வீரா விரித்த காதல் வலையில் விழுந்தது எப்படி..? நமீதா விளக்கம்

வீரா விரித்த காதல் வலையில் விழுந்தது எப்படி..? நமீதா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress namithaவருகிற நவம்பர் 24-ம் தேதி தயாரிப்பாளர் மற்றும் நடிகர் வீராவை திருமணம் செய்யவுள்ளதாக நடிகை நமீதா ஒரு வீடியோ பதிவொன்றில் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து நமீதா ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதிர் அவர் கூறியதாவது…

அனைவருக்கும் வணக்கம், நானும் வீராவும் வரும் நவம்பர் 24-ம் தேதி திருப்பதி கோயிலில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் செய்தி உங்களை இந்நேரம் வந்தடைந்திருக்கும்.

வீரா என்னுடைய சிறந்த நண்பர், என் மனதுக்கு இனியவர். அவர் தயாரிப்பாளர் என்பதுடன் ஆர்வமிக்க நடிகர். இந்தத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட காதல் திருமணம்.

எங்கள் சிறந்த நண்பர் சஷிதர் பாபு மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

நாளடைவில் இருவரும் நல்ல நண்பர்களானோம். செப்டம்பர் 6, 2017-ல் கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எங்களுக்கு இரவு உணவு விருந்து அளிக்கும் போது காதலை வெளிப்படுத்தினார்.

நான் மெய்சிலிர்த்துப் போனேன். ஏனென்றால் நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. ஆனால், இருவரும் ஒரே வாழ்க்கை லட்சியத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், இருவரும் ஆன்மிக விழிப்பு பெற்றவர்கள் ஆகிய காரணத்தினால் நான் அவரது இந்த விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்தேன்.

பயணம், மலையேறுதல், இயற்கையை ரசித்தல் என்று இருவருமே அன்பைப் பகிர்ந்து கொண்டோம்.

இருவருக்குமே விலங்குகளை நேசிப்பவர்கள், இருவருக்குமே வாழ்க்கை மீது பெரிய நேசமும் பற்றுதலும் இருக்கிறது. என்னை ஒருவர் அவரது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தது குறித்து நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக என்னை உணர்ந்தேன்.

இருவருக்குமிடையே ஒளிவு மறைவு கிடையாது. கடந்த 3 மாதங்களாக நான் அவரை நிரம்பவும் புரிந்து கொண்ட பிறகு அவருடன் சேர்ந்து வாழ்வதை இன்னும் கூடுதல் அதிர்ஷ்டமாக உணர்ந்தேன்.

அவரது மென்மையான அக்கறை மற்றும் ஆதரவினால் ஆண்கள் மீதான என் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது. எனக்கு ஆதரவளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றிகள், உங்கள் நேசத்தையும் ஆசீர்வாதத்தையும் இருவருமே நாடுகிறோம். நன்றி, கடவுள் உங்களைக் காப்பார்.”

இவ்வாறு நமீதா தெரிவித்துள்ளார்.

சிம்பு பட தோல்வி சர்ச்சைக்கு அஜித் டயலாக்கை பயன்படுத்திய ஆதிக்

சிம்பு பட தோல்வி சர்ச்சைக்கு அஜித் டயலாக்கை பயன்படுத்திய ஆதிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

adhik and STRத்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இரண்டு பாகங்களாக உருவாகியிருந்த இப்படத்தின் முதல் பார்ட் பெரும் தோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து தனது புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இதனிடையில் தன்னை கலாய்த்து வரும் சிலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் விவேகம் படத்தில் அஜித் பேசிய வசனத்தை பதிவிட்டு, மீண்டும் எழுந்து வருவேன் என பதிவிட்டுள்ளார்.
இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. நெவர் எவர் க்வ் அப். முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி. மீண்டும் எழுவேன். என தெரிவித்துள்ளார்.

Adhik Ravichandran‏ @Adhikravi
Indha Ulagame Unnai Ethirthaalum Ella Suzhazhilum Nee Thothutaa Thothutaa Nu Un Munnadi Ninnu Alarnaalum Neeya Oththukura Varaikkum Evanaalum Engayum Eppavum Unna Jaika Mudiyathu Never Ever Give up. Thanks to my back stabbers. I Will Rise. #thankyou

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

varma teamதெலுங்கில் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜூன் ரெட்டி’.

இதன் தமிழ் ரீமேக்கை பிரபல இயக்குனர் பாலா இயக்குகிறார்.

இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலா இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘வர்மா’ என பெயரிட்டுள்ளதாக விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை முன்பே வெளியிடவிருந்த விக்ரம், ஒளிப்பதிவாளர் பிரியன் மரணமடைந்துவிட்டதால் தள்ளி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bala directorial Arjun reddy tamil remake titled Varma

மோடி திட்டத்திற்கு எதிர்ப்பு பாடல்; சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

மோடி திட்டத்திற்கு எதிர்ப்பு பாடல்; சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Police protection at Simbu house due to Demonetization Anthem issueகடந்த வருடம் 2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி.

இவரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

எனவே இதனை முன்னிட்டு இந்த வருடம் நவம்பர் 8ல், தட்றோம் தூக்றோம் என்ற படத்தில் உள்ள ஒரு பாடல் இணையத்தில் வெளியானது.

டிமாண்டிசேஷன் ஆந்தம் என்ற பெயரில் இப்பாடல் வெளியானது.

கபிலன் வைரமுத்து எழுதிய இப்பாடலை சிம்பு பாடியிருந்தார்.

இந்த பாட்டில்…

காந்தி நோட்டு ரெண்டு அம்பேலாகி போயாச்சு….
பேங்க ஏடிஎம்மில் அஸ்க்கு புஸ்க்கு ஆயாச்சு…
சோக்கா சொக்கா மாட்டி நடுத்தெருவுக்கு வந்தாச்சு….
காத்து கிடந்த ஜனம் காக்கா கூட்டம் போலாச்சு….

என்ற வரிகளோடு பாடல் தொடங்குகிறது.

மல மலயா மோசம் செஞ்ச மூதேவிங்க பாரின் போயாச்சு (மல்லையா கார்டூன் வருகிறது)

இதனையடுத்து NO CASH NO CASH என்ற கோரஸ் வருகிறது.
ஏழைகள் வீட்டில் இருப்பது எல்லாம் சிவப்பு பணமடா….
குருவி போல சேர்த்த காசு கள்ளம் இல்லடா…
நாட்ட மாத்த வேனுமின்னு நீங்க நினைச்சா?…
கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா? என்ற வரிகள் வருகிறது.

(இந்த வரிகள் வரும்போது பிரதமர் மோடி படம் காட்டப்படுகிறது)

எனவே, இப்பாடலுக்கு பாஜக.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பாடலை பாடிய சிம்பு வீட்டை முற்றுகையிட போவதாக செய்திகள் வந்தன.

இதனையடுத்து சிம்பு வீட்டிற்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Police protection at Simbu house due to Demonetization Anthem issue

For Song click here

https://www.filmistreet.com/video/thatrom-thookrom/

19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ள படம் ஆண்டனி

19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ள படம் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

antony movie stillsமியூசிக் எமோஷன் திரில்லரான உருவாகியுள்ள ஆண்டனி படத்திற்கு 19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ளார்

இளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ஆண்டனி’ .

அறிமுக இயக்குனர் குட்டிக் குமார் தயாரிக்கும் இப்படத்தில் சண்டைக் கோழி புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள ஆண்டனி படத்தின், ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டார்.

சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஆண்டனி படத்தின் டீசர் யூ- டியூபில் டிரென்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

சகாப்தம் படைத்த வில்லன் நடிகரான ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகியுள்ளது.

மியூசிக் எமோஷன் திரில்லரான உருவாகியுள்ள ஆண்டனி படத்திற்கு 19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ளார்.

தென்னிந்திய சினிமா வரலாற்றில் 19 வயது பெண் ஒரு படத்திற்கு இசையமைத்திருப்பது இதுவே முதன் முறையாகும்.

தமிழ் சினிமாவை ஆண்டனி அடுத்த நிலை தரத்திற்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

Teaser Link :

Katrin Kadhal Lyric Video Link :

பதுங்கி பாயனும் தல பட சிங்கிள் பாடலை விஜய் சேதுபதி வெளியிட்டார்

பதுங்கி பாயனும் தல பட சிங்கிள் பாடலை விஜய் சேதுபதி வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi stillsMEDIA PASSION PRODUCTIONS AMEENA HUSSAIN தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் “பதுங்கி பாயனும் தல”.

மைக்கேல், நைனிகா, வேல ராமமூர்த்தி, சிங்கம்புலி, M. S பாஸ்கர் நடித்திருக்கும் திரைப்படத்தின் நீ மாமனா மச்சனா என்ற பாடலை படத்தின் இயக்குனர் S.P.மோசஸ் முதுப்பாண்டி அவர்களின்பாடல் வரிகளில், வல்லவன் சந்திரசேகர் இசையில் அந்தோணி தாஸ் பாடியுள்ளார்.

இந்த பாடலின் SINGLE TRACK – ஐ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

இதுகுறித்து விஜய் சேதுபதி கூறுகையில் பாடல் வெகு சிறப்பாக வந்துள்ளது. இது மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெரும் என்று கூறியுள்ளார்.

More Articles
Follows