தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி – முருகதாஸ் – அனிருத் கூட்டணியில் வெளியான படம் தர்பார்.
இதில் நீண்ட நாட்களுக்னு பிறகு ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இப்பட ஒரு காட்சியில் மற்றொரு போலீஸ் இப்போ எல்லாம் ஜெயில் கைதி ஷாப்பிங் போகிறார்கள் என்பார்.
இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
மேலும் சசிகலா தரப்பு வழக்கறிஞரும் இந்த வசனத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், அந்த சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் என்று லைகா அறிவித்துள்ளது.
அதில்…. எங்களின் தர்பார் திரைப்படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல.
இருப்பினும் அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதுவாக தெரியவந்ததால், அது படத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக் கொள்கிறோம்’ இவ்வாறு லைகா நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Lyca removed Controversial Sasikala dialogues from Darbar
#DARBAR @rajinikanth @ARMurugadoss #Nayanthara @anirudhofficial @santoshsivan @sreekar_prasad #Santhanam @SunielVShetty #DarbarThiruvizha #DarbarRunningSuccessfully ?? pic.twitter.com/zj6Mcwsxu3
— Lyca Productions (@LycaProductions) January 10, 2020