தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’.
கடந்த ஆண்டு இப்பட படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்டது.
அப்போது நிறுத்தப்பட்ட, இப்பட படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு என பல பிரச்னைகளால் அதன்பின் சூட்டிங் தொடங்கப்படவில்லை.
அதன்பின் பிக்பாஸ் ஷோ, காலில் ஆப்ரேசன், அரசியல் கட்சி தேர்தல் பிரச்சாரம் என கமல் பிஸியாகிவிட்டார்.
இதனால் வெறுத்துப்போன டைரக்டர் ஷங்கர் தெலுங்கில் தில் ராஜு தயாரிக்க ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார்.
இதனையடுத்து பாலிவுட்டிலும் ஷங்கர் ஒரு படம் (அந்நியன் ரீமேக்) இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் புகார் அளித்துள்ளது.
அதில்… “இந்தியன் 2 படத்திற்காக போடப்பட்ட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இதுவரை 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டது.
இயக்குனர் ஷங்கருக்கு பேசப்பட்ட சம்பளமான 40 கோடி ரூபாயில் 14 கோடி ரூபாயை கொடுத்து விட்டோம்.
அவருக்கு கொடுக்க வேண்டிய மீதமுள்ள 26 கோடி ரூபாயையும் நீதிமன்றத்தில் இப்போதே கட்டிவிடுகிறோம்.
ஆனால் அவர் ‘இந்தியன் 2’படத்தை முடிக்கும் வரை மற்ற படங்களை இயக்க கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா கூறியதாவது…
“இயக்குனர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் அளிக்க முடியாது எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
இதுகுறித்து, இயக்குனர் ஷங்கர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Lyca case filed against director Shankar