தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கியுள்ள படம் ‘கடைசி விவசாயி’.
சின்ன வேடங்களில் விஜய்சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதில் கதையின் நாயகனாக நல்லாண்டி என்ற பெரியவர் நடித்திருந்தார். ஆனால் அவர் கொரோனா காலத்தில் காலமானார்.
இப்படம் கடந்த பிப்ரவரி 12 அன்று தியேட்டர்களில் ரிலீசானது.
இப்படத்திற்கு அனைவரும் பாசிட்டிவ்வான விமர்சனங்களே கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ‘கடைசி விவசாயி’ படத்தை பார்த்த மிஷ்கின் நெகிழ்ச்சியாக பாராட்டியுள்ளார்.
‘கடைசி விவசாயி’ தந்த மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டியில் சந்தித்தேன். அவனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களை முத்தமிட்டேன்.
படத்தின் கதையின் நாயகனாக, ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்குச் சென்று அவர் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன்.
மேலும் படப்பிடிப்பு நடத்திய இடத்திற்குச் சென்று மதிய உணவு உண்டோம். இந்த முழு நாளும் ஒரு அற்புத நாளாக மாறியது.
மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்.”
இவ்வாறு மிஷ்கின் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
Mysskin’s wishes to Kadaisi Vivasayee movie team