‘மாமனிதன்’ 10M சாதனை.; ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்ற ‘ஆஹா’ ஓடிடி

‘மாமனிதன்’ 10M சாதனை.; ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்ற ‘ஆஹா’ ஓடிடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ வெளியாகி, குறுகிய காலகட்டத்திற்குள் பத்து மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்திருக்கிறது.

இந்த நிலையில் ‘மாமனிதன்’ படத்தில் எளிய மனிதர்களின் பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனத்தில் தரமான கல்வியைப் பெறவேண்டும் என்பது மையமாக இடம்பெற்றிருக்கும்.

இதனை ஆஹா டிஜிட்டல் குழுமமும் மனமுவந்து முன்மொழிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய ஐந்து மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் கல்வி கற்பதற்காக, ஓராண்டு கல்விக்கட்டணத்தை நன்கொடையாக வழங்குகிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வழங்கியிருக்கிறார்.

ஆடி மாதம் என்றாலே தமிழ் மக்களுக்கு தள்ளுபடி என்றதொரு விஷ்யமும் உடன் நினைவுக்கு வரும்.

தமிழகத்தின் நுகர்வோர் கலாச்சாரத்தில் இணைந்து விட்ட இந்த ஆடி தள்ளுபடி திட்டத்தை, ஆஹா டிஜிட்டல் தளமும் வழங்குகிறது.

மூன்று மாத சந்தா தொகையான 149 ரூபாய்க்கு பதிலாக, ஆடி மாதத்தில் ரூ 99/- மட்டும் செலுத்தி, கட்டணச் சலுகையைப் பெறலாம். அனைத்து வகையான ஆஹா ஒரிஜினல்ஸ் மற்றும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் திரைப்படங்களையும், நிகழ்ச்சிகளையும், வலைதளத் தொடர்களையும் கண்டு ரசிக்கலாம். இந்த அரிய வாய்ப்பை புதிய சந்தாதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாமனிதன்’, நம் மண்ணின் வாழும் எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியல் பதிவு என்பதும், இதனை இயக்குநர் சீனு ராமசாமி, தனக்கே உரிய பாணியில் இயக்கி, ரசிகர்களை உணர்ச்சிவசப்பட செய்திருக்கிறார் என்பதும் உண்மை.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகியுள்ளது அதனை கண்டு மகிழலாம்.

மேலும் ஆஹா டிஜ்ட்டல் தளத்தில் ‘இரை’, ஆகாஷ்வாணி’, ‘அம்முச்சி 2’,‘குத்துக்கு பத்து’,‘ஆன்யா‘ஸ் டுடோரியல்’ஆகிய வலைத்தளத் தொடர்களுடன், விரைவில் ‘ஈமோஜி’ எனும் புதிய வலைத்தளத் தொடரும் வெளியாகிறது.

‘பயணிகள் கவனிக்கவும்’, ‘போத்தனூர் தபால் நிலையம்’ போன்ற ஆஹா ஒரிஜினல்ஸ் படைப்புகளும், சபாபதி, செல்ஃபி, ரைட்டர், மன்மத லீலை, ‘ஐங்கரன்’, ‘கூகுள் குட்டப்பா’, ‘கதிர்’, ‘மாமனிதன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களும் ஆஹாவில் வெளியாகியிருக்கிறது.

Maamanithan team provides free education to poor students

தமிழகத்தில் அதிகபட்ச வரி செலுத்திய நடிகர் ரஜினிக்கு ஆளுநர் தமிழிசை விருது

தமிழகத்தில் அதிகபட்ச வரி செலுத்திய நடிகர் ரஜினிக்கு ஆளுநர் தமிழிசை விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் என்று சொன்னால் அது மிகையல்ல.

இவரது நடிப்பில் 168 வது படமாக ‘ஜெயிலர்’ என்ற படம் உருவாகி உள்ளது.

நெல்சன் இயக்கவுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார்.

ஆகஸ்ட் முதல் வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

ஜெயிலர் படத்திற்காக ரூ.130 கோடிக்கு மேல் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் விளங்குகிறார்.

இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது ஒன்று வழங்கப்பட்டு உள்ளது.

வருமான வரி தினமான இன்று, வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு விருது வழங்கப்பட்டது.

இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாத காரணத்தால் அவருக்கு பதிலாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இந்த விருதினை பெற்றுக் கொண்டார்

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த விருதை வழங்கினார்.

அனைவரும் கண்டிப்பாக அரசுக்கு வரி செலுத்த வேண்டும். வரி செலுத்தாவிட்டால் நாம் இருப்பதையும் இழந்துவிடுவோம் என ஆளுநர் தமிழிசை விழாவில் பேசினார்.

1990களிலேயே தமிழ்நாட்டில் அதிகபட்ச வரி செலுத்தும் நடிகர் நான்தான் என்று ஒரு முறை பேட்டி அளித்து இருந்தார் ரஜினிகாந்த். அப்போது ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சர் ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த வீடியோவை பதிவிட்டு அன்றும் இன்றும் ரஜினிகாந்த் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

soundarya rajinikanth

Rajinikanth awarded as highest tax payer of Tamilnadu

தேசிய விருதுக்கு முன்பே தமிழில் பாடகி நஞ்சம்மாவுக்கு வாய்ப்பளித்த ‘சீன் நம்பர் 62’

தேசிய விருதுக்கு முன்பே தமிழில் பாடகி நஞ்சம்மாவுக்கு வாய்ப்பளித்த ‘சீன் நம்பர் 62’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ப்ருத்திவிராஜ் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘ஐயப்பனும் கோஷியும்’.

இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்ய பலத்த போட்டி எழுந்தது என்பது நாம் அறிந்து ஒன்றுதான்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாடிய பாடகி ‘நஞ்சம்மா’ என்பவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

அய்யப்பனும் கோஷியும் என்ற படத்திற்காக ‘தெய்வ மகளே’ என்ற பாடலை பாட படக்குழுவினர் நஞ்சம்மாவை அணுகியுள்ளனர்.

அப்போது தான்.. “ஆடு மேய்க்கும்போது பாடும் ‘களக்காத்த சந்தனம்’ பாடலை படக்குழுவிற்கு பாடிக் காட்டியுள்ளார்.

அப்பாடலை கேட்ட பிருத்விராஜ் மற்றும் இயக்குனர் சச்சிதானந்தன் ஆகியோருக்கு இந்த பாடலே பிடித்துள்ளது. எனவே படத்திலும் அந்த பாடல் இடம்பெற்றது.

தற்போது… தான் ஆடு மேய்க்கும் போது பாடிய பாடல்தான் (‘களக்காத்த சந்தனம்’) சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை நஞ்சம்மாவுக்கு பெற்று தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமா உலகில் பிரபலமாகி வரும் நஞ்சமா தற்போது முதல் முறையாக தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.

கதிரவன் நாயகனாக நடிக்கும் ‘சீன் நம்பர் 62’ என்ற படத்தில் ஒரு அருமையான பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் சில மாதங்களுக்கு முன்பே இணையதளங்களில் வெளியாகி வைரலானது.

ஆடம் சமர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜி கே வி இசையமைத்து வருகிறார். விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்ய ஈஸ்வரமூர்த்தி எடிட்டிங் செய்து வருகிறார்.

இந்தப் படத்தை நிகில் ராமச்சந்திரன் மற்றும் வேணு ராம் ஆகிய இருவரும் தயாரித்து வருகின்றனர்.

இந்த படம் விரைவில் இந்தாண்டுக்குள் வெளியாக உள்ளது.

Nanjamma gets movie chance before she gets national award

ஜெய் – அதுல்யா இணைந்த ‘எண்ணித்துணிக’ இசை விழா சுவாரஸ்யங்கள்

ஜெய் – அதுல்யா இணைந்த ‘எண்ணித்துணிக’ இசை விழா சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக”.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

எடிட்டர் சாபு ஜோசப் கூறியதாவது..

“ இந்த படத்திற்கு சாம் சிஸ் முக்கியமான அம்சமாக இருக்கிறார் மிக நல்ல இசையை தந்துள்ளார். இந்த படத்தில் எங்களுக்கு சவாலாக இருந்தது திரைக்கதைக்கு ஏற்றவாறு படத்தை எடிட் செய்வது தான். படத்தில் நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படம் வெற்றியடைய வாழ்த்துகள்.“

ஒளிப்பதிவாளர் ஜே பி தினேஷ் குமார் கூறியதாவது..

“இயக்குநர் வெற்றியின் கடின உழைப்பே இந்த படம் இப்படி உருவாவதற்கு காரணம். அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை.“

இசையமைப்பாளர் சாம் சி எஸ் கூறியதாவது..

இந்த படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். இந்த படம் பார்ப்பவரை சீட் நுனிக்கு கூட்டிவரும். நான் மகிழ்ச்சியுடன் இந்த படம் செய்துள்ளேன். இந்த படம் எனக்கு பெரிய அனுபவமாக இருந்தது. இந்த படம் வெற்றி பெற வேண்டும் என பலர் நினைக்கின்றனர்.

ஜெய் மற்றும் அதுல்யா இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்தில் இரண்டு காதல் பாடல்கள் இருக்கிறது. பாடல்வரிகள் சிறப்பாக வந்துள்ளது.

நடிகை அதுல்யா கூறியதாவது..,

“இந்த படம் இயக்குநர் வெற்றி உடைய கடின உழைப்பால் ஆனது. நடிகர் ஜெய் உடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஜெய் கூறியதாவது..

“இந்த படத்தின் பெரிய பலம் இசை தான். இந்த படத்தில் முழுக்க முழுக்க அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளோம். இந்த படத்தின் பெரிய பலம் திரைக்கதை தான். இந்த படத்தில் எனக்கு அதிக ஸ்கோப் இருந்தது. இந்த படத்தில் எனது நல்ல நடிப்பிற்கு முழு காரணமும் இயக்குநர் தான். இயக்குநரின் அர்பணிப்பு எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. படம் பார்த்துவிட்டு நீங்கள் கூறுங்கள். நன்றி

இயக்குனர் வெற்றி செல்வன் கூறியதாவது..

“தமிழ்மொழிக்கு எனது முதல் நன்றியை கூறிகொள்கிறேன். இந்த படத்தை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியனுக்கு நன்றி. படத்தின் தலைப்பு தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் பொருந்தும். இசையமைப்பாளர் சாமுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் உடன் பணியாற்றியது சந்தோசம்.

எனது நண்பன் இந்த படத்தில் எடிட்டராக பணிபுரிந்தது மகிழ்ச்சி. அதுல்யா பெரிய உழைப்பை தந்துள்ளார். நடிகர் ஜெய் இந்த படத்திற்கு பெரிய உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்தார். படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி“

நடிகர் மாரிமுத்து கூறியதாவது..

“இந்த படத்தில் நான் ஜெய் உடைய அப்பாவாக நடித்திருக்கிறேன். இந்த படம் ஒரு பாசிடிவ் அதிர்வலையை தரும். ஒளிப்பதிவாளர் தினேஷ் இந்த படத்திற்காக கடினமான அர்பணிப்பை கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறோம். “

பாடலசிரியர் கார்த்திக் நேத்தா கூறியதாவது..

“ பெரிய போராட்டங்களை கடந்து இந்த படம் உருவாகியுள்ளது. படத்தில் எல்லா பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் எனக்கு இரண்டு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் சாம் சி எஸ்- க்கு எனது நன்றிகள். தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. “

ஜாக்குவார் தங்கம் கூறியதாவது..

“ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் ஜெய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நிச்சயமாக இந்த படம் மிகபெரிய வெற்றிப்படமாக அமையும். ஜெய்யும் நாயகியயும் உண்மையிலேயே காதலித்து வாழ்ந்துள்ளார்கள். பார்க்க அழகாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குனர் ஆர் வி உதயகுமார் கூறியதாவது..

“உள்ளடக்கம் சிறப்பாக உள்ள படங்களை உலகம் முழுவதும் ரசிப்பார்கள். இந்த படத்திற்காக எவ்வளவு போராடினார்கள் என எனக்கு தெரியும். படத்தில் ஜெய் பிரமாதமாக நடித்துள்ளார். இது ஒரு நேர்த்தியான திரைப்படம். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். “

மிர்ச்சி சிவா கூறியதாவது…

இயக்குநர் என்னை தொடர்ந்து அழைத்து இந்த விழாவிற்கு வரவழைத்தார். தீபாவளிக்கு போன் செய்தால் பொங்கலுக்கு போன் எடுப்பார் ஜெய். போனை அவ்வாறு தான் பயன்படுத்துவார். ஜெய் மிகவும் அர்பணிப்பான நடிகர். ஜெய் மிகபெரிய உயரத்தை அடைவார் அவருக்கு எனது வாழ்த்துகள் . இயக்குநர் கடின உழைப்பாளி என அனைவரும் கூறினர். அவருக்கு எனது வாழ்த்துகள்.

இயக்குனர் வசந்த் கூறியதாவது…

“நன்றியுணர்வு அதிகம் இருப்பவர் இயக்குனர் வெற்றி, அவர் மிகப்பெரிய வெற்றியடைவார். வெற்றியின் இந்த படத்திற்கு, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒளிப்பதிவாளர் தினேஷ் மிகச்சிறந்த கேமராமேன், அவருடைய லைட்டிங், காம்போசிசன் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும். ஆடை வடிவமைப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என அனைவரும் சிறந்த உழைப்பினை கொடுத்துள்ளனர்.

முதல் பட இயக்குனர் இயக்கும் போல் இந்த படம் இல்லை. இதை படமாக்கிய விதம் அற்புதமாக இருக்கிறது. இந்த மேடையில் இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.”

தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் கூறியதாவது..

இயக்குனர் வெற்றியை பார்த்த போதிலிருந்தே அவர் திறமை மிக்கவர் என எனக்கு தெரியும். இந்த படத்திற்கு ஜெய்யும், அதுல்யாவும் கொடுத்த பங்களிப்பு மிகப்பெரியது. அதற்கு நன்றியை கூறிகொள்கிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்கு பெரிய பலம். கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

க்ரிகெஸ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன் பேசியதாவது…

இப்படம் மிக அற்புதமாக வந்துள்ளது. வெற்றி மிக நல்ல ஒரு படத்தை தந்துள்ளார். இப்படத்தில் நானும் இணைந்தது மகிழ்ச்சி. தமிழகத்தில் பெரிய எண்ணிகையிலான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இத்திரைப்படத்தில் மேலும் அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்பிரமணியன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சாம் CS இசையமைத்துள்ளார், J.B. தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மற்றும் V.J. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Jai Athulya starrer Yenni thuniga audio launch highlights

EXCLUSIVE – நிம்மதி இல்லாத சூப்பர் ஸ்டார் ரஜினி.; சூப்பர் ஐடியா கொடுக்கும் மக்கள்

EXCLUSIVE – நிம்மதி இல்லாத சூப்பர் ஸ்டார் ரஜினி.; சூப்பர் ஐடியா கொடுக்கும் மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஜூலை 22.. சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.

அப்போது தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.

அவர் பேசியதாவது…

“இந்த யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை.

நான் நடித்த படங்களில் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ராகவேந்திரா, பாபா படங்கள்தான்.

எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம், என் ரசிகர்கள் இருவர் சன்னியாசியாக மாறி விட்டனர். ஆனால் நான் இன்னும் நடிகனாகவே இருக்கிறேன்.

என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன்.

ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை” என நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

இதனையடுத்து ரஜினிக்கு ஐடியா கொடுக்கும் வகையில் நெட்டிசன்கள் சில கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் ரஜினிகாந்த் நிம்மதியாக இருப்பார். அவருக்கு என்ன கவலை? இன்னும் பத்து தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பலர் கணக்கு போடும் கொண்ட சூழ்நிலையில் எனக்கு 10% கூட நிம்மதி இல்லை என்ற ரஜினிகாந்த் கூறியிருப்பதால் சிலர் அதற்கு சூப்பர் டிப்ஸ் கொடுத்து வருகின்றனர்.

தலைவா.. நீங்கள் ‘சிவாஜி’ படத்தில் நடித்த போது.. ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை நீங்கள் செய்து காட்டினீர்கள்..

அதுபோல நிஜத்தில் உங்கள் பெயரில் அறக்கட்டளைகள் ஏற்படுத்தலாம்.. ஏழை மாணவர்களுக்கு உயர்தர கல்வி கொடுக்கலாம்.. வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கொடுக்கலாம்..

வறட்சியான கிராமங்களை வளர்ச்சி மிக்க கிராமங்களாக மாற்றி அமைக்கலாம்… நாட்டின் உயிரான விவசாயத்திற்கு உதவி செய்யலாம்..

தரமான மருத்துவம் கிடைக்க உதவி செய்யலாம்… இதன் மூலம் கோடிக்கணக்கான தமிழக மக்கள் பயனடைவார்கள்..

உங்களை வாழவைத்த… வாழ வைத்துக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாம்.. தமிழகமும் வளம் பெறும். மக்கள் உங்களை மனதார வாழ்த்துவார்கள்..

நீங்கள் அரசியலுக்கு வராவிட்டாலும் இதை செய்து காட்டினால் உங்களது ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.. இதன் மூலம் உங்களுக்கு சந்தோஷம் நிம்மதி புண்ணியம் எல்லாம் கிடைக்கும்.

நீங்கள் சொன்ன சித்தர்களை விட பல மடங்கு நிம்மதி உங்களுக்கு கிடைக்கும்.. ‘பாபா’ படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சித்தர்கள் உங்களை வாழ்த்துவது நிஜத்தில் நிறைவேறும்.”

இவ்வாறு பல சூப்பர் டிப்ஸ்களை சூப்பர் ஸ்டாருக்கு வழங்கி வருகிறார்கள் நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

Super idea to super ranjikanth by his fans

https://www.youtube.com/shorts/hNELMehNg-A

காணாமல் போன 10000 குழந்தைகள்.; ‘ஜோதி’ சொல்லும் அதிர்ச்சியான உண்மை தகவல்

காணாமல் போன 10000 குழந்தைகள்.; ‘ஜோதி’ சொல்லும் அதிர்ச்சியான உண்மை தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ‘ஜோதி’.

மிகப்பெரிய சஸ்பென்ஸ் திர்லர்ரோடு சேர்ந்து அமைந்திருப்பது தான் இந்த படத்தின் தனிச்சிறப்பு.

இந்த ஜோதி திரைப்படத்தை “டிக் டாக்” பிரபலமான ஜி . பி முத்து அவர்கள் பார்த்துவிட்டு படத்தையும், படக்குழுவினர்களையும் வெகுவாக பாராட்டினார்.

மேலும் படத்தில் சில இடங்களில் சஸ்பென்ஸ் இருக்கின்றது. என்றும் அது இதுதான் என்று நம் கணிக்கையில் அது இல்ல அப்படின்னு நம் கவனத்தை வேறு மாதிரி திசை திருப்புகின்றது.

இந்த படம் என்று ஜோதி படத்தின் திரைக்கதையை வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் 11 ஆயிரம் குழந்தைகளை கடத்தி இருக்கிறார்கள். அதில் இன்றைக்கு வரைக்கும் 10800 குழந்தைகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்றும் அதிர்ச்சியான ஒன்றும் தான்.

மேலும் இன்றைக்கு நம் நாட்டிற்கு இது தேவையான கதை தான் குழந்தைகளை கடத்திவிற்கும் கும்பல் இன்று அதிகமாக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த படம் நம் நாட்டுக்கு நிச்சயமாக தேவையான படம் தான் என்றும் கூறினார் ஜி பி முத்து.

படத்தைப் பார்த்த ஜி.பி. முத்துவிடம் நடிகர் வெற்றியும், நடிகை ஷீலாவும், தயாரிப்பாளர் ராஜா சேதுபதியும் கலந்துரையாடிய கலகலப்பான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

Tik Tok star GPMuthu In full praises mode for jothi

More Articles
Follows