ரஜினி மம்மூட்டி மோகன் லாலுடன் நடித்த குழந்தை நட்சத்திரம் நயன்தாரா சக்ரவர்த்தி

ரஜினி மம்மூட்டி மோகன் லாலுடன் நடித்த குழந்தை நட்சத்திரம் நயன்தாரா சக்ரவர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara Chakravarthi (2)மலையாளத்தில் ‘ கிலுக்கம் கிலுகிலுக்கம் ‘ படத்தின் மூலம் அறிமுகமானவர் *’ பேபி ‘ நயன்தாரா*.

மம்மூட்டி , மோகன்லால், ரஜினிகாந்த் உள்பட தென்னகத்தின் முன்னணி நடிகர்களின் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளும் பாராட்டுகளையும் பெற்றார்.

ரஜினியின் ‘குசேலன்’ படத்தில் நயன்தாராவுடன் நடித்தார் ‘பேபி’ நயன்தாரா.

அப்போது முதல் நாள் என்னை பார்த்த நயன்தாரா சேச்சி என்னிடம்.. *” நீ தான் என் பெயரை திருடியவளா ” என்று தமாஷாக கேட்டார்.

அதற்கு பேபி நயன்தாரா, நீங்கள் தான் என் பெயரை வைத்துள்ளீர்கள்.

நான் பிறக்கும் போதே நயன்தாராவாக தான் பிறந்தேன் வேண்டுமென்றால் என் பிறப்பு சான்றிதழ்/ birth certificate காட்டவா ? என்று நான் சிறுபிள்ளை தனமாக பதில் சொல்ல அவர் விழுந்து விழுந்து சிரித்தாராம் நயன்தாரா.

ரஹ்மான் நாயகனாக நடித்த மலையாள படம் ‘மறுபடி’ தான் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த கடைசி படம்.

அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்த சில காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்ற தன்னை தயார் படுத்தியுள்ளார்.

‘பேபி’ நயன்தாரா வாக அல்ல..ஹீரோயின் ‘மிஸ்’நயன்தாரா சக்ரவர்த்தியாக இனி வலம் வர உள்ளார்.

இதை அவரே தனது பிறந்த நாளான இன்று (ஏப்ரல் 20) அறிவித்துள்ளார்.

எர்ணாகுளம் தேவராவிலுள்ள புனித இருதய கல்லூரி (Sacred Heart College)யில் மாஸ் கம்யூனிகேஷன் & ஜர்னலிசம் (Mass communication and Journalism) முதலாமாண்டு மாணவியாக சேர்ந்துள்ள நயன்தாரா சக்ரவர்த்திக்கு தமிழில் நாயகியாக அடி எடுத்து வைக்க வேண்டும் என்பது தான் ஆசை.

அதனாலேயே தமிழில் கதை கேட்டு வருகிறார். வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா இந்த ‘மலையாள சுந்தரி’யையும் அரவணைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Nayanthara Chakravarthy is all set to ready to act as heroine

விவேக் விட்டுச் சென்ற பசுமை புரட்சியை கையில் எடுக்கும் ஆத்மிகா

விவேக் விட்டுச் சென்ற பசுமை புரட்சியை கையில் எடுக்கும் ஆத்மிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிப் ஹாப் ஆதி & விவேக் நடிப்பில் உருவான ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஆத்மிகா.

தற்போது கோடியில் ஒருவன், கண்ணை நம்பாதே ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர்.

இவர் இன்று தனது ட்விட்டரில்…

“நடிகர் விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.

என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார்.

அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்.

– நடிகை ஆத்மிகா”

இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஆத்மிகா.

Actress Aathmika plants saplings in rememberance of actor Vivek

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி..; விவேக்குக்கு அஞ்சலி செலுத்தி சூட்டிங்கை தொடங்கினர்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி..; விவேக்குக்கு அஞ்சலி செலுத்தி சூட்டிங்கை தொடங்கினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Article 15 Tamil (2)“Article 15” (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

சில தினங்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார்.

இப்படப்பிடிப்பு துவங்கும் முன் படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

M. செண்பகமூர்த்தி (இணை தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவிஸ்), ராஜா.C (விநியோக நிர்வாகம் – ரெட் ஜெயன்ட் மூவிஸ்) ஆகியோர் உடனிருந்தனர்.

Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க Romeo Pictures சார்பாக ராகுல் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.

Article 15 Tamil version kick starts today

ஓட்டு போடுற வயசு வந்துட்டா.. அப்படின்னா கொரோனா தடுப்பூசி போட்டே ஆகனும்..! அரசு உத்தரவு

ஓட்டு போடுற வயசு வந்துட்டா.. அப்படின்னா கொரோனா தடுப்பூசி போட்டே ஆகனும்..! அரசு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona vaccineகொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாடெங்கிலும் அதிகரித்து வருகிறது.

இஸ்ரேல் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அவரவர் நாட்டு மக்களை இந்தியா செல்ல அனுமதி மறுத்துள்ளது.

இந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், இரண்டாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது 3ஆவது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசு உத்தரவு அளித்துள்ளது.

நம் இந்திய திருநாட்டில் வாக்களிக்க தகுதியான வயது 18 என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இந்த உத்தரவுக்கு முன்பே 25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி நிச்சயம் போட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Vaccine for all above 18 starting May 1

‘பசுமை கலாம்’ அமைப்பில் விவேக் பெயரை இணைக்க நடிகர் செல் முருகன் திட்டம்

‘பசுமை கலாம்’ அமைப்பில் விவேக் பெயரை இணைக்க நடிகர் செல் முருகன் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pasumai Kalamபத்மஸ்ரீ திரு.விவேக் அவர்கள் திடீர் மறைவு நம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அவர் மறைந்தாலும் அவர் செய்து வந்த நலத்திட்டப்பணிகள் எந்தவித தொய்வின்றி நடக்க இருக்கின்றது.

கடந்த பதிமூன்று வருடங்களாக தமிழகமெங்கும் இதுவரைக்கும் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் திரு.விவேக் அவர்களால் நடப்பட்டிருக்கின்றன.

இதற்காக பசுமை கலாம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவினரால் இயங்கி வருகின்றது.

இந்தக்குழுவில் திரு.செல் முருகன், தயாரிப்பாளர் திரு.லாரன்ஸ், திரு.அசோக் மற்றும் நண்பர்கள் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

இதையே தொடர்ந்து பசுமை கலாம் என்ற பெயரோடு விவேக் அவர்களின் பெயரையும் சேர்த்து செயல்படுத்த சட்ட ரீதியிலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

புதிய பெயர் மாற்றத்தோடு திரு.விவேக் அவர்களின் லட்சியமான ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் பணிகள் தொடர்ந்து நடக்க இருக்கின்றது.

இதற்கான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என “பசுமை கலாம்” அமைப்பு தெரிவித்துள்ளது.

cell murugan includes Vivek name in Pasumai Kalam

புதுச்சேரியிலும் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு..; ஆளுநர் தமிழிசை அதிரடி உத்தரவு

புதுச்சேரியிலும் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு..; ஆளுநர் தமிழிசை அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilisai (2)தமிழகத்தை போல புதுச்சேரியிலும் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.

எனவே இந்த தோற்றம் இருந்து அனைத்து மக்களையும் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில்… புதுச்சேரியில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவிப்பு.

ஊரடங்கு அமல்படுத்தப்படும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று பொதுமக்களிடம் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இரவு 8 மணிவரை மட்டும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம்;

8 மணிக்கு மேல் பார்சலுக்கு மட்டும் அனுமதி் எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Pondicherry L-G Tamilisai warns of partial lockdown amid Covid surge

More Articles
Follows