நடக்குது? விஷாலை விமர்சித்த சிம்புவின் தாயார்.; என்னதான் நடந்துச்சு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதனிடையில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி எல்லாத்துக்கும் சிம்பு தான் காரணம் என்று ஆவேசமாக கூறியிருந்தார்.

சிம்புவுக்கு ரெட் கார்ட் போட்டாச்சு… அவர் பட சூட்டிங்க்கு FEFSI தன் ஊழியர்களை அனுப்பக்கூடாது” என தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை போட்டது..

பின்னர் ஐசரி கணேஷ் சமாதானம் பேசுவிடவே பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி தன் சங்க ஊழியர்களை (உறுப்பினர்கள்) அனுப்பினார். இதனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

இந்த பிரச்சினை குறித்து சிம்பு எதுவும் பேசாத நிலையில் தன் மகன் சிம்புவுக்காக மெளனம் கலைத்தார் உஷா டி. ராஜேந்தர்.

விஷாலை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

அதாவது,…

“அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தோல்வி அடைந்தது ஒன்று. அப்படத்தில் சிம்புவின் சம்பளமாக 3.5 கோடி ரூபாய் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடன் பேசியுள்ளார்.

படத்தை குறித்த நேரத்திலும் முடித்து கொடுத்தும் சம்பளத்தை கொடுக்காமலும் படத்தை வெளியிடாமலும் இருந்துள்ளார் தயாரிப்பாளர்.

படம் ரிலீஸ் அன்னைக்கு ராத்திரி அந்தத் தயாரிப்பாளர், ‘இந்த பணத்தை சிலம்பரசன் விட்டுக் கொடுத்தா மட்டுமே படத்தை ரிலீஸ் பண்ண முடியும்’னு சொன்னார்.

இதுபத்தி எல்லாரும் சிலம்பரசன்கிட்ட ‘என்ன பண்னலாம்பா’னு கேட்டோம். சிம்பு அந்தப் பணத்தை விட்டுக் கொடுக்கலாம்னு சொல்லிட்டார். படத்தை ரிலீஸும் பண்ண வெச்சார்.

இதனால் நடிகர் சங்கத்தில் சிம்பு புகாரளித்திருந்தார். பின் கொடுத்த சம்பளத்திற்கு ஜிஎஸ்டியும் கட்டல டிடிஎஸ்சும் கட்டல என்று கூறியுள்ளார் சிம்பு தாயார்.

மேலும், தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த விஷால் சிம்பு ஒரு படத்தினை மைக்கேல் ராயப்பனுக்கு சம்பளம் இல்லாமல் பண்ணித்தர வேண்டும் அல்லது வேறொருவரின் படத்தில் நடிக்கும் போது 2 கோடி 40 லட்ச ரூபாய் அவருக்கு கொடுக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை போட்டுள்ளார்.

விஷால் என்ன சுப்ரீம் கோர்ட் ஜர்ஜா, இதற்கு அப்பீலே கிடையாதா என்று் ஆதங்கமாக பேசியிருந்தார்.

விஷால் தயாரிப்பாளர் ட்ரஸ்சில் இருந்து 7 கோடி ரூபாயை பல விதத்துல விரயம் பண்ணீவிட்டார். அதற்கு கணக்கு காட்டாம இருந்த விஷாலுக்கு ரெட் கார்ட் இல்ல சிம்புவிற்கு ரெட் கார்ட்டா?

இதனால என்ன நடக்கணும்னு எதிர்பார்க்கறீங்கன்னு எனக்கு புரியல.

யார் படத்துக்கும் ‘ரெட்’ கார்டு போடுறதும் தப்புதான். அது விஷாலா இருக்கட்டும் அல்லது யாரா வேணா இருக்கட்டும். ‘ரெட்’ என்பது தவறான விஷயம்”

என்று ஆதங்கமாக பேசியுள்ளார் உஷா.

Usha Rajendar condemns Vishal’s act

More Articles
Follows