உலகையே மிரள வைத்த கேரக்டரை விஜய்க்காக டிசைன் செய்த மிஷ்கின்

உலகையே மிரள வைத்த கேரக்டரை விஜய்க்காக டிசைன் செய்த மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mysskin vijayஜேம்ஸ் பாண்ட் என்றால் நம் நினைவில் வருவது… கோட் சூட், துப்பாக்கி, கூலிங் கிளாஸ்.. கம்பீரமான ஒரு உருவம்.

இதற்கான இலக்கணத்தை வகுத்தவர் தான் ஷான் கானரி.

7 பாண்ட் படங்களின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு பிறகு ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் சிலர் நடித்தாலும் ஷான் கானரிதான் இதுவரை பெஸ்ட் என ரசிகர்களே சொல்கின்றனர்.

‘டாக்டர் நோ’ படத்தில் ஷான் கானரி பேசிய அந்த ‘பாண்ட்… ஜேம்ஸ் பாண்ட்’ வசனம் உலகம் முழுக்க பிரபலமானது.

ஷான் கானரி தனது 90வது வயதில் கடந்த 2020ல் காலமானார்.

இவர் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடிக்க மறுத்த பிறகு டேனியல் க்ரெய்க் உள்ளிட்டவர்கள் நடித்தனர்.

இதுவரை 4 ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ படங்களிலும் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்துள்ளார் டேனியல் க்ரெய்க்.

உலகையே மிரள வைத்த பேச வைத்த இந்த ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரை தற்போது நடிகர் விஜய்க்காக உருவாக்கி வைத்திருக்கிறாராம் மிஷ்கின்.

இயக்குனர் மிஷ்கின் நேற்று ட்விட்டர் ஸ்பேஸ் மூலமாக ரசிகர்களிடம் உரையாடினார்

அப்போது ஒரு ரசிகர் உங்கள் இயக்கத்தில்.. தளபதி விஜய் நடித்தால் அவர் எந்த வேடத்தில் நடிப்பார் என்ற கேள்விக்கு *ஜேம்ஸ் பாண்ட்* என்று பதிலளித்தார் இயக்குனர் மிஷ்கின்

மேலும் ஒரு ரசிகர் நடிகை ஆண்ட்ரீயா பிசாசு 2 படத்தில் நடித்தது பற்றி கேட்டதற்கு இயக்குனர் மிஷ்கின் *பிசாசு 2 படத்திற்காக நடிகை ஆண்ட்ரீயா தேசிய விருதை வாங்குவார்* என்றார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 திரைப்படம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக T.முருகானந்தம் தயாரிக்கின்றார்.

Mysskin talks about working with Vijay

இந்தியாவில் ‘அட்ரஸ்’ தொலைத்த ஊரில் அதர்வா..; உண்மையை உடைக்கும் ‘கு பூ கொ பு’ டைரடக்டர்

இந்தியாவில் ‘அட்ரஸ்’ தொலைத்த ஊரில் அதர்வா..; உண்மையை உடைக்கும் ‘கு பூ கொ பு’ டைரடக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharvaa in addressதனது முதல் பட டைரக்‌ஷனான “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்” படத்தில் அனைவரிடமும் நல்ல விமர்சனத்தை பெற்றவர் இயக்குனர் இராஜமோகன். இதை அடுத்து “வானவராயன் வல்லவராயன்” படத்தை இயக்கினார்.

இதை தொடர்ந்து “அட்ரஸ்” என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார்.

இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மிக திரில்லாக இயக்கிவருகிறார் இராஜமோகன்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இந்த படத்தை இயக்குகிறார்.

இதில் ஒரு புரட்சிகரமான ‘காளி’ என்கிற ஒரு இளைஞன் வேடம். இந்த கேரக்டரில் அதர்வாமுரளி நட்புக்காக நடித்து கொடுத்து அசத்தியுள்ளார்.

உண்மை சம்பவத்தில்.. முக்கிய கேரக்டரான இதை கேட்டவுடன் நடித்துக் கொடுத்துள்ளார், அதர்வாமுரளி.

இவருக்கு ஒரு காதல் பாடல் காட்சியும், இரண்டு ஸ்டண்ட் காட்சியும், புரட்சிகரமான பல காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளது.

இந்த கேரக்டர் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெறும். இவரது ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்கிறார்.

மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா,
தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து
மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.

இவர் ‘மெரீனா’, ‘மூக்குத்திஅம்மன்’ , ‘நெற்றிக்கண்’ படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

பாடல்கள்:சினேகன்,மோகன் ராஜன், ‘கானா’ ஹரி, எடிட்டிங்:தியாகு,
ஸ்டில்ஸ்: குமார், சண்டைப்பயிற்சி:சில்வா,
மக்கள் தொடர்பு: ஜான்சன்

இதனுடைய படப்பிடிப்பு, மலையும்.. மலை சார்ந்த பகுதிகளில் நடைபெற்றது.

கொடைக்கானலில் இருந்து 8 கிலோமீட்டர் நடந்து நடந்து சென்று வெள்ளக் கவி என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் & டீசர் இன்று பரபரப்பாக வெளியாகியது.

youtu.be/zK4ClPU7GOg

Atharvaa’s next film is titled as Address

தமிழை தவிர்க்கும் தளபதி.; BEAST டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு

தமிழை தவிர்க்கும் தளபதி.; BEAST டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் அவரின் ‘தளபதி 65’வது திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைக்க பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார்.

இன்று விஜய்யின் பிறந்த நாள் (ஜூன் 22ஆம் தேதி) ரசிகர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு நேற்று 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி 65 பட டைட்டில் & பர்ஸ்ட் லுக் ரிலீசானது.

தளபதி 65 படத்திற்கு BEAST என தலைப்பு வைத்து இரண்டு போஸ்டர்களை வெளியிட்டனர்.

இந்த இரண்டு போஸ்டர்களிலும் ஆங்கில எழுத்துக்களே இருந்தன. தமிழே காணவில்லை.

சமீபகாலமாக விஜய் தன் படங்களுக்கு மெர்சல், பிகில், சர்கார், மாஸ்டர் என வேற்று மொழி பெயர்களையே வைத்தார்.

இப்போதும் தன் படத்திற்கு ‘பீஸ்ட்’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தன் ட்விட்டர் பதிவில்…

“நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன.ஆனால் தமது தாய் மொழியான
#தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ? Master, Bigil, படங்களை தொடர்ந்து #Beast என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா?
@actorvijay https://t.co/VoqtagIqDY

என விஜய்யிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

VCK party condemns Vijay’s new movie title Beast

சூப்பர் ஸ்டார் இடத்திற்கு தனுஷ் & விஜய்சேதுபதி ஆசை.? இப்படி பேசமா இருந்தா அதானே அர்த்தம்.?!

சூப்பர் ஸ்டார் இடத்திற்கு தனுஷ் & விஜய்சேதுபதி ஆசை.? இப்படி பேசமா இருந்தா அதானே அர்த்தம்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush vijay sethupathiதிரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் ஒருவர் தான்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தவர் தயாரிப்பாளர் தாணு.

ரஜினி ஹீரோவாக நடித்த முதல் படமான ‘பைரவி’ படம் வெளியானது முதல் இந்த பட்டத்தை அவருக்கு தமிழ் திரையுலகமும் தொடர்ந்து கொடுத்தது.

ரஜினியும் அந்த பட்டத்திற்கேற்ப நடந்துக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர். – சிவாஜி கோலோச்சிக் கொண்டிருந்த போதே ரஜினி சினிமாவில் நுழைந்தார்.

1970-80 களில் இரவு பகல் பாராமல் மற்ற மொழி படங்களில் நடிக்க வானில் பறந்தப்படியே இருப்பார்.

இடைவிடாமல் ஒரே வருடத்தில் 20 படங்களில் நடித்துக் கொடுத்தும் இருக்கிறார். இதனால் தன் ஆரோக்கியம் பாதிக்க அவரே காரணமாகாவும் இருந்ததாக ரஜினியே சொல்லியிருக்கிறார். மறைந்த மனோரமா ஆச்சியும் மேடைகளில் சொல்லி இருக்கிறார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி சினிமாக்கள் எல்லாம் பல சூப்பர் ஸ்டார்களை கடந்த 40 ஆண்டுகளில் பார்த்துவிட்டது.

ஆனால் எவர்க்ரீன் நட்சத்திரமாக ஜொலிக்கிறார் ரஜினிகாந்த். பாலிவுட் கான்களும் ரஜினியை சூப்பர் ஸ்டாராக கொண்டாடி வருகின்றனர்.

ரஜினியின் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு இளைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போட்டி போட்டாலும் ரஜினியை நெருங்க முடியாத தூரத்திலேயே உள்ளனர்.

இந்த நிலையில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ & விஜய்சேதுபதியுன் க/பெ ரணசிங்கம் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.

இவர்களின் படங்களை வெளியிடும் ஓடிடி தளங்கள் அது தொடர்பான செய்திகளை வெளியிடும் போது சூப்பர் ஸ்டார் தனுஷ் & சூப்பர் ஸ்டார் விஜய்சேதுபதி என பட்டப் பெயரிட்டு பிரஸ் ரிலீஸ் செய்கின்றனர்.

இதை தனுஷ் & விஜய் சேதுபதி கவனித்தார்களா? அவர்களது கவனத்துக்கு போனதா? என்பதும் தெரியவில்லை.

ஒருவேளை கண்டுக் கொள்ளாமல் இருக்கிறார்களா? என்பதும் தெரியவில்லை. இந்த தகவலைப் பார்த்த பிறகாவது கவனத்தில் கொள்ளட்டும்.

Will Dhanush and Vijay Sethupathi wants Super Star title?

ரசிகர்களுக்கு ஃபிட்னஸ் ட்ரெய்னிங் கொடுக்கும் அல்லு சிரிஷ்

ரசிகர்களுக்கு ஃபிட்னஸ் ட்ரெய்னிங் கொடுக்கும் அல்லு சிரிஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

allu sirishஅல்லு சிரிஷ் என்றாலே சிக்ஸ் பேக் உடல் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர் தனது உடலை வலுப்படுத்தியிருக்கிறார்.

அண்மையில் அவர் வெளியிட்ட அவரது உடற்பயிற்சி புகைப்படம் அனைவரையும் ஈர்த்தது.

இந்நிலையில், தனது கட்டுக்கோப்பான உடல் பாங்குக்கு காரணமாக இருக்கும் உடற்பயிற்சிகள் அடங்கிய வீடியோக்களை தனது ஃபேஸ்புக் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் அல்லு சிரிஷ்.

இதற்காக ‘ட்ரெயினிங் டே’ எனத் தலைப்பில் அன்றாடம் தனது ஃபிட்னஸ் வீடியோக்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள ‘ட்ரெயினிங் டே’ சீரிஸின் முதல் வீடியோ அல்லு சிரிஷ் ஜிம்மில் எப்படி அன்றாட பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்பதை விளக்கியிருக்கிறது.

அந்த வீடியோவில்… அல்லு முதலில் வார்ம் அப் பயிற்சிகளைச் செய்கிறார். அதன் பின்னர் ஒரு கையில் டம்பிள்ஸ் தூக்குகிறார்.

அதை முடித்துக் கொண்டு ஸ்டெர்னம் புல் அப் எனப்படும் பயிற்சியை செய்கிறார். வைட் க்ரிப் லேட் புல்டவுன் பயிற்சி என மொத்தம் 30 நொடிகளுக்கு அவர் விதவிதமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் அடங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பகிர்ந்த நடிகர் அல்லு சிரிஷ்,…

“நான் எனது உடற்தகுதி இலக்குகளை இன்னும் எட்டவில்லை. எனது இந்தப் பயணத்தை சிறு வீடியோக்கள் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

அல்லு சிரிஷ் தனது ‘ட்ரெயினிங் டே’ சீரிஸில் அன்றாடப் பயிற்சிகள் மட்டுமல்லாது யோகா, பாக்ஸிங் பயிற்சிகள் அடங்கிய வீடியோக்களையும் வெளியிடவிருக்கிறார்.

தனது ஃபிட்னஸ் ரகசியங்களை ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

Allu Sirish fitness training to his fans

ரஜினி பாட்டு போல சிம்புக்கு ஒரு பாட்டு.. ‘மங்காத்தா’-வை விட மகா புராஜெக்ட் – வெங்கட் பிரபு

ரஜினி பாட்டு போல சிம்புக்கு ஒரு பாட்டு.. ‘மங்காத்தா’-வை விட மகா புராஜெக்ட் – வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

venkat prabhu strசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மதன் கார்க்கியின் வரிகளில் யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு, கே எல் பிரவீண் எடிட்டிங், ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகள், உமேஷ் ஜே குமார் கலை இயக்கத்தையும் செய்துள்ளனர்.

உடையலங்காரம் மற்றும் ஸ்டைலிங் ஏரியாவை மெருகூட்டியுள்ளார் வாசுகி பாஸ்கர்.

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது இந்தப்படத்தின் ’மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.

மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ளனர். யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது. இப்போது பாடல் வைரலாகி வருகிறது.

இந்தப்பாடல் உருவான விதம் குறித்தும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை நாயகன் சிம்பு, இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தின் வழியாக கலந்துரையாடல் மூலம் பகிர்ந்துக் கொண்டனர்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும்போது…

“சினிமாவில் பாடல் எழுத முயற்சித்த காலத்தில் யுவனிடம் எனது பாடல் வரிகளை காண்பித்து ஆலோசனை கேட்பது வழக்கம் ஆனால் யுவனின் இசையில் அவரது நூறாவது படமான பிரியாணியில் தான் அவருடன் இணைய முடிந்தது. அப்பா (வைரமுத்து)-ராஜா சார் காலத்தில், பாடல்களை கேட்பதற்கு மக்கள் ரேடியோவின் முன் காத்து கிடந்தார்கள்..

ஆனால் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வேலைகளுக்கு இடையே தான் பாடலைக் கேட்கிறார்கள். அதனால் அவர்களது கவனத்தை ஈர்க்கும் விதமாக பாடல்களை கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி உருவானது தான் இந்த ’மெர்ஸைலா’ பாடல்” எனக் கூறினார்

நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பேசும்போது…

“மாநாடு படத்துல நடிக்க அழைப்பு வந்ததும் செட்டுல செம ஜாலியா இருக்கப்போறோம்னு சந்தோஷமா இருந்துச்சு.. ஆனா சிம்பு கூட டான்ஸ் ஆடனுமே அப்படின்னதும் அவருக்கு ஈடு கொடுத்து நம்மளால மேட்ச் பண்ணி ஆட முடியுமான்னு ஒரு டென்சனும் இருந்துச்சு..

ஆனா ராஜூ சுந்தரம் மாஸ்டர் என்னோட டென்சனை புரிஞ்சுக்கிட்டு எனக்கு வசதி பண்ணிக் கொடுத்தார்” என கூறினார்.

யுவன் சங்கர் ராஜா பேசும்போது…

“வெங்கட் பிரபு படத்துல வேலை பார்க்குறது ஸ்பெஷல் தான். இன்னைக்கு வெளியாகி இருக்குற ’மெர்ஸைலா’ பாடலை, ஏன் பவதாரணியை பாட வச்சேன்னு கேட்குறாங்க.. கொடுக்கலேன்னா சண்டைக்கு வருவாங்களே” என ஜாலியாக கலாய்த்தார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது…

“ஒரு நல்ல படம் தனக்கு தேவையானவற்றை தானே தேடிக்கும்னு சொல்வாங்க.. அது இந்த மாநாடு படத்துக்கு பொருந்தும். இந்த கதையை சொல்றதுக்கு முன்னாடி எஸ்டிஆரின் மாநாடு அப்படின்னு ரெண்டே வார்த்தைதான் வெங்கட் பிரபு எங்கிட்ட சொன்னார்.

அதுக்கப்புறம் தான் கதையை தாமதமாகத்தான் சொன்னார். இந்தப்படம் ஆரம்பிக்க தாமதமான சமயத்துல பல நெகடிவ் விஷயங்கள் பேசப்பட்டாலும், இந்தபடம் தள்ளிப்போனதால பல நன்மைகள் நடந்திருக்கு.. சிம்பு வெயிட் லாஸ் பண்ணினார். எஸ்ஜே சூர்யா இந்தப் படத்துக்குள்ள வந்தார்..

சிம்பு தன்னை பத்தி பேசப்பட்ட அத்தனை தவறான விஷயங்களையும் அடிச்சு காலி பண்ணிட்டார்.. மற்ற படங்கள்ல கல்யாணியைப் பார்த்ததுக்கும் இந்தப்படத்துல பார்க்குறதுக்கும் நிறைய வித்தியாசம் தெரியுது.

ஒவ்வொருநாளும் ஸ்பாட்ல கூடவே இருந்துருக்கேன்.. அத்தனை பேரோட உழைப்பையும் நேர்ல பாத்துருக்கேன். படம் முடிஞ்சு பார்க்கும்போது நாம உழைச்ச உழைப்பு வீணாகல அப்படின்னு ஒரு திருப்தி வந்துச்சு.. சிம்பு-வெங்கட் பிரபு ரெண்டு பேருக்குமே இது பெரிய படமா இருக்கும்” என்றார்.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசும்போது…

“சின்னப்பசங்களை வைத்து படம் இயக்கிய சமயத்தில் யுவன் தான் என் படங்களின் ஹீரோவாக இருந்தார். யுவன் என் படங்களுக்குத்தான் பெஸ்ட்டான பாடல்களை தருவார் என்று எல்லோரும் சொல்வார்கள்.. ஆனால் அவருக்கு செல்வா (செல்வராகவன்) தான் பர்ஸ்ட்.. அந்த விஷயத்தில் எனக்கு கொஞ்சம் பொறாமை கூட உண்டு.

எப்படி இளையராஜா- வைரமுத்து கூட்டணி மிகப்பெரிய புகழ்பெற்றதோ, அதேபோல அவர்களது வாரிசுகளான யுவனையும் மதன் கார்க்கியையும் எனது படத்தின் மூலமாகத்தான் ஒன்று சேர்க்கவேண்டும் என நினைத்து ‘பிரியாணி’ படம் மூலம் அதை சாதித்தேன்.

இதோ இந்தப்படத்திலும் இந்த ’மெர்ஸைலா’ பாடலில் அவர்கள் இணைந்திருப்பதில் சந்தோசம் தான்.. மதன் கார்க்கியின் வார்த்தைகளில் அவரது தந்தை வைரமுத்துவின் சாயலை விட கவிஞர் வாலியின் சாயல் தான் எனக்கு தெரிகிறது.

ரஜினி சார் நடித்த நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்” என்கிற கல்யாண வீட்டு பாடலை போல கலகலப்பாக இருக்க வேண்டும் என மதன் கார்க்கியிடம் கேட்டேன். அதேபோலவே இந்த பாடல் அமைந்து விட்டது.

இந்த பாடலை கேட்டதும் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் சந்தோஷப்பட்டாலும், இந்த பாடலுக்கு சிம்புவுடன் ஆடனுமான்னு கொஞ்சம் பயந்தாங்க.

என்னோட கேரியர்ல மங்காத்தாவை விட இது பெரிய புராஜெக்ட்.. இந்தப்படம் அரசியல் படம் என்றாலும் புதுசா ஒரு ஜானர்ல முயற்சி பண்ணிருக்கேன். எனக்கு தெரிஞ்ச ஜானர்ல அரசியலை இதுல சொல்லிருக்கிறேன்..

அதனால் மக்கள் எதிர்பார்க்கிற படமாகவும் அவர்கள் எதிர்பாராத ஒரு படமாகவும் இந்த மாநாடு இருக்கும்.

பரிசோதனை முயற்சியிலான இதுபோன்ற திரைக்கதையில நடிக்க சிம்பு ஒத்துக்கிட்டது பெரிய விஷயம்.. அவரோட ரசிகர்களுக்கும் இந்தப்படம் ரொம்ப புடிக்கும்.

கார் ஓட்டுற காட்சி ஒன்னை படமாக்குறப்போ, நான் வேகமா ஓட்டுவேன், அதனால ஒன்ஸ்மோர் கேட்டுறாதீங்கன்னு சிம்பு சொன்னார். அந்த காட்சியை ஒரே டேக்ல படமாக்கினோம்.

இந்தப்படத்துல சிம்பு ஒரு காமன்மேனா நடிச்சிருக்காரு. அதனால அவருக்குன்னு புதுசா ஏதாவது பஞ்ச் டயலாக் எழுதுன்னா, இந்த கேரக்டர் இப்படி பேசுனா சரியா வருமான்னு பஞ்ச் பேச தயங்குவாரு, விண்ணை தாண்டி வருவாயா படத்துல கௌதம் மேனன் புது எஸ்டிஆரை காட்டிய மாதிரி நானும் இந்த மாநாடு படத்துல புது எஸ்டிஆரை காட்டணும்னு நினைச்சேன்..

சிம்பு-எஸ்ஜே சூர்யா இருவருக்குமான பேஸ் ஆப் தான் படமே. எஸ்ஜே சூர்யா கேரக்டர் பட்டி தொட்டியெல்லாம் படத்தை கொண்டுபோய் சேர்க்கும்.. ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் செகன்ட் யூனிட் டைரக்டர் மாதிரி வேலை பார்த்திருக்கார்.

ஒரு காட்சில கிட்டத்தட்ட நான்காயிரம் பேரை வச்சு மாநாடு மாதிரி ஒரு காட்சியை படமக்குனோம். இந்த காட்சியோட பிரமாண்டத்தை தியேட்டர் ஸ்கிரீன்ல பார்த்தா தான் நல்லா இருக்கும்.. சிம்புவே படத்தை பார்த்துட்டு படம் புரியுதுப்பா’ன்னு சொல்லிட்டாரு. அந்தவகையில் மாநாடு தியேட்டருக்கான படம்.” என்றார்.

Director Venkat Prabhu talks about upcoming film Maanaadu

More Articles
Follows