தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் ரிலீஸான மெர்சல் படம் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்திற்கு கிடைத்த எதிர்ப்பே இதற்கு பாப்புலாரிட்டியை கொடுத்தது.
வெளியான 3 நாட்களிலேயே படம் ரூ. 100 கோடியை கடந்துவிட்டதாகவும், தற்போது 200 கோடியை நெருங்கிவிட்டதாகவும் தகவல்கள் வந்தன.
படம் வெளியாகி 12 நாட்களை கடந்துள்ள நிலையில் தமிழக அளவில் மட்டும் ரூ. 100 கோடியை கடந்துவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த பிரபல தியேட்டர் அதிபர் ஒருவர் பேட்டியில் கூறும்போது…
மெர்சல் படம் ரூ. 200 கோடியை வசூலிக்கவில்லை. தியேட்டருக்கு மக்களை வரவழைக்கவே இது போன்ற யுக்திகளை கையாள்வது வழக்கம்.
இது எம்ஜிஆர் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது. நாங்கள் தியேட்டர் வசூலை சொன்னால் மட்டுமே வசூலின் உண்மையான நிலவரம் தெரியும்” என கூறியுள்ளார்.
Mersal movie not collected Rs 200 crores in box office