ஓர் இரவில் நான்கு கதைகள்.; ‘பவுடர்’ பூசிய முகங்களை தோலுரிக்கும் விஜய்ஸ்ரீ ஜி

ஓர் இரவில் நான்கு கதைகள்.; ‘பவுடர்’ பூசிய முகங்களை தோலுரிக்கும் விஜய்ஸ்ரீ ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல வெற்றிப்படங்களில் நடித்து தேசிய விருது பெற்று நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த சாருஹாசனை ‘தாதா 87’ திரைப்படம் மூலம் மீண்டும் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தியவரும், பல வெள்ளி விழா படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்ற நடிகர் மோகனை ரீஎன்ட்ரீ கொடுத்து ‘ஹரா’ படத்தை இயக்கி வருபவர் விஜய்ஸ்ரீ ஜி.

இவர் கடந்த 26 வருடங்களாக மக்கள் தொடர்பாளராக கேமராவிற்கு பின் இருந்த நிகில் முருகனை கேமராவிற்கு முன் ‘பவுடர்’ படம் மூலம் கதை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.

இந்த மூன்று படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் தன்னையும் கதையையும் நம்பி மட்டுமே இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி துணிச்சலான முயற்சிகளில் ஈடுபடுவது ஆகும்.

படத்தை பற்றி விஜய்ஸ்ரீ ஜி கூறுகையில்…

“அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரும்போது ஒரு முகமூடி அணிந்து கொண்டு தான் வருகிறார்கள். அதை தான் பவுடர் குறிக்கிறது.

ஒருவரின் தோற்றத்தை வைத்து தப்பாக கணிக்கக்கூடாது. பவுடர் போடுவதில் நிஜ முகங்கள் தொலைகிறது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்…

“ஓர் இரவில் நடக்கும் இந்த கதை நமது வாழ்க்கையில் தினம்தோறும் நாம் கடந்து சென்ற நினைவுகளை ஞாபகப்படுத்தும். அதே போல ஒரு உயர் அதிகாரி தனக்கு கீழே பணிபுரிபவர்களை சரிசமமாக கருத வேண்டும் என்கிற கருத்தையும் பதிவு செய்யும்,” என்று கூறினார்.

மேக்கப் மேனாக பணிபுரியும் ஒரு சராசரி குடும்ப தலைவர் கதாபாத்திரத்தில் விஜய்ஸ்ரீ ஜி நடித்துள்ளார். பரட்டை என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

பாசமிகு தந்தை மற்றும் மகளுக்கு இடையே நடக்கும் கதைப்பகுதிகளில் வையாபுரி மற்றும் அனித்ரா நாயர் நடிக்கின்றனர்.

உயர் அதிகாரிகளால் அவமதிக்க படும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நிகில் முருகன் வருகிறார்.

அரசியல்வாதிகளால் வாழ்வாதாரங்களை இழக்கும் இளைஞர்களும் கதை மாந்தர்களாக தோன்றுகின்றனர்.

இவர்கள் நால்வரும் ஒரு நேர் கோட்டில் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் என்ன ஆகிறது, என்ன தீர்வு கிடைக்கிறது என்பதை சுவாரசியமாக சொல்லும் படம் தான் பவுடர்.

மேற்கண்ட விஷயங்கள் முதல் பாகமாக உருவாகியுள்ளது. இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும். ‘பவுடர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 1 (நாளை) பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

Vijay Sri G launches Nikil Murukan as protagonist in Powder

Director Vijay Sri G, who re-launched National Award winning actor Chaaru Haasan who took a break from acting after being part of many successful movies, as the protagonist with the film ‘Dhadha 87’, is directing ‘Haraa’ with actor Mohan, who has acted in many silver jubilee films and occupied a place in the hearts of the people.

ஜனாதிபதியிடம் தேசிய விருதைப் பெற்ற சூர்யா ஜோதிகா ஜிவி.பிரகாஷ் அபர்ணா

ஜனாதிபதியிடம் தேசிய விருதைப் பெற்ற சூர்யா ஜோதிகா ஜிவி.பிரகாஷ் அபர்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

68-வது தேசிய விருது 2020-ஆம் ஆண்டிற்கான பட்டியல் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதற்கான விருது வழங்கும் விழா இன்று செப்டம்பர் 30 டெல்லியில் நடைபெற்றது.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார்.

சூரரைப்போற்று

இதில்… ‘சூரரைப்போற்று’ படத்திற்கு 5 விருதுகளும், வசந்த் இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்திற்கு 3 விருதுகளும், யோகிபாபு நாயகனாக நடித்த ‘மண்டேலா’ திரைப்படத்திற்கு 2 விருதுகளும் வழங்கப்பட்டது.

நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் நாயகி அபர்ணா, இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோருக்கு தேசிய விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

தன் கணவரும் நடிகருமான சூர்யா முதன்முறையாக தேசிய விருது பெற்றதை மனைவி ஜோதிகா தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளளார். இது தொடர்பான போட்டோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

சூரரைப்போற்று

Soorarai Pottru team received 5 National award today at Delhi

https://youtube.com/shorts/IlC5adc8pOs?feature=share

World End Inn நாடகத்தில் வீட்டு பணிப்பெண்ணாக ஸ்ருதிஹாசன்

World End Inn நாடகத்தில் வீட்டு பணிப்பெண்ணாக ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சர்வதேச அளவில் பிரபலமாகியிருக்கும் ஆடியோ நாடகமான ‘தி சான்ட்மேன்: ஆக்ட்’எனும் தொடரின் மூன்றாம் பாகத்தில் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார்.

கிராபிக் நாவல்களையும் ஆடியோ நாடகங்களையும் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டிசி நிறுவனம், பிரத்யேகமாக ஆடியோ வடிவில் தயாரித்து வெளியிடும் நாடகங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

அதிலும் குறிப்பாக ‘தி சான்ட்மேன்: ஆக்ட்’ எனும் பெயரிலான ஆடியோ நாடகத்திற்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் ‘தி சான்ட்மேன்: ஆக்ட்’ எனும் ஆடியோ நாடகத்தின் மூன்றாம் பாகத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், வேர்ல்ட்ஸ் எண்ட் இன் (World End Inn) ல் ஒரு வீட்டு பணிப்பெண்ணாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்.

இது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில்…

”இசை கலைஞராக தொடரும் என்னுடைய பயணத்தில் ‘தி சான்ட்மேன்: ஆக்ட்’ போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகி இருக்கிறது.

இந்த ஆடியோ நாடகத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நீல் கியாமனின் மிகப்பெரிய ரசிகை நான். நீல் கியாமன் எழுதிய தி சான்ட்மேன் எனும் ஆடியோ நாடகத் தொடரில் ஒரு சிறிய பகுதியாக என்னுடைய பங்களிப்பை வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதன் தயாரிப்பாளர்கள் இந்த தொடரை வெவ்வேறு தளங்களில் பிரபலப்படுத்தி இருக்கிறார்கள். ” என்றார்.

நடிகை ஸ்ருதிஹாசன் இதற்கு முன்னதாக ‘ட்ரெட் ஸ்டோன்’ மற்றும் ‘ஃப்ரோசன் 2’ ஆகிய ஹாலிவுட் தொலை காட்சி தொடர்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக தற்போது ஹாலிவுட்டில் தயாராகி இருக்கும் ஆடியோ நாடக படைப்பில் இணைந்திருக்கிறார்.

இவருடன் இந்த தொடரில் ஹாலிவுட் பிரபலங்களான ஜேம்ஸ் மெக்அவோய், கேட் இன்னிங்ஸ், மிரியம் மார்க்கோய்ல்ஸ் மற்றும் ஜஸ்டின் விவியன் பாண்ட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

தி சான்ட்மேன்: ஆக்ட்டின் இரண்டாம் பாகத்தின் இடைநிறுத்தம் செய்யப்பட்ட இடத்திலிருந்து, அதன் இணை நிர்வாக தயாரிப்பாளரான டிர்க் மாக்ஸால் மீண்டும் இந்த தி சான்ட்மேன்: ஆக்ட்டின் மூன்றாம் பாகத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த தி சான்ட்மேன்: ஆக்ட் மூன்றாம் பாக ஆடியோ நாடகத்தின் பின்னால் நீல் கியாமன் ஒத்துழைப்பு அளித்ததுடன், இதன் இணை நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றிருக்கிறார்.

இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சலார்’ படத்தில் பிரபாசுடனும், நடிகர் பாலமுரளி கிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் ‘என் பி கே 107’ எனும் படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘சிரு 154’ எனும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shruti Haasan part of DC’s Sandman: Act lll audio drama series

Actress-singer Shruti Haasan has added another feather to her cap as she lends her voice to the international audio drama ‘Sandman: Act lll’. This comes just days after Shruti released her english single ‘She is A Hero’ which was loved by audiences and critics alike for its strong messaging and music. The third instalment of the New York Times best-selling, multi part original audio drama series has been released exclusively on Audible by DC. Shruti plays the character of a Landlady at the worlds end inn in the series.

It has been a dream come true for Shruti, who has always mentioned in her interviews about how big a fan she is of the Sandman series and that she is a huge admirer of Neil Giaman. This is Shruti’s third international project after Treadstone and Frozen 2 and the series also stars James McAvoy,Kat Dennings,Miriam Margoyles and Justin Vivian Bond among others.

Commenting on the same, Shruti says “It feels great to be a small part of such an iconic series written by Neil Giaman. Sandman : Act lll, the makers has taken the series to another level. I have been a huge Neil Giaman fan since I was a teenager and being a part of a sandman audio franchise with such stellar cast is a dream come true for me.”

The Sandman: Act III picks up where The Sandman: Act II left off and is once again adapted and directed by co-executive producer Dirk Maggs. Act III is narrated by the man behind the graphic novels, Neil Gaiman, who also returns as creative director and co-executive producer.

On film front, Shruti will be seen in Prashanth Neel’s Salaar opposite Prabhas. Apart from Salaar, the actress is being busy shooting for NBK 107 opposite Nandamuri Balakrishna and Chiru 154 opposite Cheeranjeevi.

எல்லாமே ஒருவன்தான்.; இணையத்தை மிரட்டும் ‘சர்தார்’ கார்த்தி

எல்லாமே ஒருவன்தான்.; இணையத்தை மிரட்டும் ‘சர்தார்’ கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி வித்தியாசமான வயதான வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘சர்தார்’.

இவருடன் ராஷி கண்ணா, ஷங்கி பாண்டே, லைலா, முனீஷ்காந்த், முரளி சர்மா, இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர்.

பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தை இயக்க பிரின்ஸ் பிக்சர் பேனில் எஸ்.லக்‌ஷ்மன் தயாரித்துள்ளார்.

இப்பட திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ். இதன் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி பெற்றுள்ளது.

இந்த படம் 2022 தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், படத்தின் டீசர் வெளியானது.

இந்த டீசரில்..”இந்திய ராணுவ ரகசியங்களை உளவாளி ஒருவர் பார்க்கிறார். இதனையடுத்து பலவிதமான கெட் அப்புகளில் கார்த்தி தோன்றுகிறார்.

எல்லாமே ஒருவன்தான் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.

இந்த டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார்.

The striking Sardar Teaser goes viral

https://t.co/VWBq8OL7AA

@Karthi_Offl @Prince_Pictures @Udhaystalin @Psmithran @gvprakash @RaashiiKhanna_ @lakku76 @rajishavijayan @ChunkyThePanday @george_dop @AntonyLRuben @dhilipaction @SonyMusicSouth @kalaignartv_off @teamaimpr

‘நானே வருவேன்’ பட முதல் நாள் வசூலை அறிவித்து செல்வராகவனை நேரில் பாராட்டிய தாணு

‘நானே வருவேன்’ பட முதல் நாள் வசூலை அறிவித்து செல்வராகவனை நேரில் பாராட்டிய தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் இரு வேடங்களில் நடித்த ‘நானே வருவேன்’ நேற்று செப்டம்பர் 29 இல் வெளியானது.

செல்வராகவன் இயக்கி கௌரவ தோற்றத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார்.

யுவன் இசையமைத்திருந்த இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.

வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் 10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் செல்வராகவனை சந்தித்து மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

சினிமாவில் அறிமுகமாகும் கிரீட்டி.; ‘ஜூனியர்’ டைட்டில் லுக் ரிலீசானது

சினிமாவில் அறிமுகமாகும் கிரீட்டி.; ‘ஜூனியர்’ டைட்டில் லுக் ரிலீசானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளரும், அரசியல்வாதியும், தொழிலதிபருமான ஜனார்த்தன் ரெட்டியின் மகனான கிரீட்டி நடிகராக அறிமுகமாகிறார்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை அவர் நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

கன்னட திரையுலகில் நடிகர் கிரீட்டி புதுமுக நாயகனாக அறிமுகமாகிறார். இதற்கான தொடக்க விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னணி நட்சத்திர இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, ” கிரீட்டி நடிகராக அறிமுகமாவதற்கு தன்னுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியிருக்கிறார். அவர் கடினமாக உழைத்து பெரிய உயரத்தை எட்டுவார்” என பாராட்டினார்.

இவர் திரைத்துறையில் அறிமுகமாகும் போது பெயரிடப்படாத அந்தப் படத்தின் டீசர் வெளியாகி, கன்னட திரையுலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது அவர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப் படத்தை பற்றிய புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

கிரீட்டியின் திரையுலகப் பிரவேசம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றதைப் போல், அவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.

தற்போது படக் குழுவினர், அவரது பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 29ஆம் தேதி) படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிட்டு, அதன் டைட்டில் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் கிரீட்டியுடன் வி. ரவிச்சந்திரன், ஜெனிலியா, ரித்தேஷ் தேஷ் முக், ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

‘பாகுபலி’ படப் புகழ் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு, ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ரவீந்தர் கவனிக்க, மெய்சிலிர்க்கும் சண்டைக் காட்சிகளை முன்னணி சண்டை பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்ன் மேற்கொண்டிருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வாராஹி ‌ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கும் 15ஆவது திரைப்படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

நடிகர் க்ரீட்டி கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகும் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் தயாராகிறது. தமிழில் வெளியான க்ரீட்டி படத்தின் அறிமுக டீசரில் அவரே சொந்தக் குரலில் பேசியிருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விசயம்.

ஒட்டுமொத்த இந்திய திரை உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் கன்னட திரை உலகத்திலிருந்து புதுமுக நடிகர் கிரீட்டியின் அறிமுகம் அனைவரையும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.

Kireeti starer movie title & look released

More Articles
Follows