தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான படம் மெர்சல்.
இப்படம் வெளியான அக். 18ஆம் தேதி சென்னையில் மட்டும் ரூ 1.5 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தற்போது மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் மொத்தம் 4 .20 கோடியை அள்ளியுள்ளது.
அதே நேரத்தில் சென்னையில் 2 மால்களில் எந்த படத்தையும் திரையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல் நாளில் மட்டும் சுமார் 32.5 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாகவும்,
இரண்டாவது நாளில் 40 கோடியை தொட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இதுவரை மூன்று நாள்களில் தமிழகளவில் ரூ. 53 கோடியை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் உலகளவில் ரூ. 85 கோடியை நெருங்கிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
தற்போது மெர்சல் படத்தை பாஜ கட்சி எதிர்த்து வருவதால், படத்தில் அப்படி என்னதான்? இருக்கிறது என்ற ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்து வருவதால், இன்னும் இதன் வசூல் எகிறும் எனத் தெரிகிறது.
இந்த வார முடிவில் ரூ. 100 கோடி வசூலை மெர்சல் தொட்டுவிடும் என உறுதியாக நம்பலாம்.
உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் 3 நாட்களில் 100 கோடியை எட்டிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
Mersal movie box office collection