EXCLUSIVE ‘ஹரா’ படத்தில் ரஜினி – விஜய் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர்

EXCLUSIVE ‘ஹரா’ படத்தில் ரஜினி – விஜய் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தாதா 87’ & ‘பவுடர்’ பட இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.

‘பவுடர்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹரா’.

இந்த படத்தில் மோகன் மற்றும் குஷ்பு ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவை மற்றும் ஊட்டியில் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான பேச்சுவார்த்தையை இயக்குனர் விஜய்ஸ்ரீ தொடங்கி விட்டதாகவும் தகவல் வந்துள்ளன.

எனவே விரைவில் இது பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

ஜாக்கி ஷராப் ஏற்கனவே ‘கோச்சடையான்’ ‘பிகில்’ ‘ஆரண்ய காண்டம்’, ‘மாயவன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jackie Shroff

பாரதிராஜா டிஸ்சார்ஜ்.; வீட்டில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் முக. ஸ்டாலின்

பாரதிராஜா டிஸ்சார்ஜ்.; வீட்டில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் முக. ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாரதிராஜா-விற்கு உடல்நிலை குறைவு காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டார் பாரதிராஜா.

அப்போது…

வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.

எனத் தெரிவித்து இருந்தார் பாரதிராஜா.

இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

அண்மையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தபோது தொலைபேசியில் நலம் விசாரித்து இருந்தார்.

70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி எலிசபெத் மரணம்.; ‘மருதநாயகம்’ கமல் இரங்கல்

70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி எலிசபெத் மரணம்.; ‘மருதநாயகம்’ கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரிட்டிஷ் அரசாட்சியில் 70 ஆண்டுகள் மேலாக ராணியாக அரியணையில் ஆட்சி செய்தவர் ராணி எலிசபெத்.

இவர் 96 வயதை நிறைவு செய்தவர். அவர் நேற்று காலமானார்.

உலகமே அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தன் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது..

“இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன்.

ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

‘மருதநாயகம்’ கதையை மாத்தனும் இல்லனா நடிகனை மாத்தனும்.. – கமல்

அநேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது.

தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்…

இங்கிலாந்து ராணி எலிசபெத் 1997 ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது சென்னை தரமணி எம்ஜிஆர் திரைப்பட நகரில் நடந்த கமலஹாசன் கதாநாயகனாக நடிக்க “மருதநாயகம்” படத்தின் திரைப்பட தொடக்க விழாவில் கலந்துகொண்டு கமல்ஹாசனை வாழ்த்தினார்.

Marudhanayagam

மீண்டும் இணைந்தது ‘ராஜ வம்சம்’.; கதையின் நாயகன் ஆனார் யோகி பாபு

மீண்டும் இணைந்தது ‘ராஜ வம்சம்’.; கதையின் நாயகன் ஆனார் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பதித்து பல்வேறு மக்களின் மனதில் இடம் பிடித்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சமீப காலங்களில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ஒரு கதாநாயகனாகவும், தன் திறமையை நிரூபித்துக் கொண்டு, தன் நடிப்பாற்றலினால் மக்களின் உள்ளத்தை தன் வசமாக்கியுள்ளார்.

தற்பொழுது அவரது நடிப்பில் கே வி கதிர்வேலுவின் எழுத்து மற்றும் இயக்கத்தில், பிரபல நடன பள்ளியான ராக் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாக இருக்கும் பெயர் சூட்டப்படாத ப்ரொடக்ஷன் நம்பர் ஒன் என்னும் திரைப்படத்தின் பூஜை, சென்னையில் நடைபெற்றது.

யோகி பாபு

இயக்குனர் கே வி கதிர்வேலு இதற்கு முன்பாக சசிகுமார் நிக்கி கல்ராணி யோகிபாபு நடிப்பில் வெளிவந்த ‘ராஜ வம்சம்’ என்னும் திரைப்படத்தை இயக்கியவர்.

இந்த விழாவில் நடிகர் சென்ராயன், நடிகர் சௌந்தர்ராஜா, நடிகர் சாம்ஸ், நடிகை நிரோஷா, மற்றும் இயக்குனர் சுராஜ் போன்ற திரை பிரபலங்களும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்தினை படக்குழுவினருக்கு வெளிப்படுத்தினர்.

Yogi Babus next directed by K V Kathirvelu
commences shoot with pooja

யோகி பாபு

The star cast will soon be officially announced.

*Technical Crew*

Writer- Director- K V Kathirvelu
DOP- Prasanna Kumar
Editor- Lawrence kishor
Music- Sam CS
Art Director- Gururaj
Dance Choreography- Sandy
Stunts- Dhilip Subbarayan
PRO- Riaz K Ahmed

3டி தொழில்நுட்பத்தில் ‘சூர்யா 42’ படம்.; எதிர்பார்ப்பை எகிறச் செய்த மோஷன் போஸ்டர்.!

3டி தொழில்நுட்பத்தில் ‘சூர்யா 42’ படம்.; எதிர்பார்ப்பை எகிறச் செய்த மோஷன் போஸ்டர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அண்ணாத்த’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடிப்பதாக முன்பே அறிவித்து விட்டார்.

ஆனால் இயக்குனர் சிவாவின் அடுத்த படம் என்ன ? என்பது குறித்து தகவல் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது.

அண்மையில் தான் சூர்யாவின் 42 படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார் என்பதையும் தெரிவித்தனர்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இப்பட அறிவிப்பு வெளியானது முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவானது.

இதற்கு முக்கிய காரணம் இந்த படம் பான் இந்திய படமாக 10 மொழிகளில் உருவாகுகிறது என்பதே முக்கிய காரணம்.

இந்த நிலையில் சூர்யா 42வது பட மோஷன் போஸ்டர் இன்று 09-09-2022 வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் 3டி டெக்னாலஜியில் இப்படம் உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சரித்திர கதைக்களம் கொண்ட இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமரத்தார் ஆகிய கேரக்டர்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மிகப்பெரிய தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளதாக தெரிகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

‘Surya 42’ movie in 3D technology.; A motion poster that raised expectations

https://youtu.be/SPKfzhJBmzA

‘புஷ்பா பார்ட் 2’ படத்தில் சாய்பல்லவி.; அட செம கேரக்டரா இருக்குதே.!

‘புஷ்பா பார்ட் 2’ படத்தில் சாய்பல்லவி.; அட செம கேரக்டரா இருக்குதே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ‘புஷ்பா‘.

இந்த படத்தின் முதல் பாகம் 2021 டிசம்பர் மாதத்தில் வெளியானது. இதன் கிளைமாக்ஸில் அல்லு அர்ஜுன் மற்றும் பஹத்பாசில் மோதல் ஆரம்பமானது.

எனவே இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியது.

இந்த நிலையில் புஷ்பா படத்தின்
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இயக்குனர் சுகுமார் இயக்கிவரும் இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 2ம் பாகத்தில் பழங்குடி பெண் கேரக்டரில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாய்பல்லவியின் கண்களை பின் தொடர்ந்தேன்.; இறுதியில் சம்மட்டி அடி.. – சக்திவேலன்

முதல் பாகத்தில் ஆண்ட்ரியா குரலுக்கு சமந்தா ஆடிய ‘ஓ சொல்றியா மாமா…’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

எனவே இரண்டாம் பாகத்திலும் ஒரு அதிரடியான ஐட்டம் சாங் ஒன்றை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Actress Sai Pallavi is part of Pushpa 2

More Articles
Follows