அமிதாப்பச்சனுடன் இணைந்த ‘பிரம்மாஸ்த்ரா’ படப்பிடிப்பை நிறைவு செய்த நாகார்ஜூனா

அமிதாப்பச்சனுடன் இணைந்த ‘பிரம்மாஸ்த்ரா’ படப்பிடிப்பை நிறைவு செய்த நாகார்ஜூனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Brahmāstra (1)நடிகர் நாகார்ஜூனா, இந்தியாவில் இது வரை இல்லாத வகையில் மிகப்பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை நடித்து முடித்திருக்கிறார்.

இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் வெகு விரைவில் முடிவடையவுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நாகர்ஜுனா, ரன்பீர் கபூர், அலியா பட், இயக்குநர் அயன் முகர்ஜி ஆகியோருடன், எடுத்து கொண்ட செல்ஃபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரமாண்டமான “பிரம்மாஸ்த்ரா” படத்தின் படப்பிடிப்பு, பொது முடக்க காலத்திற்கு பிறகு கடந்த வருட இறுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

அனைத்து வகையான முன்னெச்செரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடையவுள்ள நிலையில் இப்படம் தமிழ், இந்தி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

படத்தின் உலகளாவிய வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜுனா, மற்றும் மௌனி ராய் போன்ற பெரும் பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Nagarjuna wraps up his portions in Brahmāstra.

4 காங்கிரஸ் MLAக்கள் ராஜினாமா..; புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி

4 காங்கிரஸ் MLAக்கள் ராஜினாமா..; புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Narayanasamy (2)புதுச்சேரி காரைக்கால் மாஹி ஏனாம் ஆகியவற்றை சேர்த்தே புதுச்சேரி மாநிலம்.

புதுச்சேரி சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் 30 பேர் உள்ளனர்.

மேலும் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 உள்ளனர். ஆக மொத்தம் 33 பேர் உள்ளனர்.

இதில் கட்சி தாவல் நடவடிக்கை காரணமாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி அண்மையில் பறிக்கப்பட்டது.

மேலும் பா.ஜ.கவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் என்பவரும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் இன்று காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சபாநாயகர் சிவக்கொழுந்து அவர்களிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுச்சேரி அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து இதர புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Pondy CM has called for an urgent Cabinet meeting following the resignations

வெங்கட் பிரபு மீது கதை திருட்டு வழக்கு..; கமலுக்காக காத்திருக்கும் இயக்குனர் சசிதரன்

வெங்கட் பிரபு மீது கதை திருட்டு வழக்கு..; கமலுக்காக காத்திருக்கும் இயக்குனர் சசிதரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Live Telecastநேரடி ஒளிபரப்பு கதையை வாராயோ வெண்ணிலாவே இயக்குனர் சசிதரனிடமிருந்து இயக்குனர் வெங்கட் பிரபு திருடியதாக கூறி சசிதரன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .

நேரடி ஒளிபரப்பு வெப்சீரிஸ் கதை திருட்டு சம்மந்தமாக குமுதம் யு டியூப் சேனலில் கதையின் ஆதாரத்துடன் இயக்குனர் சசிதரன் பேட்டியளித்துள்ளார். பேட்டியின் நடுவே ஆதாரங்கள் காண்பிக்கப்படுகிறது. அதை பார்த்த திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபுவும் இயக்குனர் சசிதரன் நும் சென்னை 28 க்கு முன் நண்பர்களாக இருந்துள்ளனர்.

அந்த கால கட்டத்தில் வெங்கட் பிரபு இயக்க சசிதரன் திரைப்படம் இயக்க இருவரும் முயற்சி செய்துக்கொண்டிருந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இயக்குனர் சசிதரன் வெங்கட் பிரபு கதை திருட்டு பிரச்னையில் இருவருக்கும் நண்பர்களாக பழகியவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர்

இயக்குனர் சங்கத்தில் புகாரிட்ட சசிதரனுக்கு எதிராக மூன்று இயக்குனர்களை வெங்கட் பிரபு தயார் செய்திருக்கிறாராம்.

அண்மையில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் என்கிற வெப் சீரிஸ் பார்த்தவர்கள் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்த சசிதரன் கொடுத்த 2007 இல் எழுதிய கதை சுருக்கத்தின் அப்பட்டமான காப்பியாக இருந்ததாக கூறுகின்றனர். இதனால் வெங்கட் பிரபுவுக்கு பின்னடைவு அடைந்திருக்கிறது.

மாநாடு படம் வெளியாகும் முன் வெங்கட் பிரபு மேல் இருக்கும் கதை திருட்டு புகாருக்கு சுமூக முடிவு எடுக்க சொல்லி இருக்கிறார் அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி .

தெருவோர கிரிக்கட் விளையாடுபவர்களின் வாழ்க்கை என்று மூலக்கதையை கூறிய வெங்கட் பிரபு அதற்க்கு கதையை சசிதரன் என்ற தனது நண்பரை எழுத கூறியுள்ளார். அதுவே பின்னர் சென்னை இருபத்தியெட்டு . சென்னை 28 படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதிய சசிதரனின் பெயரை டைட்டிலில் திரைக்கதை வசன உதவி என போட்டு இருட்டடிப்பு செய்துவிட்டதாக வெங்கட் பிரபு மேல் புகார் எழுந்துள்ளது. 2007 இல் நடந்த இந்த சம்பவம் இப்போதுதான் வெளியாகியுள்ளது. அதே இயக்குனரின் நேரடி ஒளிபரப்பு என்ற பதிவு செய்த கதையை தான் மீண்டும் வெங்கட் பிரபு லைவ் டெலிகாஸ்ட் என்ற பெயரில் ஹாட் ஸ்டார் வெப்சீரிஸாக தயாரித்து இயக்கி விட்டார் என்பதே சமீபத்திய புகார்.

சசிதரனின் கதையை படமாகிவிட்ட வெங்கட் பிரபு புகாரளித்த சசிதரன் மேல் உள்ள கோபத்தில் சசிதரன் இயக்கி ஆறி அர்ஜுனா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத இரண்டாவது படத்தை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம். ஏனென்றால் சசிதரனின் இரண்டாவது படத்தை தயாரிப்பவர் இந்த வெங்கட் பிரபுவின் நீண்ட கால குடும்ப நண்பர் கமல் ஏகாம்பரம் என்பவராம்.

வெங்கட் பிரபு மேல் புகாரளித்த இயக்குனர் சசிதரனின் முதல் படம் வாராயோ வெண்ணிலாவே படத்தை பார்த்த ஒரு பெரிய நிறுவனம் அவரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டியது மட்டுமில்லாமல் அந்த படத்தை வாங்கி வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார்களாம்.

வெங்கட் பிரபு மேல் கதை திருட்டு புகாரளித்த இயக்குனர் சசிதரனின் முதல் படமான வாராயோ வெண்ணிலாவே வை பார்த்த பிக்பாஸ் வெற்றியாளர் நடிகர் ஆரி அர்ஜுனன் இயக்குனர் சசிதரனுடன் சேர்ந்து பணி புரிய விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இயக்குனர் வெங்கட் பிரபு வின் லைவ் டெலிகாஸ்ட் வெப்செரிஸ் இயக்குனர் சசிதரன் பதிவு செய்து வைத்திருந்த நேரடி ஓளிபரப்பு கதையின் அப்பட்டமான காப்பியாம்.வெப் சீரிஸ் வெளியான பிறகு இதை பார்த்த திரையுலகினர் சசிதரனுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

மங்காத்தாவிற்கு பிறகு தொடர்ந்து சரிவில் இருந்த வெங்கட் பிரபு அதிலிருந்து மீளவே இயக்குனர் சசிதரனின் கதையில் கை வைத்திருக்கிறாராம். இது ஆதாரபூர்வமாக விரைவில் நிரூபணமாகும் என தெரிவிக்கின்றனர்.

சங்கத்தின் ஒத்துழைப்பு ஆமை வேகத்தில் எடுத்ததாலேயே நேரடி ஒளிபரப்பு வெப்செரிஸ் கதை எழுதிய உண்மையான கதாசிரியர் சசிதரனுக்கு எழுத்தாளர் சங்கத்தில் நீதி கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

வெங்கட் பிரபு மேல் கதை திருட்டு புகாரளித்த இயக்குனர் சசிதரனிடம் பதிவு செய்யப்பட பல கதைகள் உள்ளதாம். அஜித் விஜய்க்கும் பொருத்தமான கதைகள் உள்ளதென அவருக்கு தெரிந்த இயக்குனர்கள் அதை முறைப்படி அவரிடம் வாங்கி இயக்கலாம் என்ற யோசனையில் உள்ளார்களாம்.

பிக்பாஸ் புகழ் ஆறி அர்ஜுனும் வெங்கட் பிரபு மேல் கதை திருட்டு புகாரளித்த இயக்குனர் சசிதறணும் நெருங்கிய குடும்ப நண்பர்களாம்.

ஹாட் ஸ்டார் நிறுவனம் இயக்குனர் சசிதரனிடம் வெப்சீரிஸ் இயக்கி கொடுக்க கதை கேட்டுள்ளார்களாம். பிரச்னையை சுமுகமாக முடிக்கும் முயற்சியோ ?

மக்கள் நீதி மைய உறுப்பினரான இயக்குனர் சசிதரன் சமீபத்தில் வெங்கட் பிரபு மேல் அளித்த கதை திருட்டு புகாரை தனது கடசியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனிடம் இந்த பிரச்னை குறித்து தீர்வு காண பேசவிருக்கிறாராம்.

ppநேரடி ஒளிபரப்பு கதை விஜய் ஹாட் ஸ்டாரில் வெளியானதால் அதை தனது கடசி தலைவர் கமல்ஹாசன் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் இயக்குனர் சசிதரன்.

Director Sasi Dharan waiting for Kamal Haasan reply

டாப் டக்கர் பாடலுக்காக யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா

டாப் டக்கர் பாடலுக்காக யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yuvan Rashmika (2)யுவன் சங்கர் ராஜா…. தமிழகத்தில் அவருக்கு, வெறித்தனமான பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அவர் இசையில் உலகளவில் சாதனை படைத்த “ரௌடி பேபி” பாடலுக்கு முன்னதாகவே, உலகமெங்கும் மொழியை கடந்து, அவரை பின்பற்றும் ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா, இந்திய இசை பிரபலங்களான பதா மற்றும் உஜானா அமித் ஆகியோருடன் டாப் டக்கர் ( Top Tucker) எனும் ஒரு சுயாதீன இசை பாடலில் இணைந்துள்ளார்.

இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பதா மற்றும் உஜானா அமித் பாடலை பாடியுள்ளனர்.

மூவரும் இணைந்து திரையில் தோன்றி கலக்கியிருக்கும் இப்பாடலில், இவர்களுடன் தற்போதைய இளைஞர்களின் கண்கவர் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார்.

இப்பாடலின் ஒரு சிறு பகுதியில் தமிழில் வரும் வரிகளை யுவன் சங்கர் ராஜா தானே பாடியுள்ளார்.

மேலும் ஜொனிடா காந்தி அவர்களும் ஒரு சிறு பகுதிக்கு குரல் தந்துள்ளார்.

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள இப்பாடல் YouTube தளத்தில் வெளியான மிகக்குறுகிய நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஒவ்வொரு நொடியும் ரசிகர்களின் பார்வை எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. மொழி எல்லைகளை கடந்து, தற்போது அனைத்து இசை ரசிகர்களையும் கவர்ந்து, சாதனை படைத்து வருகிறது.

யுவன் சங்கர் ராஜாவின் திரை இசையல்லாத சுயாதீன இசை பயணம் ஜூலை 1999ல் “The Blast” ஆல்பத்தில் துவங்கியது.

இந்த ஆல்பம் தமிழின் முன்னணி பிரபலங்கள் உன்னிகிருஷ்ணன், கமலஹாசன் உட்பட பலர் பாடியுள்ள 12 பாடல்கள் தொகுப்பினை கொண்டது.

தனது U1 Records இணையதளம் மூலம் பல சுயாதீன இசை முன்னெடுப்புகளையும், பல இசைத்திறமைகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா.

தொடர்ந்து தனது இசையில் திரை இசை தவிர்த்த சுயாதீன இசை ஆல்பங்களை வளரும் கலைஞர்களுடன் இணைந்து உருவாக்குவதில் வெகு ஆர்வமுடன் இயங்கி வருகிறார்.

Yuvan and Rashmika joins for Top Tucker

‘ஏமாலி’ ஹீரோ தயாரிப்பாளரானார்..; ஆனந்தி நாயகியாகும் ‘நதி’

‘ஏமாலி’ ஹீரோ தயாரிப்பாளரானார்..; ஆனந்தி நாயகியாகும் ‘நதி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadhiகதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ்.

‘ஏமாலி’, ‘லிசா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார்.

இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார்.

“நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, A.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்பதால் பிரபல இயக்குநர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளராக M.S.பிரபு அவர்களும், இசையமைப்பாளராக ‘கனா’ படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் பணியாற்றுகின்றனர்.

“நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Mas Cinemas Production Samjones – Anandhi Starrer Nadhi

அப்பா – மகள் அன்பின் அழகியலை சொல்ல வருகிறாள் ‘அன்பிற்கினியாள்’

அப்பா – மகள் அன்பின் அழகியலை சொல்ல வருகிறாள் ‘அன்பிற்கினியாள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anbirkiniyaalஅப்பா – மகள் இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பா – மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதை என்றால் மிகவும் அரிதானதுதான்.

அப்படியொரு அற்புதமான கதையை இயக்கியுள்ளார் கோகுல். அவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் ஒவ்வொன்றுமே மாறுபட்ட வகையைச் சேர்ந்தவை. அந்த வரிசையில் இந்தப் புதிய படத்தின் கதையும், களமும், காட்சிகளும் புதிய கோணத்தில் இருக்கும் என்று நம்பலாம்.

ஏனென்றால் அப்பா – மகள் வாழ்வியலைச் சொல்லும் கதையில் நிஜ அப்பா – மகள் நடித்தால் எப்படியிருக்கும்…? அந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மை அனைத்துமே இன்னும் உணர்வுப்பூர்வமாக இருக்கும்.

அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் இருவரும் இந்தக் கதையில் அப்பா-மகள் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான காட்சிகள் பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறது படக்குழு.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதற்கு ‘அன்பிற்கினியாள்’ என்று தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. இதில் ஹப் மற்றும் ப்ரீஸர் செட்கள் போடப்பட்டு சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.

‘அன்பிற்கினியாள்’ படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி பாண்டியனின் நடிப்பு கண்டிப்பாகப் பேசப்படும் என்கிறார் இயக்குநர் கோகுல்.

ஏனென்றால், சில முக்கிய காட்சிகளில் தனது உடலசைவுகள் மற்றும் கண்கள் மூலமாகவே பேசியிருக்கிறார்.

மேலும், ப்ரீஸர் அரங்குகளில் கடும் குளிரில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். அப்போது -11 டிகிரி, -12 டிகிரி குளிரிலும் அசராது நடித்துப் படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

நீண்ட வருடங்கள் கழித்து நடிப்பு உலகிற்கு திரும்பியுள்ள அருண் பாண்டியனின் நடிப்பு பார்வையாளர்களைப் பேசவைக்கும் என்கிறது படக்குழு.

எப்போதுமே த்ரில்லர் படங்களுக்கு நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள் அவசியம் என்பார்கள்.

இந்தப் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களே வெற்றிக்குச் சான்றாக அச்சாரம் இட்டுள்ளது. எந்தவொரு களமாக இருந்தாலும் தன் கேமரா கோணங்களால் அழகூட்டிய மகேஷ் முத்துசுவாமி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் கோகுல் – மகேஷ் முத்துசுவாமி இருவருமே இணைந்து பணிபுரிந்து வெற்றியை ருசித்திருக்கிறார்கள்.

அதில் இரவு நேரக் காட்சிகளைத் தத்ரூபமாகப் படமாக்கியதால், இந்தப் படத்துக்கும் அவருடனே பணிபுரிந்திருக்கிறார் கோகுல்.

இசையமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறார் ஜாவித் ரியாஸ். இவர் ‘மாநகரம்’ படத்தின் பின்னணி இசை மூலம் பேசப்பட்டவர். கோகுலின் படங்களுக்கு எப்போதுமே அனைத்து பாடல்களையும் எழுதுபவர் லலித் ஆனந்த்.

அவர் தான் ஜாவித் ரியாஸ் இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என கோகுலிடம் சிபாரிசு செய்திருக்கிறார். அந்த நம்பிக்கையில் பணிபுரிந்த கோகுலைப் பின்னணி இசையில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

தனது முந்தைய படங்களின் பின்னணி இசையை விட, இந்தப் படத்தின் பின்னணி இசை மிகவும் கச்சிதமாக இருக்கும். அந்தளவுக்கு மிரட்டியிருக்கிறார்.

த்ரில்லர் படங்களுக்கே உரிய இசையாக இருந்தாலும், அதிலும் ஒரு வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்கிறார் இயக்குநர் கோகுல்.

கலை இயக்குநராக ஜெய்சங்கர் பணிபுரிந்திருக்கிறார். அவருடைய ஹப் மற்றும் ப்ரீஸர் அரங்குகள் கண்டிப்பாகப் பேசப்படும். ரொம்ப சவாலான அரங்கைத் தத்ரூபமாக இருக்க வேண்டும் என மெனக்கெட்டு கச்சிதமாக உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

எடிட்டராக பிரதீப் ஈ.ராகவ் பணிபுரிந்திருக்கிறார். அவருடைய எடிட்டிங் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. சண்டைக் காட்சிகளின் இயக்குநராக பிசி பணிபுரிந்திருக்கிறார். அவருடைய இயற்பெயர் பிரபு. ப்ரீஸர் அரங்கில் உள்ள சண்டைக் காட்சிகள் ரொம்பவே எதார்த்தமாக அமைத்துக் கொடுத்தார்.

இந்தப் படம் அப்பா – மகள் உறவை மையப்படுத்திய த்ரில்லராக இருந்தாலும், தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு என்பது அசாத்தியமானது. பார்வையாளர்களுக்குத் திரையில் ஒரு நல்ல எமோஷனலான த்ரில்லர் விருந்து காத்திருக்கிறது. கோடை விடுமுறைக்குத் திரைக்கு வரவுள்ளது.

அன்பிற்கினியாள் படக்குழுவினர் விவரம்:

திரைக்கதை, இயக்கம் – கோகுல்
தயாரிப்பு – அருண் பாண்டியன்
ஒளிப்பதிவாளர் – மகேஷ் முத்துசுவாமி
இசையமைப்பாளர் – ஜாவித் ரியாஸ்
எடிட்டர் – பிரதீப் ஈ.ராகவ்
கலை இயக்குநர் – ஜெய்சங்கர்
வசனம் – கோகுல், ஜான் மகேந்திரன்
சண்டை இயக்குநர் – பிசி
பி.ஆர்.ஓ – யுவராஜ்

Father daughter thriller film titled Anbirkiniyaal

More Articles
Follows