தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சாருஹாசனின் மிரட்டல் நடிப்பில் உருவாகியுள்ள படம் தாதா 87.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் சிநேகன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது தமிழக அரசை கடுமையாக சாடினார். எதுக்காக இந்த அரசாங்கம் உள்ளது? என அனல் பறக்க பேசினார்.
காவிரி நீருக்காக பல வருடங்களாக தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மழை வெள்ளதால் அணைகள் நிரம்பி காவிரி நீர் வந்துவிட்டது.
ஆனால் இங்கே நீரை சேமிக்க வழியில்லை. எல்லாம் வீணாக கடலில் போய் சேர்கிறது.
நீரை சேமிக்க முடியாதவர்கள் எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும். எதுக்குடா? நீங்க இருக்கீங்க என்றார்.
அவர் மேலும் பேசும்போது…
தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் வாழட்டும். ஆனால் தமிழன்தான் இந்த தமிழகத்தை ஆள வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
அங்கேதான் அவருடைய கருத்துக்கள் முரண்பாடாக உள்ளது.
தற்போது தமிழகத்தை ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் தமிழர்கள் தானே. அவர்கள் ஆளும் தமிழகம் எப்படியுள்ளது?
தமிழக அரசை குறை சொல்லும் சிநேகனுக்கு அவர்கள் (ஈபிஎஸ், ஓபிஎஸ்) இருவரும் தமிழர்கள் என்பது தெரியாதா?
தமிழர்கள் ஆளும் தற்போதைய தமிழகத்தின் நிலை அவருக்கு தெரியாதா?
ஐயா சிநேகன் அவர்களே. இதற்கு உங்கள் பதில் என்னவோ..?
Lyricist Snehan angry attack speech on TN Govt in DhaDha 87 audio launch