‘கேம் சேஞ்சரை முடித்துவிட்டு இந்தியனை கவனிக்கும் ஷங்கர்

‘கேம் சேஞ்சரை முடித்துவிட்டு இந்தியனை கவனிக்கும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில், கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’, ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படங்களை இயக்கி வருகிறார்.

இந்தியன் 2 படப்பிடிப்புக்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்த அவர், கடந்த மாதம் இந்தியாவுக்கு திரும்பி
வந்தார்.

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் 23ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி,அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டர் பதிவில், ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் அட்டகாசமான க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், இன்று முதல் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Shankar’s ‘Game Changer’ movie climax scens wrapped up

JUST IN அஜித்தை வைத்து ட்ரெண்ட் செட் செய்தவர் வெங்கட் பிரபு.. – நடிகர் ராம்கி

JUST IN அஜித்தை வைத்து ட்ரெண்ட் செட் செய்தவர் வெங்கட் பிரபு.. – நடிகர் ராம்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள படம் ‘கஸ்டடி’.

இவர்களுடன் அரவிந்தசாமி, சரத்குமார், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு இளையராஜா – யுவன் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

இந்தப் படம் வரும் மே 12-ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் தற்போது லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராம்கி மேடையில் பேசும் போது…

‘கஸ்டடி’ படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. வெங்கட் பிரபு தன் படங்கள் மூலம் ட்ரெண்ட் செட் செய்வார்.

‘மங்காத்தா’ படத்தில் நடிகர் சால்ட் & பெப்பர் லுக்கில் அஜித்தை நடிக்க வைத்தார். இன்று நாங்கள் வெளியே வரும்போது சால்ட் அண்ட் பெப்பர் லக்கில் வெளியே வருவதற்கு அதுதான் காரணம்்

விரைவில் வெங்கட் பிரபு ஹிந்தியில் படம் செய்ய வேண்டும்.. செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசி முடித்தார் ராம்கி.

அதன்பின்னர் தொகுப்பாளினி விஜே அஞ்சனா.. சார் உங்க இளமையின் ரகசியம் சொல்லிட்டு போங்க சார் என்று கெஞ்சினார்.. ராம்கி சிரித்தபடியே சென்றார்.

Venkat Prabu set trend with Ajith says Ramki

JUST IN 65 பேர் தான் வந்துருங்கீங்க.; ‘கஸ்டடி’ ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அசிங்கப்படுத்திய ‘பிக்பாஸ்’ பிரபலம்

JUST IN 65 பேர் தான் வந்துருங்கீங்க.; ‘கஸ்டடி’ ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அசிங்கப்படுத்திய ‘பிக்பாஸ்’ பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள படம் ‘கஸ்டடி’.

இவர்களுடன் அரவிந்தசாமி, சரத்குமார், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு இளையராஜா – யுவன் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

இந்தப் படம் வரும் மே 12-ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் தற்போது லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பிக்பாஸ் புகழ் அபிஷேக் மற்றும் விஜி அஞ்சனா தொகுத்து வழங்கி வருகின்றனர்.

மாலை 6:00 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட இந்த நிகழ்ச்சி கூட்டமே வரவில்லை என்பதால் காலம் தாமதம் ஆகி 8 மணி அளவில் துவங்கியது.

அப்போது மேடையில் பேசிய அபிஷேக்..

“மொத்தமே 65 பேர் தான் வந்து இருக்கீங்க. கூட்டம் முக்கியமல்ல.. நிகழ்ச்சி தான் முக்கியம்.. ” என பேசிய படியே நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.

Empty chairs at Custody Pre Release event

த்ரிஷாவுக்கு நிச்சயிக்கப்பட்ட நபருடன் டேட்டிங் செய்யும் பிந்து மாதவி.?!

த்ரிஷாவுக்கு நிச்சயிக்கப்பட்ட நபருடன் டேட்டிங் செய்யும் பிந்து மாதவி.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் த்ரிஷா.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து இவர் தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி நடிகையாக உள்ளார்.

சினிமாவில் நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.

நடிகை த்ரிஷா கடந்த 2015-ம் ஆண்டு தொழிலதிபர் வருண் மணியன் என்பரை காதலித்து திருமணம் செய்துகொள்வதற்காக நிச்சயதார்த்தம் செய்தார்.

ஆனால் சில மாதங்களில் இருவரும் பிரிந்த நிலையில், நிச்சயதார்த்தம் முறிவு என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே த்ரிஷாவின் முன்னாள் காதலரான வருண் மணியனுடன் நடிகை பிந்து மாதவி டேட்டிங் செய்வதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பிந்து மாதவி தற்போது ‘நியூசென்ஸ்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது தொகுப்பாளர் நீங்கள் த்ரிஷாவின் முன்னாள் காதலர் வருண் மணியனுடன் டேட்டிங் சென்றீர்களா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பிந்து வருண் மணியனுடன் டேட்டிங் செய்தது உண்மைதான்.

த்ரிஷா அவரை விட்டு பிரிந்த பிறகு தான் நான் டேட்டிங் செய்தேன் என தெரிவித்தார்.

Bindu Madhavi confirms dating Trisha’s ex lover Varun Manian

அஜித் ரீல் மகள் அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.? என்னாச்சு.?

அஜித் ரீல் மகள் அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.? என்னாச்சு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் அனிகா.

இதனையடுத்து இவர் அஜித்தின் ரீல் மகள் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

தற்போது வளர்ந்த குமரியான பிறகு நிறைய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாக்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் ‘புட்ட பொம்மா’ என்ற மலையாளப் படம் வெளியானது. இது ‘கப்பேலா’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காகும். இப்படம் அனிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.

தற்போது ‘ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்தில் நாயகியாக நடித்துள்ளார் அனிகா.

இதில் அனிகா நடித்த முத்தக் காட்சி சர்ச்சை ஆனது. இதற்கு விளக்கமும் அளித்தார் அனிகா.

இந்த திலையில் நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் வைரலானது.

அந்த போஸ்டரில் ரத்தினம் மகள் செல்வி நந்தினி 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்று அச்சிடப்பட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் தற்போது உருவாகி வரும் புதிய படத்தின் போஸ்டர் என்றும் அதற்கான காட்சிகளை படமாக்கும் போது அந்த போட்டோ லீக்கானது எனவும் தகவல் வந்துள்ளது.

Ajith’s Reel Daughter Anika’s Tribute Poster.? what happened.?

+2 முடித்த போண்டா மணி மகள் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர்

+2 முடித்த போண்டா மணி மகள் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல காமெடி நடிகர் போண்டா மணி.

இவர் படப்பிடிப்பு ஒன்றின் போது, சாக்கடை நீரில் காட்சிக்காக விழுந்தார்.

அந்த நீர் நுரையீரலில் தங்கி அதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் போண்டா மணி தெரிவித்து இருந்தார்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, தனது சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்து கூறினர் என உருக்கமாக பேசி இருந்தார்.

மேலும் அவருக்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு, வாரம் இருமுறை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொண்டுள்ளார் நடிகர் போண்டா மணி.

பின்னர் அரசு உதவியும் & பல உதவிகளும் கிடைத்த பின்னர் சிகிச்சை பெற்று குணமாகி வந்தார்.

ஆனாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில் இவரது மகள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வானதை தொடர்ந்து, மேல் படிப்பு செலவு முழுவதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏற்றுக் கொண்டார்!

இந்த அவருடைய நிலையை முற்றிலும் அறிந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வான போண்டா மணியின் மகள் சாய் குமாரியின் மேல்படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டு, அவருடைய வேல்ஸ் கல்லூரியில் அவருக்கு பி.சி.ஏ படிக்க சீட் கொடுத்துள்ளார்.

இதற்கு நடிகர் போண்டா மணி தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.

Producer helps Bonda Mani daughter after completed +2

More Articles
Follows