தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் கடந்த அக்டோபர் 18ஆம் தீபாவளியன்று ரிலீஸ் ஆனது.
ரசிகர்களின் பேராதரவுடன் படம் பல மடங்கு வசூல் செய்துள்ளதாக வந்த செய்திகளை பார்த்தோம்.
தற்போது 50 நாட்களை நெருங்கும் வேளையில், பிரபல நடிகர் எஸ்வி. சேகர் தன் சமீபத்திய பேட்டியில் மெர்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 60 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் என கூறியுள்ளார்.
ஆனால் இதற்கு பதிலளிக்கும் வகையில் மற்றொரு தயாரிப்பாளரான தனஞ்செயன் அவர்கள் கூறியுள்ளதாவது…
தயாரிப்பாளர் படம் நஷ்டம் என எதுவும் கூறவில்லை. விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்கும் லாபம் கிடைத்துள்ளது அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் அடைய வாய்ப்பில்லை.
மொத்த வசூல் எவ்வளவு என்பதை தயாரிப்பு நிறுவனம் விரைவில் விளக்கும் என எதிர்பார்க்கிறேன்” என அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.