டைரக்டர் என் லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு.; ஏன் தெரியுமா.?

டைரக்டர் என் லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் லிங்குசாமி தலைமையில், கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக கடந்த 2022ல் முதல் ஹைக்கூ கவிதை போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் வென்றவர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டதுடன் இதில் வென்ற 50 ஹைக்கூ கவிதைகளும் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

முதல் வருட துவக்க விழாவில் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி எம்.பி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை இரண்டாவது வருட நிகழ்வும் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி அவர்களை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து இயக்குனர் லிங்குசாமி கூறும்போது…

“கவிஞர் கனிமொழி கடந்த வருடம் துவங்கி வைத்த முதல் வருடத்திய ஹைக்கூ போட்டியில் வெற்றி பெற்ற ஹைக்கூ கவிதைகள் தொகுக்கப்பட்ட புத்தகத்தை அவரிடம் வழங்கினேன்.

இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக முதல் வருடம் நிறைவடைந்து உள்ளது என்கிற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு நன்றியையும் தெரிவித்தேன்.

மேலும் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதால் எனது வாழ்த்துக்களையும் கனிமொழி எம்.பியிடம் தெரிவித்தேன். இந்த சந்திப்பின்போது கவிஞர் அறிவுமதியும் உடன் இருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி” என்று கூறினார்.

Director Lingusamy met DMK MP Kanimozhi

உலகத்தின் பிரபலமான இடத்தில் பிரபாஸ் நடித்த ‘ஆதி புருஷ்’ முன்னோட்டம்

உலகத்தின் பிரபலமான இடத்தில் பிரபாஸ் நடித்த ‘ஆதி புருஷ்’ முன்னோட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஆதி புருஷ்

லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், பாடலாசிரியர் மனோஜ் முண்டாஷீர், இசையமைப்பாளர்கள் அஜய்- அதுல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டு, முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

ஆதி புருஷ்

சீதையை மீட்டெடுக்க ராமன், வானர சேனையுடன் அசாதாரணமான பயணத்தை மேற்கொள்வதையும், தீமையின் மீது நன்மையின் வீரம், சக்தி மற்றும் வெற்றியின் ஒரு பார்வையையும் முன்னிறுத்தும் இந்த முன்னோட்டம், இம்மாதம் பதினாறாம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.

‘ஆதி புருஷ்’ படத்தினைக் காண்பதற்கான ஆவலை பார்வையாளர்களிடத்தில் மேலும் தூண்டி இருக்கிறது.

ஆதி புருஷ்

இந்த முன்னோட்ட வெளியீட்டு விழாவில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் கரவொலி மற்றும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வாசகத்தின் குரலொலி, விண்ணை பிளந்தது. இவ்விழாவின் போது நடைபெற்ற வானவேடிக்கை, ரசிகர்களின் கொண்டாட்ட உணர்வை பிரதிபலித்தது.

இந்நிகழ்வு, வரலாற்றில் பொன்னான அத்தியாயத்தை உண்டாக்கியது. குறிப்பாக இளைஞர்களின் உற்சாகத்தை உத்வேகப்படுத்தியது.

ஆதி புருஷ்

மேலும் ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகரான பிரபாஸை, ராமனாக திரையில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

‘ஆதி புருஷ்’ திரை

ப்படம், காவிய கதை என்பதாலும், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நட்சத்திர கலைஞர்களின் கூட்டு முயற்சி, பரவசமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்பதனை உறுதிப்படுத்துகிறது.

ஆதி புருஷ்

மேலும் இந்த திரைப்

படம், பார்வையாளர்களின் இதயங்களிலும், மனதிலும் அழியாத அடையாளத்தை உண்டாக்கும்.

ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தை டி சீரிஸ் பூஷன் குமார் & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர், யுவி கிரியேஷன்ஸின் பிரமோத் மற்றும் வம்சி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் ஜூன் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஆதி புருஷ்

Adipurush Final Trailer unveiled at Tirupati in one of the grandest manner ever

நாடகத்திற்கும் படப்பிடிப்பு : இராஜேந்திர சோழனாக ஆச்சர்யப்படுத்தும் ஆதேஷ்பாலா.; ஆர் யூ ரெடி.?

நாடகத்திற்கும் படப்பிடிப்பு : இராஜேந்திர சோழனாக ஆச்சர்யப்படுத்தும் ஆதேஷ்பாலா.; ஆர் யூ ரெடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து அதன் ஆதரவுடன்
மாபெரும் மேடை நாடகமாக வருகிறது மன்னர் ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு.

சென்னை யோகஸ்ரம் டிரஸ்டியின் சார்பாக அதன் நிறுவனர் டாக்டர் ஏ பி வைத்தீஸ்வரன் புதிதாக துவங்கி உள்ள நாடக தயாரிப்பு நிறுவனம் தான் சென்னை ட்ராமாஸ், இதில் முதல் படைப்பாக வருகிறது மும்முடி சோழன் வரலாற்று நாடகம்.

“உன்னோடு கா’ திரைப்பட இயக்குனர் தஞ்சை RK இந்த வரலாற்று நாடகத்தை மேடையில் ஒரு சினிமாவை காட்ட வேண்டும் என்ற முயற்சியில் நாடக ஆக்கம் மற்றும் வசனம் எழுதி உள்ளார்.

நாம் கேட்ட வரை இதன் கதை என்பது, மன்னராக பதவியில் தொடங்கி அரசியல், ஆன்மிகம், தற்சார்பு முறை என தலைமுறைகள் வாழ, பாதை வகுத்து தந்த இராஜராஜன் தன் வாழ்விலே எப்படி சிவனடியாராக நிலை கொண்டார், என்பதை மிக பிரமாண்ட முறையில் அதிக பொருட் செலவில் மேடையில் அரங்கேற்றப்படும் நாடகம் தான் இந்த மும்முடி சோழன்.

ஆதேஷ் பாலா

இதை பற்றி நடிகர் ஆதேஷ் பாலா நம்மிடம் சொல்லும் போது..

“சமூக நாடகம் சினிமாவில் நடிப்பதை விட இந்த வரலாற்று நாடகத்தில் நடிப்பது மாபெரும் சவால் என கூறினார்.

இதில் தான் நடிக்கும் முக்கிய கதாபாத்திரமான இராஜேந்திர சோழன் மக்களின் மனதை விட்டு நீங்காத வரலாற்று மன்னன். அப்படி ஒரு கதாபாத்திரம் தான் ஏற்று நடிப்பதில் தனக்கு பெருமை என உணர்வு பொங்க பேசினார்.

மேலும் நாடகத்தின் முன்னோட்டமாக எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் இராஜேந்திர சோழன் குதிரையில் வரும் சிறப்பு காட்சிக்காக குதிரை ஏற்றம், வாள் பயிற்சியை முறையாக கற்று நடிப்பதாக மகிழ்வுடன் கூறினார்.

இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர் அவர்களின் பார்வையில் இந்த நாடகம் தொடர்பாக இதன் கலைஞர்களை அழைத்து பாராட்டியது கூடுதல் சிறப்பு என நாடக குழுவினர்கள் மகிழ்ந்தனர்.

இந்த நாடகத்தில் வரும் சிறப்பு பாடலை திரைப்பட இசையமைப்பாளர்
தாஜ்நூர் இசை அமைத்துள்ளார்.

நாமும் ஜூன் 10 வரும் சனி கிழமை இராஜாஅண்ணாமலை மன்றத்தில் மாலை 6 மணிக்கு இந்த நாடகத்தை கண்டு மகிழ்வோம், தமிழனின் நாடக கலை வளர்ச்சி கண்டு பெருமை கொள்வோம்.

நடிகர்கள்

இராஜ ராஜசோழன் – ‘முத்துக்குமார்’

பஞ்சவன் மாதேவி – ‘சுஜாதா பாபு’

கருவூரார் சித்தர் – ‘ஏ. பி. வைத்தீஸ்வரன்’

குந்தவை நாச்சியார் – ‘ரேவதி’

இராஜேந்திர சோழன் – ஆதேஷ் பாலா

முதன்மை அமைச்சர் – விவேக்சின்ராசு
சேனாதிபதி – மு.அருண் குமார்
மந்திரி – தினேஷ்
ரவிதாசன் – சிங்கராஜா
பரமேஸ்வரன் – கணேசன்
சோமன் – ரமனன்
பாஸ்கர ரவி வர்மன் – பிரபாகரன்
மேலை சாளுக்கிய மன்னன் – விஜயகுரு

ஆதேஷ் பாலா

Aadesh Bala starring First time shoot for stage play

ஏவிஎம் ஹெரிடேஜ் : நினைவுப்பாதையில் ரஜினியை அழைத்து சென்ற நிறுவனம்

ஏவிஎம் ஹெரிடேஜ் : நினைவுப்பாதையில் ரஜினியை அழைத்து சென்ற நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் கமல்ஹாசன், திமுக எம்பி டி.ஆர் பாலு, தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மூத்த நடிகர் சிவகுமார் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த மியூசியம் ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்களாலும் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் உள்ளிட்ட பல பெருமை வாய்ந்த படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவற்றையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது.

ரஜினி

1983ல் தமிழில் வெளியான பாயும் புலி என்கிற படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஓட்டிய சுசுகி RV 90, சிவப்பு நிற பழமை வாய்ந்த MG TB கார் மற்றும் 2007ல் வெளியான ‘சிவாஜி ; தி பாஸ்’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமான சிவாஜி சிலை என இவையெல்லாம் இந்த மியூசியத்தில் உள்ள கவனம் ஈர்க்கும் விஷயங்களாகும்.

நேற்று (ஜூன் 7 ) புதன்கிழமை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மியூசியத்துக்கு வருகை தந்ததுடன், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் – எம்எஸ் குகன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருடன் இணைந்து மியூசியத்தை சுற்றிப் பார்த்தார்..

ரஜினி

Rajinikanth gets nostalgic at the AVM Heritage Museum

டயலாக்கை மறந்துட்டோம்னா பாட்டிகளே கட் சொல்லிடுவாங்க.; பயத்தில் பசுபதி

டயலாக்கை மறந்துட்டோம்னா பாட்டிகளே கட் சொல்லிடுவாங்க.; பயத்தில் பசுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் சங்கையா இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘தண்டட்டி’. பசுபதி ரோகினி விவேக் பிரசன்னா அம்மு அபிராமி நடித்துள்ள இந்த படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் பசுபதி பேசும்போது…

“சார்பட்டா பரம்பரை முடிந்ததும் இந்த கதை கேட்டேன். கேட்கும்போதே க்யூட் ஆக இருந்தது. எனக்கு எப்போதுமே எனது பாட்டியின் தண்டட்டி மீது ஒரு காதல் இருந்தது. சிறுவயதில் அவர்கள் அணிந்திருந்த தண்டட்டியை சுட்டு விடலாம் என பல நாட்கள் முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அவர் மறைவுக்கு பின் தான் கிடைத்தது. இந்த ஒன்றரை மாத படப்பிடிப்பு நாட்களில் பாட்டிகளின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. இந்த ஜேனரில் இவ்வளவு எளிதாக சமீபத்தில் யாரும் கதை சொன்னது இல்லை.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது. நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். ரோகிணியும் நானும் அதிக காட்சிகளில் நடித்திருந்தாலும் எங்கள் இருவருக்கும் பேசிக் கொள்ளும்படியான வசனம் எதுவும் இல்லை.

விவேக் பிரசன்னாவை படப்பிடிப்பு சமயத்தில் என்னை போன்ற கலரில் பார்த்தபோது நம்பவே முடியவில்லை. இந்த படத்தில் தீபா முக்கியமான வேலை பார்த்துள்ளார்.

படப்பிடிப்பில் என்ன ஒரு ஹைலைட் என்றால் நாம் டயலாக்கை மறந்து விட்டுவிட்டோம் என்றால் உடனே இந்த பாட்டிகளே யாரையும் எதிர்பார்க்காமல் கட் சொல்லிடுவாங்க. அவர்களுக்கு பயந்து கொண்டு வசனங்களை சரியாக பேசி நடிக்க வேண்டி இருந்தது.

மகேஷ் முத்துசாமி தூங்குகிறாரா, சாப்பிடுகிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. எந்நேரமும் வேலை என்று இருப்பவர். இதற்குமுன் அவருடன் பணிபுரிந்திருந்தாலும் இதுபோன்று அவரை நான் பார்த்தது இல்லை.

பாடலாசிரியர் ஏகாதசியுடன் அந்த சமயத்தில் பணிபுரிய முடியாமல் போய்விட்டால் கூட இப்போது ஒன்றாக இணைந்து பணியாற்றி விட்டேன். நல்ல படத்திற்கான எல்லா தகுதியும் இந்த படத்திற்கு இருக்கு” என்று கூறினார்.

இந்த நிகழ்விற்கு படத்தில் நடித்த அனைத்து ‘தண்டட்டி’ அப்பத்தாக்களும் வருகை தந்திருந்தனர். விழா நிகழ்வின் இறுதியில் இந்த படத்தின் டிரைலரை பசுபதி வெளியிட பாட்டிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெற்றுக்கொண்டனர்.

குழுக்கல் முறையில் பாட்டிகளின் பெயர் எழுதப்பட்டு அதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ஒன்றரை பவுன் தண்டட்டி பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல அனைத்து பாட்டிகளுக்குமே விலை உயர்ந்த பரிசுகளும் தயாரிப்பாளரால் வழங்கப்பட்டது.

Thandatti grand ma troll our unit says Pasupathy

குடிகாரன்னா தாடி வச்சிருக்கனுமா.? இயக்குநரை மனம் மாற்றி நடித்த விவேக் பிரசன்னா

குடிகாரன்னா தாடி வச்சிருக்கனுமா.? இயக்குநரை மனம் மாற்றி நடித்த விவேக் பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் சங்கையா இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘தண்டட்டி’. பசுபதி, ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி நடித்துள்ள இந்த படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது…

“தங்கமான மனிதர்கள் சேர்ந்து தங்கத்தை பற்றி சொல்லி இருக்கும் படம் இது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இது எனக்கு வது படம். பசுபதியும் ரோகினியும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்றதுமே உடனே இந்த படத்தின் நடிக்க சம்மதித்து விட்டேன்.

இதுவரை நான் பண்ணாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு மோசமான குடிகாரன் கதாபாத்திரம் எனக்கு.. இதற்காக தாடி வளர்க்க வேண்டும் என என்னிடம் கூறினார் இயக்குநர் ராம் சங்கையா. ஆனால் நான் அப்போது கிளீன் ஷேவ் செய்திருந்தேன்.

ஆனாலும் இயக்குநரிடம் குடிகாரன் என்றால் தாடி வைத்து தான் இருக்க வேண்டுமா, எங்கள் ஊரில் கிளீன் ஷேவ் செய்த ஒரு நபர் தினசரி காலையிலேயே குடிக்க வந்து விடுவார் என்று கூறி அவரை கன்வின்ஸ் செய்து இந்த கதாபாத்திரத்தை அவரிடம் இருந்து பிடுங்கி நடித்தேன்” என கூறினார்.

Any fixed get up for Drinkers says Vivek Prasanna

More Articles
Follows