தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ஆனந்தம்’, ’ரன்’ ’சண்டக்கோழி’ ’பையா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் லிங்குசாமி.
இவர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தனேனியை நாயகனாக வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு … ‘RAPO-19’ என்ற டைட்டிலோடு ஹைதராபாத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
போலீஸ் டிபார்ட்மெண்ட் பின்னணியில் இந்த படம் உருவாகிறது.
இந்த பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியானது.
இந்த படத்திற்கு ’தி வேரியர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ராம் பொத்னேனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ‘மிருகம்’ ஆதி பினிஷெட்டி இதில் முரட்டுத்தனமான வில்லனாக நடிக்கிறார்.
பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்னேனி முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளதாம்.
‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்’ பேனர் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி – பவன் குமார் இருவரும் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள்.
‘கிருத்தி ஷெட்டி’ தான் ஹீரோயினாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ‘அக்ஷரா கவுடா’ நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு பிளஸ் ஆக இருக்கும்.
இந்தாண்டு ஏப்ரல் மாதம் ‘தி வாரியர்’ படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ராம் பொத்தினேனி என்பது குறிப்பிடத்தக்கது.
Lingusamy released Ram Pothneni’s movie first look poster