சூப்பர் ஸ்டாருடன் நடிக்க ஆசைப்படும் ‘மாஸ்டர்’ ஹீரோயின்

சூப்பர் ஸ்டாருடன் நடிக்க ஆசைப்படும் ‘மாஸ்டர்’ ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் ரஜினியுடன் ‘பேட்ட’ மற்றும் விஜய்யுடன் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர், மகேஷ் பாபு – மாளவிகா போட்டோக்களை வைத்து இந்த ஜோடி காம்பினேஷனை பார்க்க யாரெல்லாம் ஆசைப்படுறீங்க?? என கேட்டு இருந்தார்.

அதற்கு முதல் ஆளாக *நான்* என்று பதிலளித்து இருக்கிறார் மாளவிகா மோகனன்.

Master girl wants to act with super star

mahesh babu

தியாகராஜனின் ‘அந்தகன்’..; பிரசாந்த் – சிம்ரன் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை

தியாகராஜனின் ‘அந்தகன்’..; பிரசாந்த் – சிம்ரன் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2018ல் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அந்தாதுன்’.

ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடித்திருந்தனர்.

சூப்பர் ஹிட்டான இப்படம் 3 தேசிய விருதுகளைப் வென்றது.

மலையாளத்தில் இந்த படம் ரீமேக் செய்யப்படுகிறது.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இப்படத்தை இயக்க பிருத்விராஜ் நாயகனாக நடிக்கிறார். ராதிகா ஆப்தே கேரக்டரில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.

தெலுங்கு ரீமேக்கில் நிதின், தமன்னா நடிக்கின்றனர்.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கியுள்ள நிலையில் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் இப்பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

‘அந்தகன்’ என்று இப்படத்திற்கு தமிழில் தலைப்பு வைத்துள்ளனர்.

டாப் ஸ்டார் பிரசாந்த் ஜோடியாக சிம்ரன் நடிக்க, முக்கிய கேரக்டரில் கார்த்திக் நடிக்கிறார்.

இசையமைப்பாளர் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குனர் ஜெ.ஜெ.பெஃட்ரிக் இயக்கவிருந்த நிலையில் இப்படத்திலிருந்து விலகிவிட்டார்.

தற்போது ‘அந்தகன்’ படத்தை பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கவிருக்கிறார்.

தற்போது மேலும் ஒரு நாயகியாக பிரியா ஆனந்த் இணைந்திருக்கிறார்.

இவர் ராதிகா ஆப்தே நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

பிரசாந்த் & பிரியா ஆனந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

படத்தில் பணிபுரியவுள்ள மற்ற கலைஞர்கள் விவரம் இதோ…

பிரசாந்த்
சிம்ரன்
கார்த்திக்
பிரியா ஆனந்த்
யோகி பாபு
ஊர்வசி
கே.எஸ்.ரவிக்குமார்
மனோபாலா
வனிதா விஜயகுமார்
லீனா சாம்சன்
செம்மலர்
பூவையார்

மற்றும் பலர்

ஒளிப்பதிவு

ரவியாதவ் DFT

கலை: செந்தில் ராகவன்

உடைகள்
உத்ரா மேனன்

பத்திரிக்கை தொடர்பு
நிகில் முருகன்

Top kollywood actress joins Andhagan

Priya Anand in Andhagan

தேடப்படும் குற்றவாளி பெண் தாதா எழிலரசி காரைக்காலில் வேட்பு மனு..; மடக்கி பிடித்த போலீசார்

தேடப்படும் குற்றவாளி பெண் தாதா எழிலரசி காரைக்காலில் வேட்பு மனு..; மடக்கி பிடித்த போலீசார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தில் பிரபல சாராய வியாபாரி ராமு.

இவர் வினோதா என்ற பெண்ணை முதலில் திருமணம் செய்திருந்தார்.

அதன் பின் வினோதா இருக்கும் போதே எழிலரசி என்ற பெண்ணையும் 2வது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

ஒரு கட்டத்தில் சொத்து பிரச்சினை காரணமாக கடந்த 2013ல் நீதிமன்றத்திற்கு எழிலரசியோடு ராமு சென்ற போது, அங்கு வந்த கூலிப்படையினர் எழிலரசி கண்முன்னே ராமுவை வெட்டி கொலை செய்தனர்.

முதல் மனைவி வினோதா ஏவுதலின் பேரில் இந்த படுகொலை நடந்தது..

ஆனால் எழிலரசி படுகாயத்துடன் உயிர்பிழைத்தார்.

இதன் பின்னர் கணவர் கொலைக்குப் பழிக்குப் பழியாக ஐயப்பன், வினோதா மற்றும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான வி.எம்.சி.சிவகுமார் உள்ளிட்ட 3 பேரை கொலை செய்தார் எழிலரசி.

கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் என எழிலரசி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே எழிலரசி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் .

பாஜக புதுச்சேரி மாநில தலைவர் சுவாமிநாதனை எழிலரசி சந்தித்து அந்த கட்சியில் இணைந்ததாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் சில தகவல்களும் புகைப்படங்களும் வெளியானது.

ஆனால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எழிலரசி காரைக்கால் மாவட்டத்திலுள்ள நிரவி -திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நிரவி -திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட எழிலரசி காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்தத் தகவலறிந்த போலீஸார் எழிலரசி சென்ற காரை நாகூர் அருகே மடக்கி எழிலரசியை கைது செய்தனர்.

Lady don arrested in Karaikal

‘தேன்’ படம் பார்க்க ஏஜிஎஸ் தியேட்டர்கள் வழங்கும் சூப்பர் தள்ளுபடி

‘தேன்’ படம் பார்க்க ஏஜிஎஸ் தியேட்டர்கள் வழங்கும் சூப்பர் தள்ளுபடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்களின் இரசனை அறிந்து அவர்களை மகிழ்ச்சியில் மெய் மறக்கச் செய்திடும் மெயின் ஸ்ட்ரீம் சினிமாக்களை தயாரிப்பதிலும், அதனை வெளியிடுவதிலும், மலிவான விலையில் சிறப்பான மற்றும் தரமான திரை அனுபவத்தை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன், அதி நவீன பாதுகாப்பு அம்சங்களோடு பார்வையாளர்களுக்கு என்றென்றும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது AGS சினிமாஸ்.

பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு குடும்பதத்தினரோடு வந்து திரைப்படங்களை காண்பதில் உள்ள சிரமங்களை கண்டுணர்ந்து, டிக்கெட் விலையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறோம்.

மேலும் தின்பண்டங்களின் விலையில் 50% தள்ளுபடியையும் வழங்கி அவர்களின் சினிமா அனுபவத்தினை சிறப்பானதாகவும், சிக்கனமானதாகவும் அமையச் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது AGS சினிமாஸ்…

ஒரு நல்ல திரைப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும், அதனை சரியான தருணத்தில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும்பட்சத்தில்.

அந்த வகையில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில், பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருந்துகளை வென்று, வரும் மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும், AP Productions தயாரித்த ‘தேன்’ எனும் திரைப்படத்தினை ரூ.100/-சலுகை விலையில் பார்வையாளர்களுக்கு வழங்கி, இத்திரைப்படத்தினை பெருவாரியான மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் பங்கு கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறது AGS சினிமாஸ்..

எதார்த்த மனிதர்களின் வாழ்வியலை, அழகியலோடு திரையில் கண்டு மகிழ்ந்திட … வாருங்கள் சினிமாவை கொண்டாடுவோம்…

AGS Cinemas makes great quality cinema experience affordable

சூர்யா 40 பட பற்றி சூப்பர் அப்டேட் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

சூர்யா 40 பட பற்றி சூப்பர் அப்டேட் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.

இப்படம் தற்காலிகமாக ‘சூர்யா 40’ என அழைக்கப்பட்டு வருகிறது.

பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்க சத்யராஜ் முக்கியக் கேரக்டரில் நடிக்கிறார்.

கிராமப்புற கதையை மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்குகின்றனர்.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இதில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘ஆதவன்’ படத்தில் சூர்யாவுடன் நடித்திருந்தார் வடிவேலு.

தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணையும் படம் இதுவாக அமைய வாய்ப்புள்ளது. ஆனால் வடிவேலு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது சூட்டிங் தொடங்கியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Suriya 40 kick starts today

விஜய் சூர்யா பற்றி அந்த மாதிரி பேச திருநங்கை தான் காரணம்..; மன்னிப்பு கேட்கும் மீரா மிதுன்

விஜய் சூர்யா பற்றி அந்த மாதிரி பேச திருநங்கை தான் காரணம்..; மன்னிப்பு கேட்கும் மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் & அவரது மனைவி சங்கீதா.. சூர்யா & அவரது மனைவி நடிகை ஜோதிகா பற்றி மிக கேவலமாக பேசி வீடியோக்களை வெளியிட்டவர் நடிகை மீரா மிதுன்

இதனால் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் மீராவை கடுமையாக சாடினர்.

மீராவுக்கு பாரதிராஜாவும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன் நான் தற்கொலை செய்ய போகிறேன் என கண்ணீர் மல்க ஒரு வீடியோ வெளியிட்டார்.

மேலும் தன்னை கொலை செய்ய 8 பேர் துரத்துவதாக கூறியிருந்தார்.

இப்போது புதிய வீடியோவில் ”விஜய், சூர்யாவைப் பற்றி பேசியது தவறு.

அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் அப்படி பேச அதிமுக பிரமுகர் அப்சரா ரெட்டி என்ற ஒரு திருநங்கைதான் காரணம்” என அதில் தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.

My Apologies to Vijay and Suriya says Meera Mithun

More Articles
Follows