படப்பிடிப்புக்கு குதிரையுடன் ரெடியான ஷங்கர்.; எந்த படம் தெரியுமா.?

படப்பிடிப்புக்கு குதிரையுடன் ரெடியான ஷங்கர்.; எந்த படம் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்திருந்தார்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘இந்தியன் 2’ குழு தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரண் வைத்து ‘RC15’ படத்தையும் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி,அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் ‘RC15’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளார்.

மேலும், இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குதிரை மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “என்னை மீண்டும் சேணத்தில் வைத்திருக்கும் பயணம் RC15 நோக்கி” என்று எழுதி இருந்தார்.

A journey that has me back to back in the saddle! Towards #RC15
https://t.co/spv0c18y9R

Director Shankar back on the sets of ‘RC15’

மாஸ்டர் நடிகரை இயக்கும் மிஷ்கின் ; முழு விவரம் இதோ!

மாஸ்டர் நடிகரை இயக்கும் மிஷ்கின் ; முழு விவரம் இதோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சேதுபதியை நடிக்க வைக்கும் தனது அடுத்த படத்தின் முன் தயாரிப்பு பணிகளை மிஷ்கின் மீண்டும் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் படத்தைப் பற்றி நாங்கள் முன்பே தெரிவித்திருந்தோம், இப்போது இந்த ஆண்டு மே முதல் வாரத்தில் தயாரிப்பாளர், இதர நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மையா மற்றும் பூர்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘பிசாசு 2’ படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Director Mysskin’s next film with Master actor

அஜீத் பட இயக்குனருடன் கை கோர்க்கும் அதிதி ஷங்கர்!

அஜீத் பட இயக்குனருடன் கை கோர்க்கும் அதிதி ஷங்கர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பில்லா’ புகழ் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க அதிதி ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகனும், முன்னணி ஹீரோ அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளி அறிமுகமாக உள்ளார். ‘மாஸ்டர்’ புகழ் தளபதி விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

ஆகாஷ் முரளி சேவியர் பிரிட்டோவின் மருமகன் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Aditi Shankar joins hands with Ajith film director

ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் வைரம் தங்க நகைகள் கொள்ளை.; எந்த வீட்டு லாக்கர்.? போலீசார் விசாரணை

ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் வைரம் தங்க நகைகள் கொள்ளை.; எந்த வீட்டு லாக்கர்.? போலீசார் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவர் 3 & வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கினார். தற்போது விக்ராந்த் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை.

சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டு லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் எனவும் புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Aishwarya Rajinikanth’s jewels stolen. case filed

‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு போட்டியாக களமிறங்கிய நயன்தாரா

‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு போட்டியாக களமிறங்கிய நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பாக படங்களை தயாரித்தும் வெளியீட்டும் வருகின்றனர்.

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

இந்த படத்தை தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக இவர்கள் தயாரித்து இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது ரவுடி பிக்சர்ஸ் சார்பாக குஜராத் மொழியில் ‛சுப் யாத்ரா’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளனர்.

இதில் மல்ஹார் தாக்கூர், மோனல் கஜார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தேசிய விருது பெற்ற மனிஷ் சயினி என்பவர் இயக்கியுள்ளார்.

வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மோனல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுப் யாத்ரா என்ற இந்த படத்தை ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார் நயன்தாரா.

இதே நாளில் தான் மணிரத்னம் இயக்கிய பான் இந்தியா படமான ‘பொன்னியின் செல்வன் 2’ திரையரங்குகளில் வெளியாகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

.@VigneshShivN and #Nayanthara’s @Rowdy_Pictures debuts in #Gujarati Cinema with #ShubhYatra starring @MalharThakar & @Gajjarmonal directed by national award winner #ManishSaini, The film is slated to release on April 28th Worldwide!🤩

#GujaratiMovie #HituKanodia
#AdityaGadhvi https://t.co/fBXzM8BkOg

Nayanthara’s shubh yatra to clash with ponniyin selvan 2

ரஜினி – அஜித் வழியில் சசிகுமார்.; இயக்குநருக்கு தங்க சங்கிலி பரிசளித்தார்

ரஜினி – அஜித் வழியில் சசிகுமார்.; இயக்குநருக்கு தங்க சங்கிலி பரிசளித்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்.. இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு பரிசு வழங்குவார்.

மிகப்பெரிய வெற்றி பெற்றால் அந்த தயாரிப்பாளர் நடிகருக்கோ அல்லது இயக்குனருக்கோ அல்லது இருவருக்குமே தங்க சங்கிலி கார் அல்லது விலையுயர்ந்த பொருட்களை பரிசாக வழங்குவார்.

கடந்தாண்டு ‘விக்ரம்’ படம் வெற்றி பெற்ற போது தயாரிப்பாளர் கமல் தன் இயக்குனருக்கு கார் பரிசு அளித்தார்.

இது போன்ற பலவற்றை நாம் பார்த்து வந்திருக்கிறோம்.

இந்த நிலையில் தான் நடித்த படம் வெற்றி பெற்றதற்கு ஒரு நடிகர் பட தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் தங்க சங்கிலி பரிசளித்துள்ளார். அவர்தான் நாயகன் சசிகுமார்.

சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களின் பாராட்டை பெற்ற படம் ‘அயோத்தி’. மந்திர மூர்த்தி இயக்கிய இந்த படத்தை ரவீந்திரன் தயாரித்திருந்தார்.

2021ல் வெளியான ‘அண்ணாத்த’ படம் வெற்றி பெற்றதற்கு அந்த படத்தின் இயக்குனர் சிவாவுக்கு ரஜினிகாந்த் விலை உயர்ந்த பொருளை பரிசளித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதுபோல 10 – 15 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த ‘வாலி’ ‘முகவரி’ உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்ற போது அஜித் தன்னுடைய இயக்குனருக்கு கார் மற்றும் பைக்குகளை பரிசளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sasi Kumar gifted gold chain to ayothi director

More Articles
Follows